மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 10 மார்ச், 2011

ஜெ. மனசைக் கரைத்த ஒன்பது காரணங்கள்!

காங்கிரஸைச் சேர்த்தால் எதையும் பேச முடியாது!
'மெள்ள நெருங்கும்போது நீ தூரப் போகிறாய்... விட்டு
விலகும்போது நீ நெருங்கி வருகிறாய்...’ - இது காதலுக்காக எழுதப்பட்ட பாடல் வரியாக இருந்தாலும், இன்றைய சூழலில் அ.தி.மு.க-வுக்கும், காங்கிரஸுக்கும்கூட அப்ப​டியே அப்பட்டமாகப் பொருந்துகிறது!  கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உள்ளூர நடந்த பேரங்கள் படிந்து வராத காரணத்தால்  'மத்திய அரசுக்கு பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு' என்று கருணாநிதி 'மார்ச் 5' செக் வைக்க... இது ஜெயலலிதாவை அதிகம் ஆச்சர்யப்படுத்தவில்லை என்கிறார்கள்.  ஒரு வருடம் முன்பே எப்படியாவது காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள வேண்டும் என பல்​வேறு முயற்சிகளை செய்தார் ஜெயலலிதா. அப்போதே அவருக்கு முற்றாக 'நெகடிவ்' பதில் வந்ததாகச் சொல்ல முடியாது. அதைத் தொடர்ந்துதான், ஆ.ராசா கைது தாமதமான சமயத்தில், ''பதினெட்டு எம்.பி-களுக்கு நான் கியாரண்டி!'' என்று வலிய ஒரு சேனலைக் கூப்பிட்டுப் பதிவு செய்து வைத்தார். இதற்கிடையே, அ.தி.மு.க-வுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நினைத்த காங்கிரஸ், சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து மூன்று முக்கியஸ்தர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்​பியது. கடற்கரையோரம் உள்ள ஒரு நகரத்தில் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்​​டவர்கள், தமிழகம் முழுக்கச் சுற்றி அ.தி.மு.க-வைப்பற்றி அலசி ஆராய்ந்தனர். அவர்கள் கொடுத்த ரிப்போர்ட், 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வுக்குத்தான் செல்வாக்கு அதிகம். அதனால், நாம் தி.மு.க. சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டத் தேவை இல்லை. நாம் கேட்கும் ஸீட்களை அவர்கள் ஏற்காதபட்சத்தில், கூட்டணியில் இருந்து வெளிவந்து, அ.திமு.க-வோடு சேர்ந்துவிடலாம்!’ என்று இருந்ததாம்.
இத்தனைக்கும் நடுவே காங்கிரஸுடன் கூட்டணி போட்டால் எப்படி இருக்கும் என்று அண்மையில் அ.தி.மு.க. தரப்பிலிருந்து ஒரு சர்வே நடத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதுபற்றி அ.தி.மு.க. வட்டாரத்தில் விசாரித்தபோது, ''காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது  குறித்து தனியார் டிடெக்டிவ் ஏஜென்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் மக்களிடம்  சர்வே எடுக்கச் சொன்னார் அம்மா. பல தரப்பினர்கிட்டயும் எடுக்கப்பட்ட அந்த சர்வே முடிவு இப்போ அம்மா கையில்! அதில், 'காங்கிரஸுடன் அ.தி.மு.க. சேரவே கூடாது’ என்பதற்கு ஒன்பது காரணங்களைச் சொன்னார்கள்.
முதல் காரணம், ஈழத் தமிழர் பிரச்னை. காங்கிரஸ் அரசாங்கம் நினைச்சிருந்தா, இலங்கை அரசைக் கண்டிச்சு ஈழக் கொடுமைகளைத் தடுத்திருக்கலாம்.
அடுத்து, அம்மா அதிகமாகக் கையில் எடுத்துப் போராடிய தமிழக மீனவர் பிரச்னை. காங்கிரஸுடன் கூட்டு சேரும்பட்சத்தில், இதுவரை கொலை செய்யப்பட்ட 520 மீனவர்களைப்பற்றித் தேர்தல் நேரத்தில் பேசவே முடியாது.
மூன்றாவது, காவிரிப் பிரச்னை. காவிரி நதிநீர் ஆணையம் தீர்ப்பு வழங்கிய பிறகும்கூட தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை கர்நாடகா வழங்காமல் இழுத்தடிச்சுட்டே இருக்கு. இதைத் தீர்த்துவைக்க வேண்டிய காங்கிரஸ், கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.
நான்காவது... முல்லை பெரியாறு பிரச்னை. இது குறித்து மத்திய அரசோட செயல்பாடு மெத்தனமா இருக்கு.
ஐந்தாவது, பாலாற்றில் புதிய அணை கட்டுவது தொடர்பான சிக்கல்கள். ஆறாவது, விலைவாசி! வெங்​காயத்தில் ஆரம்பிச்சு ஒவ்வொரு பொருளோட விலையும் விண்ணை முட்டுது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எதுவுமே செய்யலை.
உலகத்தையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏழாவது பிரச்னை. அதில் காங்கிரஸ் தலைகளுக்கும் தொடர்புன்னு தகவல்கள் வெளியாகுது. அந்தக் கூட்டணிக்குள்ள போயிட்டா, அப்புறம் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் முழு உண்மைகளைப் பேசவே முடி​யாமப் போயிடும்.
கடந்த ஒரு வருஷத்தில் மட்டும் பெட்ரோல் விலை எட்டு முறை உயர்ந்திருக்கு. மக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்னை என்பதால், தேர்தல் நேரத்தில் இதைப்பத்தி பேசியே தீரணும். காங்கிரஸ் எங்களோடு இருந்தால் எப்படிப் பேச முடியும்?
கடைசியா, ஊழல் விஷயங்கள்... கறுப்புப் பணத்தைப் பதுக்குவதில் தொடங்கி, காமன் வெல்த் ஊழல் வரை எல்லாமே மத்திய அரசோட கண்ணசைவில்தான் நடந்​திருக்கு. மூணு வருஷங்களில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் இந்தப் பிரச்னைகளைப்பத்தி நாடாளுமன்றத்தில் தொடந்து பேசினாங்களே... அப்படி இருக்கையில், இப்போ காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தால், எந்தப் பிரச்னை​களையுமே தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பேச முடியாமல் போய்... மக்கள் மத்தியில் தற்போது உள்ள செல்வாக்கு கண்டிப்பாகக் குறைத்துவிடும்.
அது மட்டும் இல்லாமல், 'தி.மு.க-வுக்குப் போயிட்டு அங்கே பேச்சுவார்த்தையில் சரிப்பட்டு வரலேன்னுதானே நம்ம பக்கம் வரப் பார்க்கிறாங்க? அப்படி ஒரு இரண்டாம் பட்சமான உறவு தேவையே இல்லை! அதுவும் தவிர... வைகோ, விஜயகாந்த், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எல்லாமே நாங்கதான் வேணும்னு தெளிவான முடிவோடு வந்தாங்க. காங்கிரஸ் உள்ளே வந்தா, இவங்களுக்கு ஏற்படக்கூடிய சங்கடங்களையும் நினைச்சுப் பார்க்கணும்!'' என்று காரசாரமாகப் பேசுகிறார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரேகூட, ''ஆரம்பத்தில் ஜெயலலிதா, காங்கிரஸை அவங்க பக்கம் இழுக்கப் பார்த்தது, காங்கிரஸ் மேல் உள்ள மரியாதையால் அல்ல. தி.மு.க. மேல் உள்ள கோபத்துக்கு வடிகால் தேடத்தான்!
காங்கிரஸை தங்கள் பக்கம் இழுத்துவெச்சுக்கிட்டா, மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசுக்கு சிக்கல் கொடுக்கலாம்னு கணக்குப் போட்டாங்க. அதோடு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவைக் கைது செய்யவைக்கணும், அதற்கு எந்தச் சூழ்நிலையிலும் காங்கிரஸ் தடையா இருந்துடக் கூடாதுன்னு நினைச்சாங்க. அவங்க நினைச்ச மாதிரியே எல்லாம் ஓரளவு நடந்துவிட்டது. அதனால், 'கட் த்ரோட்' ஜெயலலிதா இனி காங்கிரஸ் தோழமையை எதிர்பார்க்க மாட்டார்!'' என்றுதான் கணக்கு சொல்கிறார்!
- கே.ராஜாதிருவேங்கடம்
 



unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக