பக்கங்கள்
| |||
|
வியாழன், 31 மார்ச், 2011
செவ்வாய், 29 மார்ச், 2011
சீறும் சீமான்! - கவிஞர் காப்பிராயன்
- கவிஞர் காப்பிராயன்
சூறாவளி சுற்றுப்பயணம்
சீமான் வர்றாரு...
தமிழனுங்களகொன்னவங்கள
தூக்கப் போறாரு!
சீமான் வர்றாரு...
தமிழனுங்களகொன்னவங்கள
தூக்கப் போறாரு!
'முள்ளிவாய்க்கால் படுகொலைதான்
மறந்து போகுமா...
சூடு சொரணை தமிழனுக்குத்
தொலைஞ்சு போகுமா?
மறந்து போகுமா...
சூடு சொரணை தமிழனுக்குத்
தொலைஞ்சு போகுமா?
கேடுகெட்ட படுபாவிங்க
போட்டுத் தள்னாங்க...
தமிழங்களைக் குழிதோண்டி
தள்ளி மூடுனாங்க!
போட்டுத் தள்னாங்க...
தமிழங்களைக் குழிதோண்டி
தள்ளி மூடுனாங்க!
கதருக்காரன் நம்ம இனத்த
கழுத்தறுத்தானே...
பதவிக்காக இங்குள்ளவனும்
பாத்து நின்னானே!
கழுத்தறுத்தானே...
பதவிக்காக இங்குள்ளவனும்
பாத்து நின்னானே!
மீனவன நடுக்கடல்ல
சுட்டுத் தள்னாங்க...
ஏன்னு எவனும் கேட்டானா
எப்படி ஜெயிப்பாங்க?'
சுட்டுத் தள்னாங்க...
ஏன்னு எவனும் கேட்டானா
எப்படி ஜெயிப்பாங்க?'
ராக்கெட் போல சீமானோட
கோவம் சீறுது...
கதருக்காரன் வயித்துலதான்
பீதி புடுங்குது!
கோவம் சீறுது...
கதருக்காரன் வயித்துலதான்
பீதி புடுங்குது!
unarchitamilan
திங்கள், 28 மார்ச், 2011
பங்குச் சந்தையின் பீஷ்மர்...
வாரன் பஃபெட் வழியில் 6 அசத்தல் ஷேர்கள்!
'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் 'மதிப்பு, தரம் மற்றும் தகுதி’ சார்ந்த முதலீடுகள் என்று அர்த்தம் கொள்ளலாம்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த பஃபெட்டின் முதலீட்டு சித்தாந்தங்களில் சிலவற்றை இங்கே விளக்கி, அதில் அடங்கும் சில பங்குகளையும் கடைசியில் பரிந்துரைத்துள்ளோம். இந்தப் பங்குகளை சந்தை நன்றாக இறங்கும் (படிக்க மார்ஜின்- ஆப்-சேஃப்டி பகுதியை) போது வாங்கிப் பலனடையலாம். இந்தப் பங்குகளை மட்டுமல்ல, சந்தையில் உள்ள மற்ற சில பங்குகளை நீங்கள் வாங்கலாம் என்று நினைக்கும்போதும் அவை இந்த சித்தாந்தத்தின் கீழ் வருகிறதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கினாலும் பலனடையலாம்.
அடிப்படை!
பங்கு முதலீடு என்பது ஒரு தொழிலில் செய்யப்படும் முதலீடு. நீங்கள் ஒரு தொழிலை தொடங்க விரும்புகிறீர்கள் எனில் அது எந்த மாதிரியான செயல்பாடுகள் கொண்ட தொழில், என்ன லாபம் வரும், அரசாங்கத் தொந்தரவுகள் இருக்குமா என்பது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து அதன் பிறகுதானே அந்த தொழிலை ஆரம்பிப்பீர்கள்? அதுபோலவே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதும் இதே அளவுகோல்களை எல்லாம் வைத்து ஆராய்ந்தபிறகே அந்த தொழிலில், அதாவது அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் பஃபெட் டின் அடிப்படை சித்தாந்தம்.தவறு செய்யாத நிர்வாகம்!
எந்த ஒரு தவறும் செய்யாமல் யாராலும் தொழில் நடத்த முடியாது. இன்று பெயர் சொன்னாலே பெருமைப்படும் அளவிற்கு இருக்கும் 'பெர்க்ஷயர் ஹாத்வே’ என்ற கம்பெனியை நடத்த வாரன் பஃபெட் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானவை.'பெர்க்ஷயர் ஹாத்வே’ முதலில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியாக இருந்தது. அதை சரிசெய்து மீண்டும் லாபத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது இன்னொரு சிறுதவறு நடந்துவிடும். அதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படும். அப்போது அவர் தனது பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'ஒரு தொழிலை செய்யலாம் என்று ஆரம்பிக்கின்றீர்கள், அந்தத் தொழிலை நடத்தும்போது சிற்சில தவறுகள் அவ்வப்போது ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அந்தத் தவறுகளையும் தாண்டி அந்த தொழில் லாபகரமாக நடக்க சாத்தியம் இருந்தால் மட்டுமே, அதில் இறங்குவது உபயோகமாக இருக்கும்’ என்று எழுதினார். பஃபெட் இதைச் சொன்னது 1977-ல். ஆனால், கார்ப்பரேட் உலகில் இன்றுவரை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது இந்த சிந்தனை.
டெக்ஸ்டைல் தொழிலின் இந்தக் குணாதிசயத்தால் பஃபெட் அந்தத் தொழிலையே விட்டுவிட்டு வெளியே வந்தாலும், அந்த டெக்ஸ்டைல் கம்பெனியின் பெயராகிய 'பெர்க்ஷயர் ஹாத்வே’தான் ஹோல்டிங் கம்பெனியாக மாறி, இன்று வரை அவருடைய முதலீட்டு கம்பெனிகளில் முன்னணி கம்பெனியாகவும் இருக்கிறது.
மதிப்பு!
அதே நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் அதிகப்படியான புதிய முதலீடுகள் ஒரு தொழிலுக்குத் தேவைப்பட்டால் அப்படிப் போடப்படும் அதிகப்படியான முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட மிக அதிக லாபம் கிடைக்க வேண்டும். அதுதான் முதலீடு செய்ய உகந்த கம்பெனி. அப்படி இல்லாமல் புதிதாக போடப்படும் முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட குறைவான லாபமே கிடைத்தால் அந்த கம்பெனியின் பக்கமே நான் போகமாட்டேன் என்கிறார் அவர். இந்த அளவீடுகளை வைத்துக்கொண்டு ஒரு கம்பெனி மதிப்புமிக்கதா? மதிப்பை அதிகரிக்கச் செய்யும் குணாதிசயம் அந்த கம்பெனிக்கு இருக்கிறதா என்பதை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.
தரம்!
ஒரு கம்பெனியின் பிராண்டின் மதிப்பு, அது தயார் செய்யும் பொருட்களின் தரம், அதன் டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் போன்றவை அந்த கம்பெனியின் போட்டி போடும் திறமையை வெகுவாக அதிகரிக்கிறது. எனவே, கம்பெனியில் முதலீடு செய்யும்போது ஃபைனான்ஷியல் விஷயங்களையும் தாண்டி இந்த குணாதிசயம் இருக்கிறதா என்று முக்கியமாகப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர்.ஒரு கம்பெனி அசாதாரண மான சூழ்நிலைகளில் - அதாவது, விற்பனை டல்லடிக்கும் நாட்கள், டிமாண்ட் அதிகரிக்காமல் இருக்கும் நாட்கள், உற்பத்தித்திறனை முழுமையாகப் பயன் படுத்தாத நாட்களில்கூட விற்பனையை ஏற்ற முடிகிறதென்றால் அதுவே சிறந்த கம்பெனி என்கிறார் அவர். ஏனென்றால், மேலே சொன்ன சூழ்நிலைகளில் விலையை ஏற்ற ஒரு கம்பெனி துணிகின்றதென்றால் அந்த விலையேற்றத்தால் விற்பனை செய்யும் பொருட்களின் எண்ணிக்கை குறையவோ அல்லது மார்க்கெட் ஷேர் குறையவோ செய்யும் என்ற பயம் எள்ளளவும் இல்லாமல் அந்த கம்பெனி இருக்கிறது என்று அர்த்தம். அந்த பயமில்லை என்றால் அந்த கம்பெனி தரமான பொருட்களை உற்பத்தி செய்வதாக அர்த்தம்'' என்கிறார் பஃபெட்.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் கொண்ட தொழில்களிலும் முதலீடு செய்யக்கூடாது என்கிறார் அவர். வேகமாக மாறிவரும் தொழில்களில் அதிக லாபம் கிடைத்தாலும் அதிக அளவில் நஷ்டம் வரவும் வாய்ப்புண்டு. முதலீட்டாளர்களுக்குத் தேவை நிச்சயமான லாபமே தவிர, அதீத வளர்ச்சியல்ல. இதுபோன்ற தொழில்களில் அந்த நிச்சயத்தன்மை குறைவதால் அவை முதலீட்டிற்கு உகந்ததல்ல என்கிறார் அவர்.
தகுதி
மேனேஜ்மென்ட்டின் தகுதி குறித்துச் சொல்லும்போது, 'எல்லா விதமான சந்தை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளிலும் பணத்தை சரியான வகையில் பயன்படுத்தத் தெரிந்த மேனேஜ்மென்ட்டே நீங்கள் முதலீடு செய்யத் தகுதியான மேனேஜ்மென்ட்’ என்கிறார். ஒரு கம்பெனி சம்பாதிக்கும் லாபத்தில் எந்த அளவு பணத்தை முதலீட்டுக்கான வருவாயாக முதலீட்டாளர்களுக்குத் தருகிறார்கள் என்பதை வைத்தே அந்த கம்பெனியை நிர்வாகம் செய்பவர்களின் தகுதியைத் தெரிந்து கொள்ளலாம். சம்பாதிக்கும் லாபத்தில் பெரும் பகுதியை நிர்வாகமே எடுத்துக் கொண்டால் அதன் தகுதி குறைவுதான் என்கிறார் அவர்.நீண்ட நாட்களுக்குண்டான தொலைநோக்குப் பார்வை கொண்ட மேனேஜ்மென்ட், லாபத் தைக் குறைத்துக் கொள்ளாமல் தரத்தை உயர்த்திக் கொள்ளும் தகுதி, பல்வேறு பொருளாதார ஏற்ற இறக்க சூழ்நிலைகளிலும் செயல்பாட்டுத்திறனும் லாபமும் குறையாத பிஸினஸ் மாடல்களைக் கொண்டிருப்பது, அந்தந்தத் தொழில் துறையில் தலைசிறந்த வல்லுனர்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களையும் முக்கியமான தகுதிகளாகச் சொல்கிறார் அவர்.
மார்ஜின் ஆஃப் சேஃப்டி!
மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கம்பெனி எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போகும் லாபத்தையும், அந்த லாபத்தால் அதிகரிக்கவிருக்கும் பங்கின் மதிப்பையும் கணக்கீடு செய்யும்போது விற்பனை, லாபம், செலவு, மார்க்கெட் ஷேர், வரி என பல விஷயங்களைப் பற்றியும் அனுமானிக்க வேண்டியிருக்கும். அப்படி அனுமானிக்கும்போது எதிர்காலத்தில் வியாபார சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் லாபம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் கம்பெனியின் மதிப்பும் மாறும். மதிப்புகள் மாறினால் பங்கின் விலையும் குறையும். எனவே, இன்றைக்கு முதலீடு செய்வதற்காக கம்பெனிகளை அலசும்போது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறை நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகளையும் கணக்கில் கொண்டு அதற்குண்டான 'மார்ஜின் ஆஃப் சேஃப்டி’யுடன் சேர்த்து அந்த விலையில் இன்றைக்குக் கிடைக்கும் பங்குகளை மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து வாங்கினால் மட்டுமே எல்லாக் காலகட்டத்திலும் தேவையான லாபத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் பஃபெட்.பஃபெட்டின் செலக்ஷனில் தேறக்கூடிய இந்திய பங்குகள் சரி, பஃபெட் கோட்பாடுகளைக் கொண்டு தேர்வு செய்தால் நமக்குக் கிடைக்கிற பங்குகளின் பேரைச் சொல்லுங்க என்கிறீர்களா! இதோ பஃபெட்டின் மந்திரத்துக்குக் கட்டுண்ட பங்கு பட்டியல்:
(இந்தப் பங்குகளை இப்போதுள்ள விலையிலும் வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம் என்பதே எங்கள் ஆலோசனை!)
வெள்ளி, 25 மார்ச், 2011
மு.க.சர்க்கார்!
அரசியல் ஆக்டோபஸ்!
ப.திருமாவேலன்
படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
unarchitamilan
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)