|
உறவுகளே நாம் செய்த தவறு என்ன?
எமது தாயகத்தில் நாம் அமைதியோடு வாழ ஆசைப்பட்டது தவறா? சுதந்திர உணர்வுள்ளவராக - மனித நேயத்தோடு - மானிட தர்மம் கண்டு நாம் வாழவே முடியாதா? - அன்னியனுக்கு தலை வணங்காது வாழ்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? இன்றைய காலம் பொழுது போக்கிற்கான - கருத்து நிலைக் காலமல்ல - துடித்தெழுந்து செயற்படவேண்டிய வேளை இது - அன்னியன் எமது உரிமையைத் தீர்மானிக்க விடுவதா உறவுகளே? - வாதங்களையும் - கருத்துக்களையும் - முன் வைத்து மக்களைக் ஓரணியாக்கி - ஒன்றாகிச் செயற்படுவோம். இன்றைய காலம் எமதாக - விடியல் காண விரைந்துசெயற்படுவோம் - வாருங்கள் - கடந்த காலம் மீளாது - நிகழ்காலத்தை நியமாக்க - உறுதி கொண்டு - உணர்வு கொண்டு - தாயக மக்களினதும் - புலம் பெயர்ந்த - எமது நிலையற்ற வாழ்வினூடாக - தாயகத்தை மீட்டெடுக்க - தடை தாண்டி வாருங்கள். தாயகமும் - தமிழ்மொழியும் எமதுதான் - மட்டுமல்ல - நீயும் - நானும் உறவுதான் - உனக்கும் - எனக்கும் - உணர்வும் - உற்றம் - சுற்றம் - வாழுமிடம் - வாழ்வாதாரம் - எல்லாமே ஒன்றுதான் - எம்மைக் காக்க - தம்மைத் தந்த - உத்தமர்களின் உணர்வுகளோடு - நாம் உண்மை காக்கப் புறப்படுவோம். இன்றைய காலம் உனதும் - எனதும் - வேற்றுமைகளை மறந்துவிடுவோம் - விட்டுக்கொடுத்து - தடை தாண்டி - முன்னேறுவோம் - உறவுகளே ஓரணியாக - ஓர்குரலாக உரிமைக்காக ஒன்றுபடுவோம் - தலைவனின் பாதையில் - உலகத்தை அரவணைத்து - தாயகத்தை மீட்டெடுப்போம். இது வசந்தம் காலமல்ல - போர் மேகம் சூழ்ந்த தேசத்தின் - புது விடியலுக்கான காலம் இது - உனது கைகளில் தவிக்கிறது - தூக்கி வீசிவிடாதே - அன்போடு அரவணைத்துக்கொள் - மனிதம் உன்னையும் மனிதனாக்கும் - வாலாறு உனக்கும் தலைவணங்கும் தமிழர் தாயகத்தின் வரலாற்றில் நாமும் இணைந்துகொள்வோம். தோப்பூரான் 12.12.12. |
பக்கங்கள்
|
ஞாயிறு, 23 டிசம்பர், 2012
உறவுகளே - இளையோரே - நாம் செய்த தவறு என்ன?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக