மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 14 பிப்ரவரி, 2013

பேரறிவாளன், முருகன், சாந்தனை நோக்கி நகர்கின்றதா, இந்தியக் கொலைக் கரங்கள்?


News Service
'ஒவ்வொரு விடியலும் அச்சத்தைக் கொடுக்கிறது' என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனின் தாயார் கண்ணீர் வடித்துள்ளார். மும்பைத் தாக்குதலாளிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபரான அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலின் குற்றவாளியாகக் கருதப்பட்ட அப்சல் குருவும் தூக்கிலிடப்பட்டார். இந்த இரு தூக்குத் தண்டனைகளுமே வெளியார் எவருக்கும் தெரியாமல், குற்றவாளிகளின் உறவுகளுக்கும் தெரியப்படுத்தாமல் மிக இரகசியமாக, யாருமே எதிர்பார்க்கப்படாத வேளையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  இதனைத் தொடர்ந்து, 1993ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காகச் சென்ற அதிரடிப்படையின்மீது கள்ளிவெடித் தாக்குதல் நடாத்தி 22 பேரைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானப்பிரகாசம், சிலவேந்திரன், மீசை மாதையன், சைமன் ஆகியோர் தூக்கிலிடப்படவுள்ளார்கள் என்ற செய்தி தமிழ் மக்களைத் திகில் கொள்ள வைத்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரைக் குறி வைத்தே இந்த தொடர் மரண தண்டனைகள் இந்திய ஆட்சியாளர்களால் ஒத்திகை பார்க்கப்படுகின்றது என்பதே தமிழ் உணர்வாளர்களது கருத்தாக இருக்கின்றது. இதனையே, பேரறிவாளனது தாயார் அற்புதம்மாளின் கவலை பிரதிபலித்துள்ளது.ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கில், சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து ஈழத் தமிழர்கள்மீது போர் தொடுத்த சோனியா காந்தியின் வன்மம், ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களைப் பலி கொண்டுள்ள நிலையிலும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தற்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மீது அவரது கவனம் திரும்பியுள்ளது போல் தெரிகின்றது.அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் பலத்தைப் பெறாது என்றே கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தனக்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இந்த ஆட்சி நிறைவுக்குள் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் மூவரையும் தூக்கிலிடும் முடிவில் சோனியா காந்தி உறுதியதாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தியின் முடிவில் மாற்றங்கள் எதுவும் நிகழாதிருக்குமானால், தமிழ் மக்களது மனங்கள் எல்லாம் ஜெனிவாவில் மையங்கொண்டிருக்கும் நாட்களில், இந்தத் தமிழர்களது தூக்குத் தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதான செய்தி ஒரு அதிகாலைப் பொழுதில் வெளியிடப்படலாம் என தமிழக ஊடக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தை ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இந்திய அரசு உள்ளது. அமெரிக்காவால் இதற்கான வாக்குறுதியும் இந்திய தரப்பிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் துக்குத் தண்டனையை நிறைவேற்ற சோனியா காந்தி முயலக்கூடும் என்பதே தமிழக ஊடக தரப்பின் அச்சமாக உள்ளது.
சோனியா காந்தியின் இந்தப் பழிவாங்கல் படுகொலைகளைத் தடுக்கவோ, தவிர்க்கவோ தமிழக மக்களால் முடியாமலும் போய்விடலாம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்கும் கருணாநிதியுடனும் அதற்கான பேரங்கள் பேசப்பட்டிருக்கும். ஒருவேளை, இந்தப் படுகொலையில் தனக்குச் சம்மந்தமே இல்லாததுபோல், கருணாநிதி தன் கவிதைகளால் இவர்களுக்கு மாலையிடவும் முனையலாம். ஆனால், தமிழகம் விழித்தே இருக்கும்.
தமிழகத்தில் இந்தப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்டால், காங்கிரஸ் கட்சியின் சுவடே தமிழகத்தில் இல்லாமல் போய்விடும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தமிழினத்தின் அழிவுகளில் பங்கேற்ற தி.மு.க.வுக்கும் இறுதி ஆணி அடிக்கப்பட்டு, குழிக்குள் இறக்கப்படும். இதுவரை, தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு ஈகப் போர் நடாத்திய தமிழ் உணர்வாளர்கள், எதிரிகளுக்கெதிரான வன்முறை சக்தியாகவும் மாறக்கூடும்.
தமிழகம் ஒருமுறை கொதித்தபோது, காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சி பறித்தெடுக்கப்பட்டு, அண்ணா அவர்களிடம் வழங்கப்பட்டது. மறுமுறை கொதித்தபோது, தமிழகத்தின் ஆட்சி கருணாநிதியிடமிருந்து பறிக்கப்பட்டு, காங்கிரஸ் துடைத்தெறியப்பட்டது. இன்னொருதடவை தமிழகம் கொதித்தெழுமாக இருந்தால், தமிழகம் இந்தியாவின் மாநிலமாக இருப்பது சாத்தியமில்லாததொரு எதிர்காலத்தை உருவாக்கலாம்.
எனவே, ஒரு குடும்பத்தின் பழிவாங்கல் கொடூரத்திற்கு, தமிழகத்தின் தேசப்பற்று இரையாக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்தியர் ஒவ்வொருவரினதும் கடமையாக உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே தமிழகத்து மக்களில் எண்ணமாக உள்ளது.
- அகத்தியன்

புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!


இடையே எந்த அசம்பாவித முடிவுகளும் எடுக்கப்படாதவிடத்து, இந்திய நாட்டின் ஆட்சி பீடத்திற்கான தேர்தலுக்கு இன்னமும் 16 மாதங்களே இருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த ஆட்சி காங்கிரஸ் அல்லாத கட்சிகளாலேயே அமைக்கப்படும் என்றே கருத்துக்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களும், அதிருப்திகளும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், காங்கிரசின் பிரதித் தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகளும் ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தியைத் தலைவராகக் கொண்ட காங்கிரஸ் கட்சி தற்போது, அவரது குடும்பச் சொத்தாகவே மாற்றம் பெற்றுள்ளது. இதனால், எதிர்வரும் தேர்தல் சோனியா குடும்பத்தின் அரசியல் எதிர்காலத்தையும் சேர்த்தே நிர்ணயம் செய்யப் போகின்றது.

  
தற்போதைய இந்திய ஆட்சி முறையில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் கொண்ட தென் மாநிலங்களே மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. 543 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான 130 உறுப்பினர்களைத் தென் மாநிலங்களே தெரிவு செய்கின்றன. இந்த மாநில உறுப்பினாகளின் தயவிலேயே தற்போதைய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. அதிலும், கடந்த தேர்தலில் புதுவையின் 1 தொகுதி உட்பட, தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றிய தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியே தற்போதைய ஆட்சியின் மிகப் பெரிய பலமாகும்.
கடந்த தேர்தலைப் போலல்லாது, தற்போது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளன. கடந்த சட்டசபைத் தேர்தலில் மக்களால் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் இந்தக் கூட்டணிக்குச் சவால் மிக்கதாகவே இருக்கப் போகின்றது.
இவர்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்று முடிந்த ஈழத் தமிழர்கள்மீதான இன அழிப்பு யுத்தத்தினை தமிழக மக்கள் இன்றுவரை மறந்து விடுவதாகத் தெரியவில்லை. ஈழத் தமிழர்களது அழிவைத் தடுத்து சிறுத்தும் ஆற்றலும், அதிகாரமும் கொண்டிருந்த அன்றைய தமிழக முதல்வர் தனது சுயநல தேவைகளுக்காகத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டார் என்ற ஆதங்கத்தின் வெறுப்பு இன்னமும் அடங்குவதாக இல்லை. இதே காரணத்தினாலேயே கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் பெரும்பான்மையினோர் மக்களால் தண்டிக்கப்பட்டனர்.
எதிர்வரும் தேர்தலுக்காகத் தன்மீதான களங்கத்தைத் துடைப்பதற்காகவே கலைஞர் கருணாநிதி 'டெசோ' நாடகத்தைப் பல அரங்குகளிலும் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றார். ஈழத் தமிழர்கள் மீதான இந்திய ஆட்சியாளர்களின் அணுகுமுறை தற்போதும் பலத்த விமர்சனங்களுக்குள்ளாகி வருவதால், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழக காங்கிரசுக்குப் பலத்த சவாலைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள சிறிலங்காவுக்கெதிரான தீர்மானம் இந்திய ஆட்சியாளர்களுக்குப் பெரும் சங்கடத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இந்தியா சிறிலங்காவை ஆதரிப்புமாக இருந்தால், தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பே கேள்விக்குறியாகிவிடும். இதனால், இந்திய ஆட்சியாளர்கள் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது ஈழத் தமிழர்களுக்கு சாதகமானதொரு கள நிலையை சர்வதேச அரங்கில் உருவாக்கும்.தற்போதைய நிலையில், இந்தியாவின் ஆட்சியாளர்கள், தங்களது அடுத்த தேர்தல்வரை தமிழீழ மக்களுக்கெதிரான எந்த நகர்வுகளையும் மேற்கொள்ள வாய்ப்பில்லை. இந்தியாவின் இக்கட்டான இந்த நிலைக்கு, தமிழக மக்களின் தமிழின உணர்வே காரணமாக அமைந்துள்ளது. இது கூர்மைப்படுத்தப்பட வெண்டும். இந்திய காங்கிரஸ் கட்சியின் நலனும், தமிழீழ மக்களின் நலனும் ஒரு கோட்டில் சந்திக்கவேண்டிய கட்டாய நிலையைத் தமிழகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு தரப்பு நலன் சார்ந்த மாற்றம் இரு தேசங்களின் நலன் சார்ந்ததாக மாறவேண்டும். அதற்குத் தமிழகம் மாபெரும் சக்தியாக மாறவேண்டும்.
தமிழகத்தின் அரசியல் மாற்றங்கள் தமிழீழ நலன் சார்ந்ததாக உறுதிப்படுமானால், இந்தியாவின் எந்த ஆட்சியாளர்களாலும் தமிழீழத்தை வஞ்சிக்க முடியாது. தமிழர்களைக் கொலைக் களத்தில் நிறுத்த முடியாது.
தமிழகத்தால் முடியும், தமிழீழத்தை மீட்க!
- அகத்தியன் -

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும் அழியாது உம் புகழ் பாரினிலே



ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும்
அழியாது உம் புகழ் பாரினிலே
ராஜ கோபுரமாய் உயர்ந்த எம் தலைவா
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
பெரும்பான்மை என பெரும் சீற்றம் கொள்ளும்
பேரினவாதத்தை அழித்திட வா வா
அழிந்தது பயங்கரவாதம் என அறிவிப்போருக்கு
பதுங்கும் புலி பாயும் என பறை சாற்றிட வா ...........,


போன வழி மாறலாம் ஆனால்
போகும் வழி மாறாது
ஆழ்கடலில் அலை ஓய்ந்தாலும்
பாயும் புலியின் சீற்றம் அடங்காது ,
முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிவல்ல
எம் வாழ்வில்
மீண்டும் எழுவோம் புதியதோர் பூகம்பமாய்
புறப்பட்டு தலைவனே புறப்பட்டு வா தலைவா............,


கடற்படை தரைப்படை வான்படை என
முப்படையின் தலைவனே பிரபாகரா
எப்படை வரினும் அப்படை வென்று
எம்படை வெல்ல துணிவாய் பிரபாகரா ,
சாகவில்லை எம் தலைவன்
சரித்திரம் படைப்பான் தரணியிலே
மரணிக்கவில்லை எம் தலைவன் என
மார்தட்டி சொல்கிறோம் தமிழர் நாம்...............


தழிழர் கண்ணீர் துடைக்க வந்த தலைவனே
நீ சுட்டும் திசையில் செல்ல புறப்படுவோம் தமிழர் நாம்
காட்டி கொடுத்திட்ட கயவரை கொன்றிடுவோம்
கரிகாலன் படையில் இணைந்திடுவோம்
நாகரீக வாழ்க்கையல்ல நம் வாழ்வு
நமக்கென வேண்டும் ஒரு தனிநாடு...................


அதற்கென போராடுவோம் ஒன்றிணைவோம்
புறப்படுவோம் புதியதோர் பாதையில்,
தமிழர் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லுடா
புலம்பெயர் தமிழினமே புறப்படு போரிட............

புதியதோர் ஈழம் படைப்போம்
எமக்கென ஒரு நாடு வேண்டுமென
தன்னுயிரை தியாகம் செய்த
மண்ணில் மடிந்த மாவீர செல்வங்களின்
கனவை நனவாக்கிடுவோம்,
மாவீரர் கனவு நனவாக
தலைவனின் புதிய அகவையிலே
தமிழீழம் பெறுவோம்
இது தலைவன் எம் மேல் உறுதி ................


- தமிழ் ஈழத்தில் இருந்து கவிப்பிரியா -

உறவுகளே - இளையோரே - நாம் செய்த தவறு என்ன?



உறவுகளே நாம் செய்த தவறு என்ன?
எமது தாயகத்தில் நாம் அமைதியோடு வாழ ஆசைப்பட்டது தவறா?
சுதந்திர உணர்வுள்ளவராக - மனித நேயத்தோடு - மானிட தர்மம்
கண்டு நாம் வாழவே முடியாதா? - அன்னியனுக்கு தலை வணங்காது
வாழ்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

 
ன்றைய காலம் பொழுது போக்கிற்கான - கருத்து நிலைக்
காலமல்ல - துடித்தெழுந்து செயற்படவேண்டிய வேளை இது -
அன்னியன் எமது உரிமையைத் தீர்மானிக்க விடுவதா உறவுகளே? -
வாதங்களையும் - கருத்துக்களையும் - முன் வைத்து
மக்களைக் ஓரணியாக்கி - ஒன்றாகிச் செயற்படுவோம்.


இன்றைய காலம் எமதாக - விடியல் காண விரைந்துசெயற்படுவோம் -
வாருங்கள் - கடந்த காலம் மீளாது - நிகழ்காலத்தை
நியமாக்க - உறுதி கொண்டு - உணர்வு கொண்டு -
தாயக மக்களினதும் - புலம் பெயர்ந்த - எமது நிலையற்ற
வாழ்வினூடாக - தாயகத்தை மீட்டெடுக்க - தடை தாண்டி வாருங்கள்.


தாயகமும் - தமிழ்மொழியும் எமதுதான் - மட்டுமல்ல -
நீயும் - நானும் உறவுதான் - உனக்கும் - எனக்கும் -
உணர்வும் - உற்றம் - சுற்றம் - வாழுமிடம் - வாழ்வாதாரம் -
எல்லாமே ஒன்றுதான் - எம்மைக் காக்க - தம்மைத் தந்த -
உத்தமர்களின் உணர்வுகளோடு - நாம் உண்மை காக்கப் புறப்படுவோம்.


இன்றைய காலம் உனதும் - எனதும் - வேற்றுமைகளை
மறந்துவிடுவோம் - விட்டுக்கொடுத்து - தடை தாண்டி -
முன்னேறுவோம் - உறவுகளே ஓரணியாக - ஓர்குரலாக
உரிமைக்காக ஒன்றுபடுவோம் - தலைவனின் பாதையில் -
உலகத்தை அரவணைத்து - தாயகத்தை மீட்டெடுப்போம்.


இது வசந்தம் காலமல்ல - போர் மேகம் சூழ்ந்த தேசத்தின் -
புது விடியலுக்கான காலம் இது - உனது கைகளில் தவிக்கிறது -
தூக்கி வீசிவிடாதே - அன்போடு அரவணைத்துக்கொள் - மனிதம்
உன்னையும் மனிதனாக்கும் - வாலாறு உனக்கும் தலைவணங்கும்
தமிழர் தாயகத்தின் வரலாற்றில் நாமும் இணைந்துகொள்வோம்.


தோப்பூரான் 12.12.12.

திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் மீண்டு எழுந்து தமிழீழ வரலாறு படைக்க வாரீர்.


உண்மையோடு - உணர்வோடு - உரிமையோடு வாழ - மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம். 1505ஆம் ஆண்டிலிருந்து - அடைக்கலம் நாடி - நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயனுக்கும் - ஒல்லாந்தனுக்கும் - பிரித்தானியனுக்கும் எதிராக - எமது உரிமை காக்க போராடினார்கள் - எங்களது முப்பாட்டனார்களும் - அன்றிலிருந்து போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டுதானே இன்றுவரை தமிழினம் உயிர்வாழுகின்றது என்பதும் வரலாறு - நீ அறியாயா?
   ஈழத்தீவில் இருந்த மூன்று தனி நாடுகளும் (தமிழீழ நாடு � கண்டி நாடு � கோட்டை சிங்கள நாடு) என்பன - மொழி � கலை � பண்பாடு � சமயம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் - என்பவற்றால் வேறுபட்டிருந்த - இரு இனங்களையும் - தமது நிர்வாக நலனுக்காகவே பிரித்தானிய அரசு 1833ஆம் ஆண்டில் - தமிழ் மக்களின் அனுமதியின்றி - ஒற்றை ஆட்சி முறைக்குள் நிர்வாகப்படுத்தினர் - ஆங்கிலேயரின் இவ் இணைப்பினால் - தமிழீழம் தனக்கே உரித்தான - பிரதேசம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் என்பவற்றை அழித்துவிட்டனர் என்பதே - ஆங்கிலேயர் வரவால் தமிழீழம் அடைந்த அடிப்படைத் தீமைகளாகும். இது வரலாறு.
ஈழத்தீவை நிர்வகிக்கவென பிரித்தானியரால் ஒரு சட்ட நிருபண சபை உருவாக்கப்பட்டது அதில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள இனவாதத் தலைவர்களின் திட்டமிடல்களால் -1835ஆம் ஆண்டிலிருந்தே - தமிழர் வாழ்விடங்களில் - அபிவிருத்தி என்ற பொய்யுரையோடு -சிங்கள மக்களை - தமிழர் தாயகம் எங்கும் - ஊடறுத்து குடியமர்த்தினர் என்பதும் - இது இன்றுவரை தொடர்வதையும் மறக்காதீர்கள் -
இது பற்றி அன்று எமது தலைவர்களும் - மக்களும் எடுத்துரைத்தும் கருத்தில் கொள்ளாது பிரித்தானிய அரசு செய்த தவறான திட்டமிடல்களால் - 1948ஆம்; ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய போது - எமது தலைவர்கள் - எமது உரிமையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்த அத்தனை முயற்சிகளையும் - சிங்களத் தலைவர்களின் ஏமாற்றுத் தனங்களைப் புரிந்து கொள்ளாத - பிரித்தானியர் - தமிழீழ நாட்டையும் சிங்களத்தோடு விட்டுச் சென்றுவிட்டனர் - அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத்தால் அழிக்கப்படும் ஓர் இனமாக முகவரியற்றவர்களாக்க சிங்களம் பல்வேறு வளிகளிலும் செயற்படுவதை உணரவே மாட்டாயா?அன்றிலிருந்து - தமிழினத்தைக் காக்க - உரிமையோடு வாழவைக்க - இடர் பல சுமந்த - சனநாயக வழியில் உரிமை கேட்ட எம் தலைவர்களுக்கும் - பௌத்த சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தால் தாக்கப்பட்டு கொழும்பு கோல்பேசு கடலில் தூக்கி எறியப்பட்டதும் - சிறைகளில் அடைக்கப்பட்டதும் - ஒப்பந்தங்கள் - பேச்சுவார்த்தைகள் - குழுக்கள் - சபைகள் என்று காலத்துக்குக் காலம் ஏற்ப - தமிழர்களை சிங்கள அரசுகள் ஏமாற்றி வந்ததும் - வருவதும் - வரலாறும் -பிரித்தானிய அரசு விட்டுச் சென்ற தவறுதல்களின் ஊடாக - இலங்கை என்ற இரு தேசிய இனங்கள் வாழ்ந்த நாட்டில் - தமிழ்த் தேசிய இன மக்களின் அனுமதியற்று � ஆதரவற்று - தன்னை 1972ஆம் ஆண்டில் சிறிலங்கா பௌத்த சிங்கள நாடு என்றும் - சிங்களமே அரச மொழி என்றும் பிரகடனப்படுத்தி � தமிழரின் இறைமையை தனது கையகப்படுத்த - அல்லது ஈழத்தீவை வந்தேறு குடிகளான சிங்களத் தேசிய வாதிகள் - பௌத்த சிங்கள நாடாக்கக் கனவு காண்கின்றனர் என்பதறிக -
சிறிலங்காவின் விவகாhங்களில் தலையிடும் நீதிமான்களுக்கு ஓர் வேண்டுகோள்!
நாம் கோருவது எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட உரிமையையே! 1970 ஆண்டின் - ஐநா சாசனத்திற்கு உள்ளடங்கிய � தாயகம் - தேசியம் - தன்னாட்சி � கொண்ட சுயநிர்ணய உரிமையே. � வீதியும் - வீடும் - மருந்தும் - உணவும் - உதவிகளே தவிர இவை உரிமையல்ல என்பதறிக - மீண்டும் சிறிலங்காவுடன் இணைந்து எம்மை அழிக்க முற்படாதீர்கள்! அடக்கு முறை சட்டங்களோடு - தமிழரை ஆழ நினைத்த சிங்களம் - அமைதியின்றி தவிப்பதைப் பார் - ஒன்றுபட்ட தமிழராய் ஓரணியாய் - எம் உரிமைக்காக மீண்டும் மீண்டெழுவோம்.
தம்பி உன்னைத்தான்:
உரிமைக்காக - உறவைக் காக்க - தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வரலாற்றின் ஊடாக களமாடினாய் - இன்றும் இயங்கு நிலையில் இருக்கும் நீங்கள் - நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட துறைகளினூடாக � எமது மக்களாக - தமிழ்த் தேசியத்தையும் இன்றைய தாயக நிலையையும் - மக்களையும் - முதன்மைப்படுத்தி விட்டுக்கொடுப்புக்களின் ஊடாக ஒன்று பட்ட இயங்கியல் நிலையினூடாக � செயற்பாடுகளை விரைவு படுத்த முடியும் என்ற ஆதங்கங்களோடு � தம்பிகளே � தங்கைகளே - எமது உரிமைக்காக - நாம் மீண்டும் மீண்டெழுந்து செயற்படுவோம் வாருங்கள்.
1995ல் இருந்து � தமிழினத்தின் வாழ்வியலுக்கு எதிரான தடைச்ச சட்டங்களுக்கு மத்தியில் -வாழ்வாதாரங்களும் - வாழ்விடங்களும் அழிக்கப்பட்டு - சுனாமியும் - வெள்ளப்பெருக்கும் தந்த அனர்த்தனங்களோடு � அனந்தபுரத்தையும் - வலைஞர்மடத்தையும் - வட்டுவாகலையும் - நந்திக்கடலையும் - நினைவிற் சுமந்து எம்மக்களின் வாழ்வின் துயக் போக்க ஓன்று பட்ட உலகத் தமிழராய் மீண்டும் மீண்டெழுவோம் வாரீர்.
சிறிலங்கா நண்பர்களே! நண்பிகளே!
தமிழர்கள் நாம் எந்த ஒரு இனத்தவர்க்கும் - தேசத்திற்கும் எதிரானவர்களல்ல!
நாம் கோரி நிற்பது எம்மிடம் இருந்து பறிக்கப்படும் - அழிக்கப்படும் எமது பிறப்புரிமைகளேயே.
நாம் உரிமை கொண்ட இனமாக வாழவே - முயன்றோம் - முயற்சிக்கின்றோம்.
தமிழீழம் மலரும் - அப்போதும் சிறிலங்காவின் நட்பு நாடாகவே இருக்கும். தமிழின அழிப்பும் - தமிழின நிலப்பறிப்பும் - யுத்தமும் - மக்களின் மேலான பொருளாதார அழுத்தங்களும் - சர்வாதிகாரப் போக்கும் பௌத்தத்தின் காருண்யமல்ல என்பதறிக.
ஒன்றுபடுவோம் உரிமையைக் காக்க.
தோப்பூரான்
7.12.2012

ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் - அணிந்துரை - பழ.நெடுமாறன்

ராஜீவ் படுகொலை - தூக்குக்கயிற்றில் நிஜம் என்னும் தலைப்பில் நண்பர் திருச்சி வேலுசாமி எழுதியுள்ள நூல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தப்போகும் நூலாகும். ஏற்கெனவே தமிழகமெங்கும் பல நூறு கூட்டங்களில் அவர் தெரிவித்த உண்மைகளையே இப்போது நூலாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ராஜீவ் படுகொலையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்தக் கொலையின் பின்னணியில் இருந்த சதிகாரர்கள் இன்னமும் நாட்டில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
 நீதி, நேர்மை, உண்மை, ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டன. ராஜீவ் கொலை வழக்குப் புலன்விசாரணையில் தொடங்கி வழக்கு நடத்தப்பட்ட விதமும், தீர்ப்பு அளிக்கப்பட்ட வரையிலும் பல உண்மைகள் ஆழக்குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளன. தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்களின் கொலை வழக்கு விசாரணையும், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கொலை வழக்கு விசாரணையும் பகிரங்கமாகத்தான் நடத்தப்பட்டன. ஆனால், ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தடா நீதிமன்றத்தில் நடத்தப்பட்டபோது இரகசியமாக நடத்தப்பட்டது. அதுபற்றிய விபரங்கள் நாட்டு மக்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டன. உண்மைக் குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்தில்தான் தொடக்கத்திலிருந்து எல்லாமே நடத்தப்பட்டன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாக்கம் தமிழகத்தில் பரவிவிடாமல் தடுக்கும் கருவியாக ராஜீவ்  கொலை வழக்கை தில்லி பயன்படுத்தியது. அதனால்தான் இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 13 பேர் தமிழ்நாட்டுத் தமிழர்கள் 13பேர் ஈழத் தமிழர்கள். சரிசமமான எண்ணிக்கை என்பது தற்செயலானது அல்ல. ஆழமான உள்நோக்கத்துடன் இவ்வாறு செய்யப்பட்டது. வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய உணர்வைச் சிதைப்பதற்காக இந்தச் சதி வகுக்கப்பட்டது. இந்த உள்நோக்கத்துடனே சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுக்குழு தனது புலன்விசாரணையை நடத்தியது.
அகில இந்திய ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்ரமணியசாமி அகில இந்திய செயலாளராகத் திருச்சி வேலுசாமி பதவி வகித்தார். சுப்பிரமணிய சாமி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்யும் போதெல்லாம் உடன் பயணம் செய்பவர் வேலுசாமி ஆவார். சு.சாமியின் நம்பிக்கைக்குரிய மிகநெருங்கிய தோழராகத் திகழ்ந்தார்.
1991 மே 21ஆம் தேதி ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட நாளிலும் அதற்கு முன்பாக 2 நாட்களும் தமிழ்நாட்டில் சுப்பிரமணிய சாமி சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம், பேசிய பேச்சுகள் உடனிருந்த வேலுசாமியின் உள் மனத்தில் சந்தேக அலைகளை எழுப்புகின்றன. அது பற்றி விரிவாக இந்நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார். பிறகு நன்கு விசாரித்து சுப்பிரமணிய சாமிக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பதை அறிந்து கொண்ட வேலுசாமி முதலில் திடுக்கிட்டபோதிலும் உண்மைக் குற்றவாளிகளை அம்பலப்படுத்த வேண்டும் என முடிவு செய்து ஜெயின் கமிசன் முன் அறிக்கை அளிக்கிறார். சோனியா காந்தியைச் சந்தித்துத் தானறிந்த உண்மைகளைக் கூறுகிறார்.
தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தான் கண்டறிந்த உண்மைகளைத் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் போட்டுக் கூறுகிறார்.
இடையில் மிரட்டல்கள், உருட்டல்கள், ஆசை வார்த்தைகளைச் சந்திக்க நேர்ந்த போதிலும் அஞ்சாமல் தனது பணிகளைத் தொடர்கிறார்.
சந்திராசாமி, சுப்பிரமணியசாமி ஆகியோர் மீது பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டியும்கூட புலன் விசாரணைக் குழுவினர் அவற்றைச் சட்டை செய்யாமல் புலிகளை மையமாகக் கொண்டே செயல்பட்டனர்.
உலகம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட விதத்தை நூல் நெடுகிலும் வேலுசாமி விவரிக்கிறார். யாருக்கும் அஞ்சாமல் யாரிடமும் விலை போகாமல் அவர் ஆற்றிய பணி பாராட்டுக்குரியது. வேலுசாமி விடுத்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை இன்னமும் கிடைத்தபாடில்லை.
அதுமட்டுமல்ல, ராஜீவ் கொலை குறித்த பல கேள்விகளுக்கும் விடை அளிக்கப்படவில்லை. அவற்றுள் சில: 
1. ராஜீவ் கொலை குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அப்போதைய பிரதமர் சந்திரசேகர் ஆட்சி அமைத்தது. ராஜீவ் காந்திக்குச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்ததா? என்பதைப்பற்றித்தான் இந்தக் கமிசன் விசாரிக்கும் என்றும் இந்தக் கொலைக்கான சதியின் பின்னணி குறித்து கமிசன் ஆராயாது என்றும் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரம்புக்குட்பட்டு விசாரணை நடத்திய ஜே.எஸ். வர்மா தனது அறிக்கையை 1992ஆம் ஆண்டு சூன் மாதம் மத்திய அரசிடம் அளித்தார். ஆனால் ஐந்தாண்டு காலமாக இந்தக் கமிசன் அளித்தப் பரிந்துரைகள் எதுவும் அமுலாக்கப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பிரதமர் நரசிம்மராவ் அரசுக்கு ஏற்பட்டது. சில மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிசன் செய்த முக்கியமான பரிந்துரை குறிப்பிடத்தக்கதாகும். முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் வினோத் பாண்டே உளவுத்துறைத் தலைவர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலாளர் சிரோண்மணி சர்மா பாதுகாப்புச் செயலாளர் ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொன்னால் இந்த நால்வரும் பதவியிலிருந்து ஓய்வுபெற்றப்பிறகே இவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனடியாக அந்த நாலுபேரும் மத்திய நிர்வாக மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஓய்வுபெற்றப்பிறகு அவர்களிடம் விளக்கம் கேட்பது முறையற்றது என அது ஆணையிட்டது. இதன் மூலம் மேற்கண்ட அதிகாரிகள் திட்டமிட்டுப் பாதுகாக்கப்பட்டனர். இதன் பின்னணியில் இருந்த சூத்திரதாரிகள் யார்? இந்தக் கேள்விக்கு இதுவரை விடையளிக்கப்படவில்லை.
2. ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கை செய்திருந்தார் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத். கொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே யாசர் அராபத்தின் பிரதிநிதி ராஜீவைச் சந்தித்துச் சுட்டிக்காட்டி எச்சரித்தார். ஆனால் புலன் விசாரணைக்குழு யாசர் அராபத்தைச் சந்தித்து எந்த அடிப்படையில் அவர் எச்சரிக்கைச் செய்தார் என இறுதிவரை விசாரிக்கவேயில்லை. இது ஏன்?
3. ராஜீவ் கொலை பின்னணிக் குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஜெயின் கமிசன் முன் ஆஜராகும்படி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர்  கி.வீரமணி. ம.தி.மு.க. பொதுச் செலயாளர் வைகோ, கோவை கு.இராமகிருட்டிணன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். ஆனால், ஜெயின் கமிசன் தனது இடைக்கால அறிக்கையை அளித்தப் பிறகு இவர்களை கமிசன் அழைத்தது என்பது மட்டுமல்ல. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மட்டும் இரகசிய விசாரணையாக நடத்தப்பட்டது. ஏனெனில் இந்த நால்வரும் புலிகளின் ஆதரவாளர்கள் எனவே இவர்கள் கூறும் தகவல்கள் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக இரகசிய விசாரணை என்று திட்டமிட்டுச் செய்தார்கள்.
4. இந்திராகாந்தி கொலை குறித்து விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தக்கர் கமிசன் தனது அறிக்கையில் இந்திரா கொலையில் அவர்களது இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன. இக்கொலையில் இந்திராவின் தனி உதவியாளர் ஆர்.கே. தவான் மீது சந்தேகம் எழுகிறது. இவரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தவான் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இது ஏன்? இந்திராவின் அலுவலகத்தில் சாதாரண வேலையில் இருந்த ஆர்.கே. தவான், இந்திராவின் மறைவிற்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக திடீரென உயர்ந்தது எப்படி? சீதாராம் கேசரி காங்கிரஸ் தலைவராக இருந்த போது காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராகவும், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் இவர் நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு நடைபெற்றப் பொதுத் தேர்தலில் தில்லி தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்குக் காங்கிரஸ் வேட்பாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அளவுக்கு அவர் செல்வாக்குப் பெற்றதற்கு யார் காரணம்? சோனியாவின் தயவினால்தான் இவருக்குப் பெரும் பதவிகள் கிடைத்தன. தனது மாமியாரின் படுகொலையில் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு சோனியா உதவி செய்ததின் மர்மம் என்ன?
இந்திராவின் இல்லத்திற்குள்ளேயே சதிகள் உருவாக்கப்பட்டன என தக்கர் கமிசன் சாட்டிய குற்றச்சாட்டின் பின்னணி என்ன? இந்திரா குடும்பத்தைச் சேர்ந்த சிலரே இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் பொருள். இந்திரா குடும்பத்தில் ராஜீவ் காந்தி சோனியா, சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா ஆகிய மூவரும் இருந்தனர். இந்திரா உயிரோடு இருந்த காலத்திலேயே அவருடைய வெறுப்புக்கு ஆளாகி மேனகா வெளியேற்றப்பட்டார். எஞ்சியுள்ள ராஜீவ் சோனியா, ஆகிய இருவரோ இருவரில் ஒருவரோ இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி சம்பந்தப்பட்டவர் யார் என்பது? ஆர்.கே. தவானுக்கு முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அல்லது இந்தச் சூழ்ச்சியில் அவருக்கும் பங்கு இருக்க வேண்டும்? கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டவர் அதிலிருந்து மீளுவதற்கும் காங்கிரஸ் கட்சியில் பெரும் பதவிகளை அடுக்கடுக்காக வழங்கியும் உதவவேண்டிய கட்டாயம் என்ன? உதவாவிட்டால் சூழ்ச்சிகள் அம்பலமாகிவிடும் என்ற அச்சம் காரணமா? இந்தக் கேள்விகளுக்கு இதுவரையில் விடை இல்லை.
5. பிரதமர் நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து முக்கியமான கோப்புகள் மறைக்கப்பட்டு அழிக்கப்பட்டன என புது தில்லியில் இருந்து வெளிவரும் அவுட்லுக் வார ஏடு (24-11-97) ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியது.  காணாமல் போன கோப்புகளில்  என்ன இருந்தது? ராஜீவ் கொலை நடந்த அன்று சந்திரசாமியும், சுப்பிரமணிய சாமியும் எங்கே போனார்கள் என்ன செய்தார்கள் என்ற விவரங்கள் இருந்தன. கொலையாளிகளுக்குத் தேவையானப் பணத்தை சந்திராசாமியே கொடுத்தார் என்பதற்கான ஆவணங்கள் இருந்தன. என அவுட்லுக் ஏடு குற்றம்சாட்டியது. இதற்கு அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்?6. திருப்பெரும்புதூர் கூட்டத்திற்கு ராஜீவ் காந்தியைக் கட்டாயப்படுத்தி வரவழைத்த மரகதம் சந்திரசேகர்  குறித்து பல புகார்கள் எழுந்தன. எத்தகைய சூழலில் ராஜீவை இக்கூட்டத்திற்கு அவர் வரவழைத்தார் என்பது குறித்தோ அல்லது இந்தப் படுகொலை குறித்தோ மரகதம் சந்திரசேகரிடம் இதுவரை சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணை நடத்தாதது ஏன்?7. இலங்கை அதிபராக இருந்த பிரேமதாசாவுக்கு ராஜீவ் கொலையில் பங்கு இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது இந்த கோணத்தில் புலன் விசாரணை நடத்தப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. சிங்களத் தலைவர்களான காமினி திசநாயகா, அதுலத் முதலி, விக்கிரமசிங்கே போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் பிரேமதாசா இருந்தார் என்பது பின்னர் நிருபிக்கப்பட்டது. இந்தியப் படையைத் திரும்பப் பெறுவதற்கு ராஜீவ் மறுத்தக் காரணத்தினால் கடுங்கோபம் அடைந்திருந்த பிரேமதாசா ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடாது என்ற கேள்விக்குரிய பதிலை புலன்விசாரணைக்குழு அறிவதற்கு எத்தகைய முயற்சியும் செய்யாதது ஏன்?
8. ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சி.பி.ஐ. அதிகாரியான cகுமார் என்பவர் இலண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டன் ஹீத்திரு விமான நிலையத்தில் இந்த வழக்குத் தொடர்பான கோப்புகள் அடங்கிய அவரது கைப்பெட்டி காணாமல் போய்விட்டதாக அந்த விமான நிலைய காவல்நிலையத்தில் ஒரு புகாரைப் பதிவுசெய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். முக்கியக் கோப்புகளை தொலைத்த அந்த அதிகாரிமீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? காணாமல் போன கோப்புகளை திரும்பப்பெற ஏன் மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளுக்கு இதுவரை விடையில்லை.
இதுபோன்ற பல உண்மையான சந்தேகங்களுக்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது சி.பி.ஐ. தரப்பிலிருந்தோ எத்தகைய விளக்கமும் அளிக்கப்படவில்லை. புலன் விசாரணையின் தொடக்கக் கட்டத்திலிருந்தே விடுதலைப்புலிகள்தான் இந்தக் கொலையைச் செய்தவர்கள் என தீர்மானித்துக்கொண்டு அந்த அடிப்படையில் விசாரணையும் பிறகு வழக்கும் நடத்தப்பட்டனவே தவிர உண்மையை அறியும் நோக்கத்தில் நடத்தப்படவில்லை.குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் தடா நீதிமன்றத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் கூறமுடியாமல் சி.பி.ஐ. தரப்பு திணறிய விவரங்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டன. இதற்காகத்தான் இந்த விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது.26 பேர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்துச்சென்று நடத்திய குழுவின் தலைவர் என்ற முறையில் நான் இதைக் கூறுகிறேன். தடாச்சட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என எங்கள் தரப்பு வழக்கறிஞர் என்.நடராசன் வாதாடியபோது 3 நீதிபதிகளும் திகைப்புடன் அவர் கூறியதற்குச் செவிமடுத்தார்கள். சி.பி.ஐ. தரப்போ பதறியது. இறுதியாக எங்கள் வழக்கறிஞரின் வாதம் வென்றது. தடாசட்டத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் 19 பேரை குற்றம் அற்றவர்கள் என விடுதலை செய்தது. 
அப்படியானால் தடாச்சட்டத்தின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்  செல்லாததுதானே. அப்படிப்பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தானே மூவர் இன்னமும் தூக்கு மேடையின் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலே நான் குறிப்பிட்ட கேள்விகளுக்குரிய விடைகள் முழுமையாக வெளிவந்தால் இந்த மூவரும் இன்னும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிற நான்கு பேரும் குற்றம் அற்றவர்களாக வெளிவரத்தானே செய்வார்கள்.
சி.பி.ஐ. புலன்விசாரணைக் குழுவின் தலைமை அதிகாரியாக செயல்பட்ட ரகோத்தமன் எழுதிய நூலில் புலன்விசாரணை உண்மையாகவும் முழுமையாகவும் நடைபெறவில்லை என ஒப்புக்கொண்டுள்ளாரே? அதற்கு முன்னாள் அதே புலன்விசாரணைக் குழுவில் ஆய்வாளராக பணியாற்றிய மோகன்ராஜ் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என பகிரங்கமாகக் குற்றம்சாட்டிவிட்டு தனது பதவியில் இருந்து விலகினாரே? ஏன்? அடுக்கடுக்கான இந்த வினாக்களுக்கு இதுவரை விடை இல்லை.
மாணவர் காங்கிரசின் துடிப்புள்ள இளைஞராக வேலுசாமி இயங்கிய காலத்திலிருந்து நான் அவரை அறிவேன். தலைவர் காமராசர் மீது அளவற்ற பக்தி கொண்டு அவரது தொண்டராக அன்றும் இன்றும் விளங்கி வருகிறார். அதனால்தான் உண்மைக்காகப் போராடும் துணிவும், சத்திய ஆவேசமும் அவரிடம் குடிகொண்டிருக்கின்றன. அந்த உணர்வுகளால் உந்தித் தள்ளப்பட்டு, தான் அறிந்த உண்மைகளை இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். அதற்காக அவரை மனமாறப் பாராட்டுகிறேன்.
சந்திரசாமிக்கும், சுப்பிரமணியசாமிக்கும் ராஜீவ் படுகொலையில் நிச்சயமாகப் பங்கு உண்டு என்பதை பல்லாண்டு காலமாக ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிவரும் நண்பர் வேலுசாமியின் இந்த நூல் திறவாத விழிகளையும் திறக்க வைக்கும். சிந்திக்காதவர்களையும் சிந்திக்கவைக்கும் என நம்புகிறேன்.

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

காவிரியில் தமிழக அரசு கோரும் தண்ணீரை திறந்து விடக் கோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.

கர்நாடக அணைகளில் இப்போதுள்ள 80 டி.எம்.சி. தண்ணீரில் தமிழக அரசு கோரியுள்ள 30 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும். தண்ணீர் இன்றி கருகிப் போன சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,

வேளாண்மைக்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.

தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய பேரணியை தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி கீழ்ப்பாலம், ரயிலடி, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் வழியாக ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் முடிவடைந்தது.

இதில்,மத்திய அரசு, பிரதமர், கர்நாடக அரசுக்கு எதிராகவும், காவிரியில் தண்ணீர் விட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மதிமுக துணைப் பொதுச் செயலர் துரை. பாலகிருஷ்ணன், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலர் அய்யானாபுரம் சி. முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ. நல்லதுரை, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலர் தெ. காசிநாதன், வோளாண்மை உழவர் இயக்கம் கோ. திருநாவுக்கரசு, இயற்கை வேளாண்மை உழவர் இயக்கத் தலைவர் கே.கே.ஆர். லெனின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
தொடரட்டும் இந்த ஒற்றுமை!

காவிரி பிரச்னை என்றாலே... கர்நாடகத்தின் மைசூர், மாண்டியா பகுதி விவசாயிகள் மிகவும் ஒற்றுமையோடு தங்கள் எதிர்ப்பைக் காட்டுவார்கள். ஆனால், தமிழகத்தில் அரசியல் உள்ளிட்ட பற்பல காரணங்களால் அந்த ஒற்றுமையை பார்க்க முடியாமலே

இருந்து வந்த நிலை, தற்போது மாற ஆரம்பித்துள்ளது. சமீப காலங்களாக அந்தப் பகுதி மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஒற்றுமை... வியக்க வைக்கிறது.
 பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறது 'காவிரி உரிமை மீட்புக்குழு'. இக்குழுவில் அனைத்து விவசாய சங்கங்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!