இலங்கையில் தனி ஈழம் கேட்டு சிங்கள அரசுக்கு எதிராக பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் போராடினர். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்துடன் போரிட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப்புலிகளை வென்றதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. இதையடுத்து இலங்கையில் நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது.
எனவே, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு இலங்கை அரசின் வசமானது. இதை தொடர்ந்து வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதியில் உள்ள முல்லைத்தீவுக்கு பெரும்பாலான சிங்களர்கள் சுற்றுலா வரத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக அவர்கள் அங்கு வீரத்தின் விளைநிலமாக திகழும் பிரபாகரன் வாழ்ந்த புதுக்குடியிருப்புக்கு வந்து செல்கின்றனர்.
பிரபாகரன் வாழ்ந்த ஊர் என்பதால் அங்கு மண்ணை எடுத்து செல்கின்றனர். இதில் எந்த வித வேறுபாடும் அவர்கள் பார்ப்பதில்லை. அங்கிருந்து மண் எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக பிரபாகரனின் முகாம் எங்கிருந்தது. அவர் எங்கு தங்கியிருந்தார் என அப்பகுதி மக்களை கேட்டு மண் எடுத்து செல்கின்றனர். இந்த தகவலை முல்லைத் தீவில் வாழும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக