மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 31 டிசம்பர், 2010

பிரபாகரன் வாழ்ந்த ஊரில் இருந்து மண் எடுத்து செல்லும் சிங்களர்கள்

பிரபாகரன் வாழ்ந்த ஊரில் இருந்து மண் எடுத்து  செல்லும் சிங்களர்கள்
இலங்கையில் தனி ஈழம் கேட்டு சிங்கள அரசுக்கு எதிராக பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் போராடினர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகளை வென்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இதையடுத்து இலங்கையில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது.  
எனவே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு இலங்கை அரசின் வசமானது. இதை தொடர்ந்து வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள முல்லைத்தீவுக்கு பெரும்பாலான சிங்களர்கள் சுற்றுலா வரத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அவர்கள் அங்கு வீரத்தின் விளைநிலமாக திகழும் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்புக்கு வந்து செல்கின்றனர்.  பிரபாகரன் வாழ்ந்த ஊர் என்பதால் அங்கு மண்ணை எடுத்து செல்கின்றனர். இதில் எந்த வித வேறுபாடும் அவர்கள் பார்ப்பதில்லை. அங்கிருந்து மண் எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பிரபாகரனின் முகாம் எங்கிருந்தது. அவர் எங்கு தங்கியிருந்தார் என அப்பகுதி மக்களை கேட்டு மண் எடுத்து செல்கின்றனர். இந்த தகவலை முல்லைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக