மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 24 ஜூன், 2012

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே - படியுங்கள்!


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.

இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!
இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.
பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "Antonio da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார்.
பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples-a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo-might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.
இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!
இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.
நன்றி ! பார்கவி கேசவன்.

புதன், 20 ஜூன், 2012

சர்வதேசத் தரத்தில் வெளிவந்துள்ள நூல் "தினத்தந்தி'' நாளிதழ் பாராட்டு


"விடுதலைப் புலிகள்'' இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. எனினும் பழ. நெடுமாறன், "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற தலைப்பில் எழுதியுள்ள பெரிய புத்தகம் (1208 பக்கங்கள்) தனிச்சிறப்பு வாய்ந்தது.

இலங்கையில் போர் நடந்த காலத்திலேயே, அங்கு பலமுறை சென்று வந்தவர் பழ. நெடுமாறன், போர்க்களத்தை நேரில் கண்டவர். பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய வர். எனவே இலங்கைத் தமிழர் போராட்டம் தொடங்கியது முதல் அண்மைக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை வரலாறும், இதுவரை வெளிவராத பல தகவல் களும் இதில் இடம் பெற்றுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத் தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் களின் படங்களும் இடம் பெற் றுள்ளன. பிரபாகரன் கைப்பட எழுதிய பல முக்கிய கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் போர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள, சர்வதேசத் தரத்துடன் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

நன்றி : "தினத்தந்தி' 23-5-12

ஞாயிறு, 17 ஜூன், 2012

தமிழினப் பகைவர் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி.

குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.
இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது இராமசந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.
கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றதால் போரை நிறுத்துமாறு இந்தியாவின் சார்பாக பிரணாப் முகர்ஜி வலியுறுத்துவார் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்தனர். கொழும்புவில் இலங்கை அதிபர் ராஜபக்சவையும், அவருடைய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல் இருந்தது. போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் போரினால் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது இந்திய அரசு ராஜபக்ச நடத்தும் போருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை புலப்படுத்தியது. அதுவரை போரின் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்று கூறிவந்த இந்திய மத்திய அரசு, போரினால் தீர்விற்கான வழி பிறந்திருக்கிறது என்று கூறியது.
இதுமட்டுமல்ல, இலங்கை உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசியபோது, போர் நடக்கும் பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று எண்ணிக்கையை குறைத்துப் பேசியவர் பிரணாப் முகர்ஜி. உண்மையில் போர் நடந்த பகுதியில் அப்போது இருந்த மக்களின் எண்ணிக்கை 4 இலட்சம் பேர் ஆகும். பிரணாப் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதை அனைத்து உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்தனர். அப்போது பதிலளித்த பிரணாப், இலங்கை அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தான் சொன்னதாக திமிருடன் பதில் கூறினார்.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு பின்னால் நின்று செயல்பட்ட முக்கிய சூத்ரதாரிகளில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தால் அது இலங்கையில் இன அழித்தலுக்கு ஆளான நம் சொந்தங்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.

திங்கள், 11 ஜூன், 2012

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் உலக அளவில் பேசப்படப்போகும் நூல் "ஜூனியர் விகடன்'' பாராட்டு

பிரபாகரன் பற்றி 30 ஆண்டு களுக்கு முன்னால் முதன் முதலாகப் புத்தகம் எழுதியவர் பழ. நெடுமாறன். இன்று முழுமையான புத்தகம் கொடுத்திருப்பதும் அவரே. பிரபாகரன் குறித்து எழுதுவதற்கும் பேசுவதற்கும் சொல்வதற்கும் உரிமையுள்ள சிலர்தான் தமிழகத்தில் உண்டு. அதில் முதன்மையானவர் நெடுமாறன்.
வல்வெட்டித்துறையில் வேலுப் பிள்ளைக்கும் பார்வதி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்து, சிங்களவர் கொடு மையை எதிர்த்துப் போராடுவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கி... தனியான ஒரு சுதந்திர நாட்டை அமைக்கப் போராடிய பிரபாகரனின் பெருமை பாடும் புத்தகம் அல்ல இது. பிரபாகரன் என்கிற தனி மனிதன், தமிழர் எழுச்சியின் வடிவமாக எப்படி உருவெடுக்கிறார் என்பதை வலுவாகச் சொல்கிறார் நெடுமாறன். ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களுக்கு உதாரணமாக உலக அளவில் சொல்லப்படுவது, ஹென்றி வோல்கப் எழுதிய "மார்க்ஸ் பிறந்தார்'. அதே போல் தமிழில் இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். அந்த அளவுக்கு பிரபாகரனின் ஒவ்வோர் அசைவையும் தூரத்தில் இருந்தபடியே துல்லியமாகக் கவனித்து எழுதி இருக்கிறார் நெடுமாறன்.

பிரபாகரனுக்குத் தோள் கொடுத்த தோழர்கள் யார் உடனிருந்து துரோகம் செய்தவர்கள் யார் எளிய மனிதராக வளர்ந்த பிரபாகரன் தத்துவ விசாரணைகள் செய்யும் ஆய்வாளரைப் போல் எப்படி எல்லாம் பேசுவார், உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருக்கும் ஆயுதங்களை வன்னிக் காடுகளுக்குள் வைத்தே தயாரிக்கும் வித்தையை அவர் கற்றது எப்படி, கெரில்லா யுத்தம் மூலமாக சிங்கள அரசாங்கத்துக்கு சிம்ம சொப்பனமாக மாறியது எப்படி?. அந்நாடு அத்தனை படைகளை உருவாக்கியும் அதே அச்சுறுத்தலை தக்கவைத்துக்கொள்ள சாத்தியமானது எவ்வாறு... என்றெல்லாம் நெடுமாறனின் வார்த்தைகளில் படிக்கும் போதே புதிய புறநானூறாக இருக்கிறது.

ஆயுதப் போராட்டத்தில் அழித் தொழிப்புக் காரியங்களுக்கான அவசியக் காரணங்களையும் அந்த பேதத்தை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் உருவாக்கிய விதத்தையும், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மனிதன் இல்லை என்றால் பிரபாகரன் இந்த அளவுக்கு வளர்ந் திருக்க முடியாதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகின்றன பல தகவல்கள்.

ஆயுத பலத்தால் அடக்க முடியாத பிரபாகரனை, பதவி ஆசை காட்டி மயக்க முயன்றபோதும் வித்தி யாசமான மனிதனாய் அவர் வெளிப்பட்டதையும் பார்க்க முடிகிறது.

சங்ககாலத் தமிழ் மன்னர்கள் கூட.. தரைப்படை கப்பல் படை மட்டும்தான் வைத்திருந்தார்கள். வான் படையும் சேர்த்து அமைத்தவர் என்று பிரபகாரனைச் சொல்லும் நெடுமாறன், பெண் படை அணியின் உருவாக்கத்தைப் பெருமிதத்துடன் பதிவு செய்து இருக்கிறார். பிரபாகரனின் நண்பர்கள் சொன்னது மட்டும் அல்ல, எதிரிகள் சொன்னதும் இதில் நிறைய இருக்கின்றன. அத்தனை பேர் புகைப்படங்களையும் தேடித் தேடிச் சேர்த்துள்ளார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாக இதுவரை சொல்லப்பட்ட அத்தனை "பொய்'களையும் வரிசைப்படுத்தும் நெடுமாறன். "மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்' என்ற நம்பிக்கையை விதைக்கும் புத்தகமாக இதனை வடிவமைத்து வழங்கி உள்ளார்.

- புத்தகன்

நன்றி : "ஜூனியர் விகடன்' 23-5-12

ஞாயிறு, 10 ஜூன், 2012

"மார்க்சியத்திடமிருந்து பிரபாகரன் பெற்ற மாவீரம்'' நூல் அறிமுக விழாவில் மகேந்திரன் முழக்கம்

சோசலிசத் தமிழீழத்தை பெறுவதற்கான போராட்டத்தின் உத்வேகத்தை பிரபாகரன் மார்க்சியத்திலிருந்தும் பொதுவுடைமையிலிருந்தும்தான் பெற்றி ருப்பார் என நான் நம்புகிறேன்' என்று கம்யூனிஸ்டுக் கட்சியின் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் குறிப்பிட்டார். 17-04-12 அன்று மதுரையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியதாவது:
நான் பொதுவுடைமை இயக்கத் தின் சார்பில் வாழ்த்துக் கூற ஒரு அடிப் படைக் காரணம் இருக்கிறது. பெருமைக் குரிய சோசலிச தமிழீழத்தைப் பெற வேண்டும் என்ற போராட்டத்தின் உத்வேகத்தை பிரபாகரன் எங்கிருந்து பெற்றிருப்பார் என்று நான் மீண்டும் மீண்டும் அலசி ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மார்க்சியத்திலிருந்தும் பொதுவுடைமையிலிருந்தும் தான் அந்த மாபெரும் வீரத்தைப் பெற்று அது தமிழீழமாக மலர வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டியிருக்கும் என்று நான் கருதுகிறேன்.

பழ.நெடுமாறன் அவர்களுடைய பெருமைகள் பற்றி எல்லாம் இந்த மேடையில் பேசப்பட்டது. உள்ளபடியே நான் இந்த நூலை வாசித்து முடித்த போது, தமிழகத்தின் அடுத்த தலை முறையைப் பற்றிய அக்கறையையும் நம்முடைய காலத்திலேயே தமிழீழத் திற்கு முழுமையான விடுதலை கிடைக்க வேண்டும் என்ற உணர்ச்சியைச் சாத்தியப்படுத்தக்கூடிய அனைத்து அம்சங்களையும் கொண்ட நூலாகத் தான் நான் இதைக் கருதுகிறேன்.

இதைச் சொல்கிற போது நான் மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்பதை மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. மார்க்சிய அடிப்படையிலே - பொதுவுடைமைக் கொள்கை அடிப்படையிலே - தமிழகத் தின் பொதுவான பாரம்பரியததின் அடிப் படையிலே ஆராய்ந்து நோக்குகின்ற போது, எதிர்காலத் தமிழர்கள் வீறு கொள்வதற்கு - தமிழர்கள் உணர்ச்சி கொள்வதற்கு - தமிழர்கள் சோசலிசம் நோக்கி நகர்வதற்கு இதைவிட சம காலத்து நூல் வேறு எதுவும் இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு இந்த நூல் உள்ளது. என்பதை மீண்டும் அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். (கைதட்டல்)

இந்த நூலின் அனைத்து அம்சங்களையும் உற்றுப் பார்க்கிறபோது கிட்டத்தட்ட இந்த நூலைப் படித்துப் பார்க்கிற போது மிகச் சிறப்பான அணுகுமுறை இந்த நூலில் உள்ளது. பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார். ஒரு நூல் என்று சொன்னால் அது கூறுகின்ற கருத்து, அந்த நூல் தொகுக்கப்பட்ட விதம் இவைகள் தான் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றார். அந்த அடிப்படையில் பார்க்கிற போது அந்த நூலை அவர் தொகுத்திருக்கிற விதமும் கூறப்படும் கருத்துகளும் பாராட்டுக் குரியன. பிரபாகரன் அவர்களுடைய அடிப்படையான பெருமை என்ன, அரசியல் என்ன என்பதை அவருடைய பேட்டியின் மூலமாகவே கூறுகிறார். அவரைச் சந்தித்த அனுபவம் எப்படிப் பட்டது என்பதைச் சொல்கிறார். அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டி யிலே அந்த இலட்சியவாதி தன்னுடைய வாழ்வின் இலட்சியம் என்ன என்பதைப் பற்றிக் குறிப்பிட்டதையும் எழுதி யியிருக்கிறார்.

இங்கே நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது பிரபாகரன் அவர் களுக்கு இயற்கைதான் நட்பு; அவருக்கு யார் நட்பு என்று சொன்னால் யார் உறவு என்று சொன்னால் இயற்கைதான் அவருக்கு உறவு.

அதைப்போல இரண்டாவதாக அவர் குறிப்பிடுவது "வாழ்க்கை என்பது என்னுடைய தத்துவ ஆசிரியர் "வாழ்க் கைதான் அவருக்குத் தத்துவத்தைக் கற்றுக் கொடுத்தது.

மூன்றாவதாக அவர் கூறுகிறார் - "வாழ்நாள்தான் என் வழி காட்டி''. இந்த மூன்று அம்சங்களையும் குறிப் பிடுகிறார். அந்த பேட்டியின் அடிப் படையில் இந்து பத்திரிகையின் நிருபர் உங்கள் சித்தாந்தம் என்ன? என்று கேட்கிறபோது என்னுடைய சித்தாந்தம் என்பது இலங்கையில் உள்ள சிங்களர் களை வெற்றி கொள்வது என்னுடைய சித்தாந்தம் அல்ல. அல்லது சிங்களரு டைய பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது தன்னுடைய சித் தாந்தம் என்று அவர் குறிப்பிடவில்லை. அவர் கூறுவது தமிழ் ஈழத்தில் புரட்சிகர சோசலிசத்தை உருவாக்குவதுதான் என் வாழ்வின் இலட்சியம் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். (கைதட்டல்)

சாதாரணமாக பிரபாகரன் என்றால் ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்று கூறுவார்கள்-ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர மனித வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர சயனைட் குப்பிகளைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு எதையுமே அறிந்திராதவர் பிரபாகரன் என்று உலகம் பூராவும் பரப்பப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுக்கான தத்துவம் எது என்று சொன்னால் அது புரட்சிகர சோச லிசம் தான் என்று சொல்லுகிற போது அதைவிட வேறு அரசியல் கட்டாயம் இருக்க முடியாது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய பேட்டியின் எல்லா அம்சங்களையும் பார்த்தால் புரட்சியைப் பற்றிப் பார்க்கிற போது அதன் தாக் கத்தைப் பற்றிப் பார்க்கிற போது அது சமகாலத்தில் எப்படிச் செயல்பட்டிருக் கிறது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும். 1947க்கு முன்பு இந்தியாவில் நடத்தப்பட்ட அத்தனை இயக்கங்களும் வெள்ளைக்காரர்களை எதிர்த்து நடத்தப்பட்ட அத்தனை இயக்கங்களும் வெள்ளைக்காரர்களால் ஒரு பயங்கர வாத இயக்கமாகத்தான் கருதப்பட்டது. பகத்சிங் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியது - இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் நடத்திய புரட்சி, - எதை எடுத்து நீங்கள் பார்த்தாலும் சரி ஆங்கில வரலாற்றைப் பார்த்தாலும் சரி அவைகள் எல்லாம் பயங்கரவாதம் என்று தான் குறிப்பிடப் பட்டது. சுதந்திரம் பெற்ற பிறகு அந்த வரலாறு மீண்டும் மறுபரிசீலனை செய் யப்பட்டது. மீண்டும் உற்றுப் பார்க்கிறது. எப்படி பொய்யான தகவல்கள் சேர்க்கப் பட்டுள்ளன என்பதையெல்லாம் அலசிப் பார்த்து மீண்டும் தீர்ப்பு கூறப்பட்டது. சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு புனிதமான பங்களிப்பு பகத்சிங் போரா டிய போராட்டம் என்று பதிவு செய்யப் பட்டது. அதைப் பதிவு செய்தார்கள்

அதைப்போலத்தான் பழ நெடு மாறன் அவர்கள் எழுதிய புத்தகம் என் பது விடுதலைப்புலிகளின் இயக்கத்தை யும் மாவீரன் பிரபாகரன் வரலாற்றையும் - எவ்வாறெல்லம் புனைந்துரைகள் உள்ளன என்பதைப் பார்த்து அவற்றை எல்லாம் அகற்றி விட்டு அதில் மறைந் திருக்கக் கூடிய புனிதத்தை கண்டறியக் கூடிய புதிய நூலாக இது உள்ளது.

ஐயா அவர்கள் 1200 பக்கங்கள் - 1200 பக்கங்கள் என்று சொன்னாலும் கூட 1988ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சிகளை 126 பக்கங்களிலே அவர் எழுதியிருக்கிறார். விளக்கங்கள் கூட கொடுத்துள்ளார். இந்த நூலில் 91 அதி காரங்கள் - அத்தியாயங்கள் உள்ளன. நான்கு இணைப்புகள் இருக்கின்றன . ஒரு முழுமையான நூல். இந்தமாதிரி ஒரு நூலை 1200 பக்கங்களிலே எந்த விதமான சங்கடமும் - சிக்கலற்ற முறையில் சிரமம் இல்லாமல் படிப்பதற்கு ஐயா பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் கூறியதைப் போலமிக அழகிய தமிழில் இலக்கியச் சுவை குன்றாமல் எழுதக்கூடிய நீண்ட அனுபவம் ஐயாவுக்கு இருக்கிறது.

இப்படி பழ.நெடுமாறன் ஐயா வால் தான் எழுத முடியும். உலகத்தில் பல சிறந்த அம்சங்களை உள்ளடக்கிய நூலாக இது வெளிவந்துள்ளது. மிக அடிப்படையான காரணம் அவருடைய உழைப்பு என்றாலும் அவருடைய அனுபவம் ஒரு காரணம் என்று சொன் னாலும் எல்லாவற்றையும்விட ஒரு மாவீரனை நம் முன் நிறுத்தியிருப்பது தமிழகத்தில் யாருக்கும் இல்லாத மிகச்சிறந்த நேர்மைதான் என்பது ஒரு காரணம். (கைதட்டல்)

பிரபாகரனைப் பற்றி புகழுவதற் காக பழ.நெடுமாறன் ஐயா இந்த புத்த கத்தை எழுதி இருக்கிறாரா? ஏனெனில் அவரைப் பற்றி பத்திரிகைகளில் பார்க் கும் போது அவர்கள் சித்தரிக்கும் விதம் எப்படி இருக்கிறது? விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிப்பவர் என்ற வகையில்தான் காட்டுகிறார்கள். ஆனால் அப்படி அல்ல. தமிழ்நாட்டின் வரலாற்றை எடுத்துக்கொண்டு பார்த்தால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்களுக்காக தன்னுடைய உயிரே போனாலும் தன்னுடைய உடல்நலமே போனாலும் தன்னுடைய குடும்பமே அழிந்தாலும் தன்னுடைய எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டேன் என்று தமிழ் மண்ணில் போராடும் தலைவர் யார் என்று சொன்னால் ஐயா பழ.நெடுமாறன்தான். (கைதட்டல்)

தமிழகத்தில் மூதத அரசியல் வாதி. பழம் அரசியல்வாதி. முன்னாள் முதல்வரை விட அரசியலில் தைரியத் தில் கல்வித் தகுதியில் உயர்வு இருக் கிறது. இருந்தாலும்கூட ஐயா அவர்கள் இவ்வளவு சிறப்பு மிக்க இந்த நூலை எழுதியிருப்பதற்கு அடுத்த தலைமுறை யைப் பற்றி அவரிடம் உள்ள ஏக்கம்தான் காரணம். அதில் எந்தப் புகழ்ச்சியையும் பார்க்க முடியவில்லை. மிகைப்படுத்தி கூறப்பட்டது பொய்யானது என்ற மரபு எதுவுமே இல்லை. ஒட்டு மொத்தத்தில் அதில் உண்மையை மட்டும்தான் பார்க்க முடிகிறது. அந்த உண்மையில் இருந்து புறப்பட்டிருக்கிற அந்த வீரியத்தைத்தான் காணமுடியும். வீரத்தை உருவாக்கக் கூடிய வலிமை பொருந்திய மாற்றத்தை உருவாக்கக் கூடிய கருத்துகளைத் தான் இந்த நூலில் பார்க்க முடியும்.

ஆயுதம் ஏந்துகிறார்கள் - ஆயுதம் ஏந்திய போராட்டம் என்கிறார் கள். துப்பாக்கிகள் - ஏ.கே.47 போன்ற ஆயுதங்கள் எதற்கு என்றால் ஆயுதங் களுக்காக ஆயுதங்கள் அல்ல. அரசி யலுக்காகத்தான். அதனால்தான் இந்த நூலில் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போசு அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? இந்த

நூலில் அதைக் காண முடிகிறது. பொது வுடைமைச் சிந்தனைகளைக் காண முடிகிறது. 400 ஆண்டுகளல்ல 500 ஆண்டுகளானாலும் அந்த ஈழத் தமிழர் களைத் தோற்கடிக்க முடியாது என்ற ஒரு வீரத்தை, ஒரு தத்துவத்தை ஒரு பாதையை எப்படி உருவாக்கிக் காட்டி யிருக்கிறார் பிரபாகரன் என்பதைத் தான் மிகச் சிறப்பாக இந்த நூலிலே காண முடிகிறது. நமக்கே ஒரு பிரமிப்பு ஏற் படும் வகையில் தொகுத்து எழுதி யிருக்கிறார்.

இந்த நூல் கிட்டத்தட்ட ஒரு நாவல் மாதிரி இருக்கிறது. ஐயா அவர்கள் மிகச் சிறந்த நாவலை எழுத முடியும் என்ற நம்பிக்கையையும் இந்த நூல் எனக்கு அளிக்கிறது. துவக்கம் அது தான் தொடங்குகிற இடம் எது என்றால் நம்முடைய சென்னையில் உள்ள மத்திய சிறைச்சாலை. நூலின் துவக்கம் அங்கே தான் உள்ளது. நான்கு இளைஞர்களைப் பார்ப்பதற்காகச் செல்கிறார். அந்த நான்கு இளைஞர்கள் யார் என்று கேட்டீர்களேயானால் விடு தலைப்புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர் கள். அந்த விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களுள் இவருடைய கண் ஒருவரை நோக்கிக் குறிப்பாகப் பார்க்கிறது. அந்த நான்கு பேரில் ஒருத்தர் பிரபாகரன். அந்த பிரபாகரன் யார் என்று தேடுகிறார் இவர். ஒருவர் வந்து சொல்கிறார். நான்தான் பிரபாகரன். நான் உங்களை இளங்குமரன் என்னும் பேபிசுப்பிரமணித்துடன் வந்து நான் உங்களைச் சந்தித்து இருக்கிறேன். அப்போ எல்லாம் நான் யார் என்று உங்களிடம் சொல்லவில்லை. அதற்காக நீங்கள் என்னை மன்னித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார் அவர். இரண்டு மூன்று நாட்கள் பிரபாகரனைப் பற்றிய சிந்தனை இவருக்கு. இப்படி ஒரு இளைஞனா? நம் கூடவே இருந்திருக் கிறான். பிரபாகரன் யார் யார் என்று கேட்கும் போது தான் நான் தான் பிரபாகரன் என்று சொல்லக்கூடிய ஒருவன் இயக்கத்தை ஒரு இரகசியத்தை தன்னுள் வைத்திருக்கக் கூடிய தெளி வான ஒரு இளைஞனோடு நாம் பழகி யிருக்கிறோமே - என்ற சிந்தனையுடன் இருக்கிறார். அதுதான் தொடக்கம் இந்த நூலுக்கு.

அதைப் படித்த உடனேயே இரண்டு மூன்று பக்கங்களில் ஒரு பொய்யை உருவாக்கி விடுவார்கள். இதை பின்னணியாக வைத்தே பல ஆசிரியர்கள் கதையை பின்னிவிடு வார்கள். ஆனால் இவரோ அதைத் துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அதிலிருந்து தொடங்கி கடைசியில் மரணத்தை வென்றவன் என்று முடிக்கிற வரையில் ஒருங்கிணைந்த மனத்தோடு சொல்கிறார். எந்தத் தடையும் இல்லாமல் கடினமான விஷயத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டால் முடிந்திருக் கிறது என்பது தெரிகிறது. ஒன்றுக்குள் ஒன்று மற்றொன்றுக்குள் ஒன்று எனத் தொடர்கிறது இவ்வளவு கடினமான விஷயத்தைச் சொல்ல முடியுமா என்று சொன்னால் அவருடைய உழைப்பு இதில் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அதில் இருக்கக் கூடிய மென்மையான பகுதி இது.

இந்த மதுரை மாநகரில்தான் சங்கரின் மரணம் நிகழ்கிறது. சங்கர் ஈழ மண்ணில் போரில் தாக்கப்பட்டு குற்று யிராக குலையுயிராக இங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகிறார். சேர்ப்பதற்கு முன்பு ஐயா பழ.நெடுமாறன் அவர்க ளிடம் பிரபாகரன் நேரடியாக ஒரு வாகனம் வேண்டும் என்று கேட்கிறார் கள். வாகனத்தை எடுத்துக்கொண்டு வேளாங்கண்ணிக்குச் சென்று அவரைக் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் யார் என்று கேட்க, அவர் உறவு முறையைக் கேட்கிறார்கள். தம்பி தம்பி என்று சொல்கிறார். இந்த தகவல் பிரபாகரனுக்குத் தரப்படுகிறது. பிரபா கரன் ஓடோடி வருகிறார். சங்கரை அவர் மடியில் கிடத்துகிறார். மடியில் சங்கரின் உயிர் பிரிகிறது. ஒன்றை நாம் இதில் பார்க்க வேண்டும் ஆயிரம் போரை ஆயிரம் யுத்தத்தை நாம் பார்க்கலாம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு. எல்லையில்லா அந்த அன்பு.- இன்றும் நான் சொல்கிறேன். இந்த அன்பும் இந்த உணர்வும் இந்த தோரணையைத்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தினுடைய யாராலும் அழிக்க முடியாத சக்திவாய்ந்த ஆயுதம்- பலம் என்று சொல்வேன். (கைதட்டல்)

அதே தோரணையைத் தான் சங்கரைத் தன் மடியில் கிடத்தி அந்த உயிர் பிரிகிற அந்தத் தருணம் அந்த சங்கமத்தைப் பார்த்தேன். அந்த உணர்வுகளின் சங்கமத்தைப் பார்த்தே அதை மிகச் சிறப்பாக ஐயா அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ரொம்ப அபூர்வமானது. அதேபோல நம் அருமைத்தங்கை உமா என்ற பூங்குழலியுடன் விளையாடி கொஞ்சி மாமா என்ற உரிமையுடன் நடந்து கொண்டது. இதெல்லாம் 82 83களில் நிகழ்ந்த அந்தப் பாசத்தை மறக்காமல் -எவ் வளவு போர்ச்சூழல் நடுவே தினம் தினம் செத்துப் பிழைக்கிற ஒரு காலகட்டத்தில் ஐயா நெடுமாறன் அவர்கள் இதை நினைவில் வைத் திருப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் அவருடைய குழந்தை விளையாடிய அந்த அன்பு பாசம் எதையும் மறக்கா மல் ஐயா. கொழும்பு சென்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பும் நேரத்தில் அரசியல் பிரிவின் தலைவர் நடேசன் வந்து ஒரு சின்ன அன்பளிப்பைக் கொடுக்கிறார். அதில் ஒரு ஆயத்த ஆடையும் நோட்டுப் புத்தகமும் இருக்கிறது. அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் குறிப்பை - குறிப்புகளை எழுதுமாறு கூறி உமாவுக்கு அன்பு மாமா பிரபாகரன் அனுப்பியது என பிரபாகரனின் கையெழுத்துடன் இருக்கிறது. அது தான் வாழ்க்கை. ஒரு புரட்சிக்காரனின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும். அவர் பெருமைக்காக உலகத்தை ஆளவேண்டும் என்று நினைக்க வில்லை. அன்பால் அனைவரையும் வென்றெடுக்க வேண்டும் என்பது தான் அவர் கொள்கை. மிகத் தலைசிறந்த கொள்கை. அதில் கடைசிவரை நின்றான். சிங்களன் தமிழன் என்ற வேறுபாடு கிடையாது. சிங்களப் பெண்ணை ஒரு வீரன் பாலியல் பலாத்காரம் செய்தான் என்றால் உடனே தண்டனை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது அவரிடம்.

நச்சுக்குப்பியும் - ஜே.வி.பி. இயக்கமும்

அங்கு அடக்குமுறை ஒடுக்கு முறை மோதல் எல்லாம் தடை செய்யப் பட்டிருந்தது. . சயனைட் குப்பி பற்றிச் சொல்லுகிற போது அதை அணிந்து கொண்டு மரணத்தை வெல்லுவேன் என்ற மாவீரத்தோடு அவர்கள் செல்லு கிறார்கள். - பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் கூறியதைப் போல தாங்கள் செல்லும் போது துப்பாக்கியுடன் மட்டும் செல்லவில்லை. சவப்பெட்டியுடன் செல்லுகிறோம் என்று கூறுவார்கள் அந்த வீரர்கள். சயனைட் குப்பியுடன் செல்கிறோம் என்ற உணர்வு அவர்களி டம் உள்ளது.. இந்த சயனைட் குப்பி இருக்கிறதே விடுதலை தான் எங்கள் இலட்சியம். அந்த இலட்சியத்திற்காகத் தான் நாங்கள் போராடுகிறோம். அதற் காகத் தான் நாங்கள் போராடுகிறோம் என பிரபாகரன் கூறியதைக் கேலிசெய்த ஜே.வி.பி. இயக்கத் தலைவர் ரோகண விஜயவீராவின் செயலாளராக இருந்த மெண்டிஸ் என்பவர் பின்வருமாறு கூறினார்.

நான் ஆரம்பத்தில் இந்த சயனைட் குப்பிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை. எங்கள் தலைவர் ரோகண விஜய வீராவிடம் சயனைட் குப்பி இருந்திருக்குமானால் அவர் இராணுவத்திடம் உயிரோடு சிக்கி யிருக்க நேர்ந்திருக்காது. சித்ரவதை களைத் தாங்கமுடியாமல் இயக்க முன்னணி யினரைக் காட்டிக்கொடுக்க நேர்ந்திராது. எமது இயக்கமும் அழிந் திராது' என்று மனந்திறந்து கூறினார்.

விடுதலைப் புலிகளின் போராட் டம் ஒரு தனித்துவம் வாய்ந்த போராட் டம். முதலில் 50000 பேரும் பின்னர் இலட்சக்கணக்கான பேரும் முள்ளி வாய்க்காலில் இறந்து போனார்கள். ஆனாலும் அந்த போராட்டத்தின் வலிமை என்ன ஆச்சு? கொல்லப்பட்டாலும் இன்று உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பிரபஞ்சம் முழுவதும் இருக்கக் கூடிய மக்கள் ஈழமக்களுக்கான அரசி யல் தீர்வை பெற்றுத்தான் கொடுத்துத் தான் தீர வேண்டும் என்னும் புதிய அர சியல் சூழ்நிலை உண்டாகி இருக்கிறது.

2008ம் ஆண்டு உலகம் ஈழ மக்களைப் பற்றி எவ்வாறெல்லாம் விமர்சித்து இருப்பார்கள்? இப்போது உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் மனித உரிமைக்காக மக்கள் உரிமைக்காக ஈழ விடுதலைக்காக ஒன்றுகூடியிருக்கிற ஒரு புதிய சகாப்தம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்தப் போராட்டத்தின் வலிமையைப் பற்றிய ஒவ்வொரு கண்ணோட்டத்தையும் நாம் பார்க்க வேண்டும். அதைப்பற்றிய விளக்கங்கள் ஆயிரம் ஆயிரம் இந்த நூலிலே இருக்கிறது. நேரமாகி விட்டது. நான் இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இரத்தினச் சுருக்கமாக நான் உங்களிடம் சொல்லிக் கொள்வது இது ஒரு வரலாற்று நூல் என்பது மட்டும் அல்ல - ஒரு வரலாற்றுப் பெட்டகமா என்றால் இல்லை - தமிழ்நாட்டுக்கான அடுத்த தலைமுறை விடுதலை பெறுவதற்கான தலைசிறந்த ஆயுதம் இது. (பலத்த கைதட்டல்)

இந்திய அரசியலில் தமிழர்கள் நிலை என்ன? இதற்கு முன்பு நாம் பேசிய தேசியத்தை வைத்திருக்கப் போகிறோமா? அல்லது 25 சதவீதம் இராணுவத்திற்குச் செலவு செய்து இந்திய தேசியம் வளரப் போகிறதா? ஒட்டு மொத்த இந்தியாவுக்கான ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டுமா? இந்தியாவை உடைக்கிறது பிரிக்கிறது என்ற கேள்வியே இல்லை.

இன்றைக்கும் பார்த்தால் வட இந்தியாவில் இந்தி மொழி பேசப் படுகிறது. 200-300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தி மொழி வளர்ச்சி இல்லை. இப்பொழுது வளர்ந்துள்ளது. இதனால் என்ன ஆச்சு? பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்பட்ட புகழ்பெற்ற பாலி மொழி. போசுபூரி, மைதிலி மொழி கள் அழிக்கப்பட்டன. அந்த இளைஞர் கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். என் மொழி எங்கே என்று இப்போது கேட்கிறார்கள்.

ஏன் தமிழ் மொழி மீது அவர் களுக்குக் கோபம் வருகிறது என்றால் 2000 ஆண்டுகளாக தேவநாகரி என்றும் தற்போது சமசுகிருதம் என்று சொல் கிறார்களே அந்த மொழியை தைரிய மாக எதிர்த்து இன்று வரை உயிரோடு இருக்கும் ஒரே மொழி நம் மொழி தான்.(பலத்த கைதட்டல்( தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன இலங்கையில். யாரும் கவனிக்கவில்லை. ஆனால் 2000 ஆண்டு காலமாக சமசு கிருதத்தை எதிர்த்து நிற்கிற அல்லது இன்று ஆட்சிமொழியாகத் துடிக்கும் இந்தியை எதிர்த்து நிற்கிற ஆதிக்கத்தை எதிர்த்து நிற்கிற ஒரே மக்கள் தமிழ் மக்கள் தான். அதனால் தான் சுதந்திரத் தைப் பற்றிப் பேசுகிற போது தமிழர் களைப் பற்றி பேசவேண்டி இருக்கிறது. அதனால் தான் ஈழ விடுதலை என்பது அல்லது ஈழமக்களின் விடுதலைப் போராட்டம் என்பது தமிழகத்தில் ஒரு சரியான இடத்தைப் பெற்று இருக்கிறது. போராட்டத்தோடு இணைந்து நிற்பவர் கள் தமிழர்கள் என்பதை நான் பார்க்கிறேன்.

மாற்றத்திற்கு வித்திடும் நூல்

இரத்தமும் சதையுமாக தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உயிரைக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்கள் சாத்தியப் படுத்த முடியும். அந்த மாற்றத்திற்கான அடிப்படை இந்த நூலில் இருக்கிறது. உலக வரலாற்றில் ஒரு உணர்வு ஊட் டக்கூடிய வகையில் தமிழகத்தில் இருக் கக்கூடியவர்களை உணர்வு உள்ளவர் களாக உருவாக்க வேண்டும் என்றால் ஐயா பழ நெடுமாறன் அவர்கள் எழுதிய இந்த நூலால் முடியும். இப்படிப்பட்ட நூல்களைக் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு தொடர்ந்து எழுதவேண்டும். வெறும் வாழ்க ஒழிக என்ற கோசம் மட்டும் அரசியலாகிவிடாது. (கைதட்டல்).

விடுதலைக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. சமத்துவம் அதற்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் கிடையாது. அதைத்தான் அந்த போராட்டங்கள் அனைத்தும் நமக்கு வலியுறுத்துகிறது. இந்த நூலைத் திருப்பித் திருப்பிப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. ஒரு தடவை தான் படிக்க முடிந்தது. குறிப்பு கள் எடுத்தேன். அந்த குறிப்புகளிலிருந்து புதிய சிந்தனைகளை எனக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. ஐரோப் பிய நாடுகளிலே ஒன்றான ஸ்பெயின் நாட்டு மக்கள் நானூறு வருடம் போராடினார்கள். விட்டுக் கொடுக்க முடியாது என்கிறார்கள். மொழியை இழந்து பண்பாட்டை இழந்து நாம் வாழ முடியாது செத்துப் போய்விடுவோம் என்கிறார்கள். மொழி இருந்தால்தான் நாம் உயிர்வாழ முடியும் என்பதை வலியுறுத்துகிறார்கள். எத்தனை தேசிய இனங்கள் இப்படிப் போராடு கிறார்கள். அப்படிப் போராடிய தேசிய இனங்கள் அனைத்திற்கும் வலிமையைக் கொடுத்தது மொழியும் பண்பாடும் கலாசாரமுமே. அதுதான் திருப்பித் திருப்பி வருகிறது.

விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் விடுதலைப் புலிகள். கலைஞர் அவர்கள் அன்டன் பாலசிங்கம் அவர்களுடன் பேசும்போது நாங்க ளெல்லாம் தனித் தமிழ்நாடு என்ற இலட்சியத்தை விட்டுக் கொடுத்தோம். நீங்கள் கூட விட்டுக் கொடுத்தால் என்ன என்று கேட்டார்கள். அவர் கேட்கிறார் இலட்சியத்தை விட்டுவிட்டு ஏன் உயிர்வாழ வேண்டும்? கலைஞர் தன் தந்திரத்தை உபயோகிக்கிறார். இந்த இலட்சியம் தான் உயிர். இலட்சிய வாதிக்கு இலட்சியம் தான் உயிர். குறுகிய எண்ணம் கொண்ட நாற்ற மெடுக்கும் இந்த பதவி நாற்காலியில் உட்கார வேண்டும் என்கிற ஆசை கொண்டவர்களுக்கும் எல்லா மோதல் களும் இப்படித்தான்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய ஒரு மனித நேயப் போராட்டம் இது. இது ஐயாவின் நூலில் நிறைந்து பல இடங்களில் நிறைந்து காணப்படுகிறது. இது புகழாரம் சூட்டக்கூடிய நூல் அல்ல. ஒரு சமூக விஞ்ஞானத்தை தமிழர்கள் வாழ்க்கையை, தமிழர்களின் போராட்டக் கலையை பல கோணங் களில் அறிந்து கொள்வதற்கான ஒரு சயின்டிபிக் வால்யூ. இன்றைய காலத்தை உணர்ந்து கொள்ளக் கூடிய - இன்றைய காலத்தை உணரப் பயன்படும் ஒரு நூல் இது.

இந்த நூலின் பின்னணியில் நான் இன்னும் பார்க்கிறேன். உலகமயப் பின்னணியை இது காட்டுகிறது. முத

லில் கலாசாரத்தை அழிப்பது. மொழி களை அழிப்பது. பண்பாட்டை அழிப் பது. பண்பாட்டை அழித்தால் தான் தனக்கு வெற்றி என்று நினைக்கிறார்கள். ஆகவே எந்த மொழி பலமாக உள்ளதோ அதை அழிப்பது. இன்னொரு கோணத்தில் நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஈழத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது கூட இந்த உலகமய அரசியலின் ஒரு பகுதி தான். இதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். உலக மக்களின் பல கூறுகளில் இது சிந்திக்க வைக்கிறது. அந்த வகையில் மிகச் சிறந்த நூலை - தமிழகத்திற்கு சிறந்த ஆயுதமாகப் பயன்படப் போகிற நூலை உருவாக்கிக் தந்த ஐயா பழ.நெடுமாறனுக்கு தனிப்பட்ட முறை யில் நான் அவர் மேல் வைத்திருக்கும் மதிப்பு அவருடைய ஆளுமை அவரு டைய நேர்மை ஆகியவை. தமிழ் நாட்டில் இரண்டு பெரிய தலைவர்களை நான் பார்க்க முடிகிறது. ஒருவர் தலைவர் நல்லகண்ணு மற்றொருவர் ஐயா பழ.நெடுமாறன். அவர் வேகமாகப் பேச மாட்டார். தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கக் கூடிய இந்த நூலை படைத்தளித்த ஐயா பழ நெடுமாறன் அவர்களுக்கு என் சார்பிலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பிலும் மனமார்ந்த என் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு இந்த நூலை தமிழ்நாட்டின் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செலலுகின்றபோது தான் வெற்றியடை யும். அதற்குரிய முயற்சியை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து செய்ய வேண்டும் என்று இந்தநேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

ஞாயிறு, 27 மே, 2012

நூல் வெளியீட்டு விழா

பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் நூல் வெளியீட்டு விழா 13-4-12 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை, பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் செ.ப. முத்தமிழ் மணி வரவேற்றார். கவிஞர் காசி. ஆனந்தன் விழாவிற்குத் தலைமை வகித்து சிறப்பானதொரு உரையாற்றினார். தொகுப்புரையை முனைவர் த. செயராமன் வழங்கினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் கணக்காயர் மு. பாலசுப்பிரமணியம், மதுரா டிராவல்ஸ் அதிபர் வி.கே.டி. பாலன், உலகத் தமிழர் பேரமைப்பின் பொருளாளர் சா. சந்திரேசன், திருச்சி கே. செளந்தராசன் ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.

கா. பரந்தாமன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ. மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர் இரா. நல்லக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இறுதியாக பழ. நெடுமாறன் ஏற்புரை நிகழ்த்தினார். பூங்குழலி நன்றியுரை கூறினார்.

"பிரபாகரன் வரலாற்று வீரகாவியம்'' தமிழர் வீடுதோறும் இருக்க வேண்டும் வெளியீட்டு விழாவில் வைகோ பாராட்டு!

வாழ்நாளில் பெறற்கரிய ஒரு பேற்றினை எனக்கு வழங்கிய அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக் கின்றேன். அவரது அருமை மகளுக்கு - பூங்குழலிக்கு "உன் அன்பு மாமா பிரபாகரன்' என்று எழுதிய கடிதத்தையும் 1207 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் நீங்கள் காணலாம். நான் திரும்பத் திரும்ப இந்த 1207 பக்கங்களையும் படித்தேன்.
இது தமிழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் குறையைப் போக்குகிறது. மேதினி மெச்ச வாழ்ந்த தமிழர்களின் செழுமையான வாழ்விற்கு சரியான வரலாற்று ஆவணம் கிடையாது. பண்டைய சங்க இலக்கியங்கள் உண்டு. காவியங்கள் உண்டு. வீரம் மணக்கும் புறப்பொருள் வெண்பாமாலையும் புறநானூறும் பத்துப்பாட்டும் உண்டு. ஆனால் இந்தத் தரணியில் இவர்களுக்கு நிகராகச் சிறந்து எவர்களும் வாழ்ந்தவர்கள் இல்லை என்பதை நிலைநாட்ட ஆதாரங்களைக் காட்டக்கூடிய வகையில் ஆவணப்படுத்தவில்லை தமிழன். இந்த நூல் இனி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் மேற்கோள் காட்டத் தக்கதாக தமிழர்களின் வீர வரலாற்றைக் காட்டும் ஆவணமாகி இருக்கிறது.

இந்த நூலில் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. நம்முடைய மாற்றாருடைய விமர்சனங்களுக்குப் பதில் இருக்கிறது.பல புதிர்கள் அவிழ்க்கப்பட்டிருக்கின்றன. 1982ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையிலே தான் சந்தித்தபோது இந்த வீர வாலிபன் ஏற்கனவே பேபி சுப்பிரமணியத்தோடு தனது இல்லத்துக்கு வந்தவர் தானே என்று அவர் உணர்கிறார். அங்கே தொடங்கி இந்த நூலிலே செய்திகள் வேகமாக வருகின்றன.

நான் மிகுந்த வேகத்தோடு என்ன செய்திகள் இந்த நாளில் இந்த அரங்கத்தில் பதிவாக வேண்டுமோ அவற்றை மாத்திரம் பருந்துப் பார்வையில் பார்த்ததைச் சொல்ல விரும்புகிறேன். 1983 ஜுலையில் கலவரம் நடக்கிறது. இந்திராகாந்தி அம்மையார் இந்த நாட்டின் தலைமை அமைச்சர். இந்திய நாட்டினுடைய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஆகஸ்டு திங்கள் 16ஆம் நாள் 1984ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் நடப்பது இனப் படுகொலை என்று பதிவு செய்தார்.

தமிழர் தியாகப் பயணம். - தமிழகம் எரிமலையாகக் காட்சியளித்தது.. நேற்று முன்தினம் நிலஅதிர்வு ஏற்பட்டபோது மக்கள் எப்படி பதட்டமடைந்தார்களோ அதைப்போல பூகம்பம் விளைந்ததைப் போல தமிழர் மனங்கள் நடுங்கின. அண்ணன் நெடுமாறன் அவர்கள் இந்த வங்காளக் குடாக் கடலின் அலைகளைக் கடந்து செல்கிறோம்- இராமேசுவரத்திலிருந்து செல்கிறோம் என்று புறப்பட்டு விட்டார். மதுரையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் சட்டமன்றப் பேரவைத் தலைவர் க. இராசாராம் அவர்களும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் வந்து பயணத்தை நிறுத்தலாமா என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் இசைவளிக்கவில்லை.

படகுகள் அப்புறப்படுத்தப் படுகின்றன. கடலின் மேல் செல்லும் படகிலிருந்து தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டு வந்து விடுவிக்கப்படுகிறார். இது ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. ஆகஸ்டு திங்கள் 1983ல் நடைபெறுகிறது. நவம்பரிலே சட்டமன்றத்திலே இது விவாதத்திற்கு வருகிறது. நவம்பர் 15 ந் தேதி 1983 ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கடலிலிருந்து படகுகளை அப்புறப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு வருகிறது. அப்பொழுது முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லுகிறார். இராமேசுவரத்தில் படகுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டதாக இந்த மன்றத்திலே விமர்சனங்களை வைக்கிறார்கள். நான் கேட்கிறேன். ஒரு நெடுமாறனை இழந்து விட்டால் இன்னொரு நெடுமாறனை நாம் பெறமுடியுமா? அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவர் மீது குண்டுகள் பாயுமானால் அதைத் தடுப்பதற்கு அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவி இருக்கிறதா? துணிச்சலுள்ள மனம் மாத்திரம் இருக்கிறது அவருக்கு. அவரைப் பாதுகாக்க வேண்டாமா? அவர் பிரச்சாரம் செய்கிறார். நான் செய்ய முடியாது. நான் செய்ய முடியாததை அவர் பிரச்சாரம் செய்கிறார். மக்கள் திரளுகிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

அந்த சட்டமன்றத்தில் அந்த நிகழ்விலேயே நெடுமாறன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற அதே வேளையில் முதலமைச்சர் தரப்பிலிருந்து இந்தத் தீர்மானம் அளவிற்குத் தீவிரத்தன்மை இல்லாத தீர்மானத்தை அண்ணா தி.மு.க. அரசு கொண்டு வருகிறது. உடனே அண்ணன் நெடுமாறன் அவர்கள் சட்டமன்றத்தில் "என் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். உங்கள் தீர்மானம் மாத்திரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்'' என்றார். "வேண்டாம். உங்கள் தீர்மானமும் இருக்கட்டும். நீங்கள் திரும்பப் பெறவேண்டாம். நீங்கள் அந்தத் தீர்மானத்தின் மீது என்ன பேச விரும்புகிறீர்களோ அதைப் பேசுங்கள்.'' அதை வாக்கெடுப்புக்கு விடவேண்டாம். ஆனால் உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவு செய்து உங்கள் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று தெரிவித்துவிட்டு அரசு கொண்டு வந்த ஆளும்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசும்போது கூறினார். "இங்கே நெடுமாறன் அவர்கள் பேசியது தான் ஐந்தரைகோடி மக்களின் உணர்வு என்பதை இந்தச் சட்டமன்றத் திலே பதிவு செய்கிறோம்'' என்றார்.

இந்த 83ஆம் ஆண்டு சம்பவங் களுக்குப் பிறகு ஈழத்திலிருந்து வந்த அமைப்புகளுக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சி கொடுக்கிறது என்னும்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அந்த பயிற்சி ஏற்பாடு ஆகிறது. சகோதர யுத்தம் என்ற விமர்சனத்தைச் சிலபேர் வைத்தார்கள். ஒருங்கிணைந்து அவர்கள் போராட முடியவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.1984ஆம் ஆண்டு டெலோ இயக்கமும் ஈராஸ் இயக்கமும் ஈபி.ஆர்.எல்.எப்பும் சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைக்கிறார்கள். 1985ஆம் ஆண்டு ஈழ தேச விடுதலை முன்னணியினுடைய அந்தஅமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளையும் இடம்பெறச் செய்கிறது.

திம்பு பேச்சு வார்த்தைக்குத் தயாராகிச் செல்லுகிறபோது தான் ரா உளவு அமைப்பின் தலைவரான சக்சேனா நாங்கள் முன்வைப்பதைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்துச் சொல்லுகிற செய்தி இந்த புத்தகத்தில் வருகிறது. திம்புவிலே பேச்சுவார்த்தை. 1985 ஜுலை 8ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆகஸ்டில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கிருந்து வந்து பங்கேற்கிறார். செயவர்த்தனாவின் சகோதரர். சிறந்த வழக்கறிஞர் என்று அங்கே கருதப்பட்டவர். அந்த பேச்சுவார்த்தையின் போது தமிழர் அமைப்புகள் இந்த நான்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்றார்கள். அப்போது தமிழ் இனம் என்பது அங்கே இருக்கக் கூடிய தனித்துவமான ஒரு தேசிய இனம். பூர்வீகத் தமிழர் தாயகம். ஈழம் என்பது தமிழர் தாயகம். எவராலும் மறுக்கப்படமுடியாத சுயநிர்ணய உரிமை. அனைத்து மக்களுக்கும் உரிமைகள். இந்த நான்கு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டால் தான் பேச்சுவார்த்தை என்றார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இ,ந்த காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அண்ணன் நெடுமாறன் அவர்கள் விவரிக்கிறார்.

84 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப் படுகிறார். படுகொலை செய்யப்பட்ட போது அதனால் ஈழ மக்களுக்கு ஏற்பட்ட துயரமும் இந்திராகாந்தி அம்மையாருக்கு நினைவஞ்சலி செலுத்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை கூட இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்தச் சூழுலில்தான் அதற்குப் பிறகு இராசீவ்காந்தி அவர்கள் தலைமை அமைச்சராக வந்தபிறகு சார்க் மாநாட்டிலே பெங்களூரிலே நடைபெற்ற போது கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தங்கள். அதைப்போல தொலைதொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்ட சம்பவம். இந்த சம்பவத்திற்குப் பிறகு பெங்களூரிலே பிரபாகரனை அழைத்துப் பேச அன்றைய முதலமைச்சரைப் பயன்படுத்த நினைத்தார்கள். கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாகக் கூறுபோட நினைக்கிறார்செயவர்த்தனா. அதற்கு உடன்பட முடியாது. இந்த கருத்துகளை ஏற்க முடியாது என்பதை எம்.ஜிஆ.ர். அவர்களிடம் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறார் பிரபாகரன். இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டமே வழி என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, தந்தை செல்வா வட்டுக்கோட்டை தீர்மானத்திற்குப் பிறகு தங்கள் தாயக விடுதலைக்காக ஆயுதம் ஏந்துவது ஒன்றுதான் வழி என்று முடிவெடுத்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவைப்பட்ட நிதியை எம்.ஜி..ஆர் அள்ளித் தந்தார் என்ற செய்தியை பதிவு செய்திருக்கிறார் அண்ணன் நெடுமாறன்.

மதுரையிலே தங்கியிருந்தார். பிரபாகரன் அவர்களும் அங்கே தங்கியிருந்தார். எல்லா செய்திகளும் - அவர் மதுரையிலே இருந்தது - அவர் இல்லத்திலே தங்கி இருந்தது - அத்தனை சம்பவங்களையும் விவரித்துக் கொண்டே போகிறார். அந்த நாட்களுக்குப் பிறகு அவர் இனி ஈழம் சென்று விடுவது என்று முடிவெடுத்து கடலிலே செல்லும் வரை தான் ஆபத்து வரலாம் கரை சேர்ந்து விட்டால் எந்த ஆபத்தும் வராது என்று கூறிவிட்டுப் பிரபாகரன் போகிறார். இனி வருவதில்லை இந்திய மண்ணுக்கு என்று முடிவெடுத்துச் செல்கிறார்.

இந்தக் கட்டத்தில் உங்களையே ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்த முதன்மைச் செயலாளர் பூரி அங்கே போய் சொல்லி நேரில் பிரபாகரன் அவர்களை அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்ற பிறகு - தில்லிக்கு அழைத்துச் செல்லும் வரையில் நீங்கள் தான் ஈழத் தமிழர்களின் பிரதிநிதி என்று கூறி அழைத்துச் சென்ற பிறகு - அசோகா ஓட்டலிலே எவரும் சந்திக்க முடியாதபடி சிறை வைக்கப்பட்டதைப் போல தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப் பட்டபோது தான் அந்த சம்பவத்தைப் பாலசிங்கத்தின் வாயிலாகவே குறிப்பிடுகிறார். இந்த சுங்கானின் புகை அடங்குகிற நேரத்திற்குள்ளாக உங்கள் வீரர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று சொன்னார் தீட்சித். இந்த சந்தர்ப்பத்தில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம். ஆகவேதான் 29ம் தேதி சூலை மாதம் இராசீவ் காந்தி செயவர்த்தனாவோடு கையொப்பம் போட்டுவிட்டு திரும்பிய போது தாக்கிய விசயமுனி அதே நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றான் என்ற செய்தி - இராசீவ் காந்தியின் உயிரைக் குடிக்க முயற்சி செய்தவன் பெற்ற பாராட்டு - மகுடம் சூட்டப்பட்ட செய்தியும் இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. அங்கே செயவர்த்தனா சொல்கிறார். "நான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்துவிட்டேன். இந்திய இராணுவத்தை இங்கே பிரவேசிக்க அனுமதித்துவிட்டேன்.இப்படி அனுமதித்ததை என்னுடைய அமைச்சரவையில் சிலரும் வெளியில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பொழுது ஒரு உண்மை புரிந்து விட்டதா? இப்பொழுது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளை யாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய இராணுவ வீரர்களும் விடுதலைப் புலிகளும் களத்தில் மோதிக்கொண்டிருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்... எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என?'' என்று செயவர்த்தனா கூறியதை இங்கே பதிவு செய்திருக்கிறார் அண்ணன் நெடுமாறன் அவர்கள். இப்படி இந்த அளவிலே நடைபெற்ற சம்பவங்களை ஒட்டித்தான் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அந்த இரவிலே இந்திய அமைதிப்படைத் தளபதி ஹர்ஹரத்சிங்கிற்குக்குத் தகவல் வருகிறது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்கப் பிரபாகரன் வருகிறாரா? ஆம். மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது. சுட்டுக் கொன்று விடுங்கள் என்கிறார் தீட்சித். இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்ஹரத்சிங் பதில் செல்கிறார்.

திலீபன் உண்ணாவிரதம் தொடங்குகிறான். நெடுமாறன் செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிருந்து போகிறார். நெடுந்தீவு போய்ச் சேருகிறார். அன்றைய இரவு பிரபா கரனைச் சந்திக்கிறார். மறுநாள் திலீபனைப் போய்ப் பார்க்கிறார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறப்பின் விளிம்பிலே நிற்கிறான் திலீபன். கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பிலே உங்களுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன் என்கிறார். எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன். அவனோ தலைவரை இறுக்கமாக இருக்கச் சொல்லுங்கள். தலைவர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல் லட்டும் என்று கூறுகிறான். திலீபனின் உதடுகள் அசைகின்றன. திலீபன் மறைந்தான். இந்த காலகட்டத்தில் - இது செப்டம்பர் 26ஆம் தேதி நடை பெறுகிறது.இந்திய அரசு நினைத் திருந்தால் திலிபனைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால்துளிநீரையும் பருகாமல் - கணைக்கால் இரும்பொறையைப் போல - இவன் இலட்சியத்திற்காகத் தன்னை அழித்துக் கொண்டான். இதற்குப் பிறகு 17 பேர் கொண்ட கடற் படை- கடற்புறா - சிங்களக் கடற்படை யினால் கடலிலே மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பலாலி விமான நிலையத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக அடைக்கப்படுகிறார்கள்.

ஆகஸ்டு 4ஆம் தேதி சுதுமலை யில் பிரபாகரன் ஆற்றிய உரை - இந்திய ஒப்பந்தம் பற்றி - இந்தியாவில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகப்போகிறது. ஒப்பந்தத்திற்காக ஈழத்திற்கு போகிறார் இராசீவ்காந்தி. சென்னைக்கு வந்த பிரபாகரன் அவர்கள் முதலமைச்சர் அவர்களைச் சந்திக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டார் என்று பதிவு உள்ளது. அப்போது தான் சுதுமலையில் பேசும்போது சொன்னார். நமது போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு விட்டது. எதிர்பாராத திருப்பம். நம்மை விட வலிமை மிக்க வல்லரசு நம் மீது ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. தியாகம் செய்து இரத்தம் சிந்தி போராடி நாம் உருவாக்கிய இந்த போராட்ட வடிவமே சிதைக்கப்படுகிறது. நாம் மக்களைக் காப்பதற்காக வைத் திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். நம்மைக் கேட்காமலேயே, இந்த மக்களின் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.. இனி இந்த மக்களைக் காக்கின்ற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் - இந்திய அரசை எதிர்த்து ஒரு துர்ப் பாக்கியவசமான நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய சிப்பாய்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நாங்கள் தயாராக இல்லை. சிங்கள இனவாதம் இந்த ஒப்பந்தத்தை முடுக்கி விடும். இதைத் தான் சுதுமலையில் பிரபாகரன் சொன்னார்.உயிருக்கு நிகரான புலிகள் 12 பேர் நச்சுக் குப்பி களைக் குடித்து இறந்து போனார்களே - அதற்குப் பிறகு - உலங்கு வானூர்தி களிலே கமாண்டாக்கள் இறக்கி விடப்பட் டார்களே - நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள் - இப்படிக் கொண்டு வந்து குவிக்கப்படுவார்கள் என்று பிரபாகரனுக்குத் தெரியும் - ஆனால் அந்த அதிரடிப் படை வீரர் களை நோக்கி புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ஒருவன் கூட அதில் மிஞ்சவில்லை. அக்டோபர் 12ஆம் தேதி நடந்தது - பதிவு செய்திருக்கிறார். நிலவின் வெளிச்சத்தில் பார்த்தேன் - பிரபாகரன் நெருப் பாற்றிலே மிதந்து கொண்டிருந்தார். சுற்றிலும் போர் நடக்கிறது - போர்க் களத்தில் ஆயுதத்தைத் தாங்கிப் பிரபாகரன் கட்டளையைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். போர்க்களத்திலே படையை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்சியைப் படித்த போது என்னுடைய நினைவுக்கு வந்ததெல்லாம் மகாபாரதத்தின் போர்க்களத்தில் 13ஆம் சருக்கம் தான். அபிமன்யு வியூகத்தில் நுழைந்தவுடன் நாலாபுறமும் சூழ்ந்து எதிரிகள் தாக்கியதைப் போல பிரபாகரனின் நடவடிக்கையை நான் பார்த்தேன். ஒரே ஒரு வித்தியாசம். அபிமன்யு வியூகத்தை உடைத்துவிட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டான். மடிந்தான். ஆனால் பிரபாகரன் எதிரிகளின் வியூகத்தை உடைத்தார். வெளியேறினார்.

அதன் பிறகு அரசு மாறுகிறது. வி.பி.சிங் பொறுப்பேற்கிறார். அங்கே பிரேமதாசா இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். காய்களை மிகத் திறமையாகப் பிரபாகரன் நகர்த்துகிறார். சூழ்ச்சிதானே - அண்ணன் நல்லகண்ணு சொன்னாரே - சூழ்ச்சி தானே அரசியல். இனத்தைக் காப்பதற்காக - தன்னைக் காப்பதற்காகவோ மகுடத்தைக் காப்பதற் காகவோ தன் குடும்பம் வாழ்வதற் காகவோ அல்ல. தேச விடுதலைக்காகப் பிரபாகரன் போராடினார்.

இதற்குப் பிறகு 90ம் ஆண்டு - எந்த யாழ் கோட்டை 300 ஆண்டு களுக்கு மேலாக டச்சுக்காரர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என்று ஆங்கிலேயர்கள் காலம் வரை மாற்றார், சிங்களர் கையில் இருந்ததோ அந்த யாழ் கோட்டையை எப்படிக் கைப்பற்றி னார்கள் என்று விவரிக்கிறார். அண்ண னிடம் கேட்கிறேன். ரொம்ப ஆச்சரிய மாக இருக்கிறது. யுத்தகள காட்சிகளை நீங்கள் எப்படி எழுதினீர்கள்?

இது வீரகாவியம். இதிகாசம். இந்த வீரகாவியத்தை எடுத்து ஒவ் வொருவரும் எழுதுங்கள். இதிகாசத்தை வைத்து எழுதியிருக்கிறான் ஓமர் எலியட். புத்தகத்தை இதிகாசமாக எழுதியிருக்கிறார்.ட்ராய் நகர் யுத்தத்தை இதிகாசமாகப் படைத்திருக்கிறார். அது புராணம். கிரேக்கப் புராணம். அதைப் போல இந்த நாட்டிலே கோடிக்கணக் கான மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய இதிகாசங்கள் அது இராமாயண மாக இருக்கட்டும் - அங்கே நடை பெறும் யுத்தத்தை கம்பன் வர்ணிப்பதாக இருக்கட்டும். அதைப் போல 18 நாள் நடைபெற்ற குருசேத்திரப் போர்க் களத்தை வில்லிபுத்தூரார் அருமையான கவிதைகளிலே தந்திருக்கிறார். - இவையெல்லாம் இதிகாசங்கள். ஆனால் நடைபெற்ற ஒரு போரை வைத்து ஒரு கவிதை எழுதுவது என்பது குலோத்துங்க சோழனது படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் நடத்திய போரைப் பற்றி கலிங்கத்துப் பரணி பாடியதைப் போல - அதிலே மெல்லிய உணர்வுகளை எழுப்பும் வரிகளும் உண்டு - நான் அங்கு செல்ல விரும்பவில்லை - இருந்தாலும் யுத்த களத்தில் நடந்ததை செயம்கொண்டார் ஒரு பரணியில் பாடியுள்ளார். கலிங்கத்துப் பரணியைப் பாடியுள்ளார்.

இப்படிக் காவியமாக எழுதியிருக் கிறார். அண்ணன் நெடுமாறன் அவர்கள் தீட்டியுள்ள அத்தியாயம் ஒவ்வொன்றை யும் அறிவுமதி போன்றவர்கள் உணர்ச்சியுள்ள கவிஞர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் காவியமாகத் தீட்ட வேண்டும். இது கற்பனை அல்ல. இதிகாசம் அல்ல. தமிழர்களின் இரத் தத்தால் தீட்டியது. அந்த அடிப்படையில் தான் நீங்கள் அந்த யாழ் கோட்டைப் போரை விவரித்து இருக்கிறீர்கள்.

நீங்கள் இராணுவத்தில் இருந் ததைப் போல, படையில் இருந்ததைப் போல போராடியதைப் போல எப்படி இவ்வளவு நுணுக்கமான செய்திகளைத் தந்தீர்கள் என்று வியந்து நான் கேட்டேன். 1990 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் புறப்படுகிறார்கள். நிலவு ஒளியில் புறப்படுகிறார்கள். யாழ் கோட்டைக்குள்ளே எண்ணற்ற சிங்கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்காங்கே படையணிகள் இருக் கின்றன. இந்த கோட்டையைத் தகர்த்து விட வேண்டுமென்று கருதி குண்டு களை வீசுகிற போது உள்ளே இருக்கிற அவர்கள் பதிலுக்குக் குண்டுகளை வீசுகிறார்கள். குண்டுகளுக்கு நடுவே செல்லுகிறார்கள். புல்டோசர்களோடு செல்கிறார்கள். பெரும் பாரம்தூக்கிகள் செல்கின்றன. முதல் பாரந்தூக்கி ஒரு பெரும் பள்ளத்திலே விழுந்து செய லற்றுப் போய்விடுகிறது. அதைவிட பிரம்மாண்டமான பாரந்தூக்கி அதை ஒதுக்கிவிட்டு முன்னேறுகிறது. ஏற்கனவே பீரங்கிக் குண்டுவீச்சில் பள்ளமாகிக் கிடந்த பெரும்பள்ளத்தில் அந்த பாரந்தூக்கியும் விழுந்து விடு கிறது. அவர்கள் போட்ட திட்டத்தின்படி பாரந்தூக்கிகளை கோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு போகமுடிய வில்லை புலிகளால். அன்புக்குரிய வர்களே ஏணிகளைக் கொண்டு போகிறார்கள். நீங்கள் திரைப்படங் களிலே பார்த்திருப்பீர்கள். உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படங்களிலே கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஸ்பெயின் நாட்டுப் போரை வைத்து எடுக்கப்பட்ட ஆஙகிலப் படத்தில் பார்க்கலாம் ஏணிகளை வைத்து அவற்.றின் மேல் புலிகள் ஏறி சுடுகிறார்கள். மேலே இருந்து எதிரி சுடுகிறான். இவர்கள் ஏணியில் ஏறிக்கொண்டே சுடுகிறார்கள். குண்டுகள் பாய்ந்தாலும் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு பீரங்கி குண்டு வந்து விழுந்து ஏணி உடைகிறது. உடைந்து விட்ட ஏணியைக் கொண்டு போய் ஒரு அரசமரத்தோடு கட்டுகிறார்கள். மீண்டும் அதன்வழியாக அந்த மதில் சுவர் மீது தாவி ஏற முயற்சி செய்கிறார்கள்.அப்படி ஏறிய அந்த இளைஞர்களைப் பற்றி வர்ணிக்கிறார். டயசு என்னும் ஒரு இளைஞன் சுட்டுக்கொண்டே கண் காணிப்பு கோபுரத்தை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறான். வாயிற் கதவை நோக்கிப் போகிறான். அப்படிப் போகிற போது அவன் மீது குண்டு விழுந்து அவன் அந்த இடத்திலேயே சிதறு கிறான். பக்கத்திலே சீலன். இவனுடைய இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சீலன் முன்னேறுகிறான். நீங்கள் கேட்டிருப்பீர்களே. மடியப் போகும் நேரத்தில் கூட ஆயுதம் கொடுத்து போராடும்படி கேட்டதாக. சீலன் அப்படித் தான் முன்னேறினான். அடுத்த குண்டு பாய்கிறது. சீலனின் இரண்டு கால்களும் பிய்ந்து போகின்றன. இரண்டு கால்களும் பிய்ந்து இரத்தம் ஆறாகப் போய்க் கொண்டிருக்கும்போது இயந்திரத் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறான். அவனும் மடிகிறான்.

இந்த கோட்டையின் பிரதான வாயிலை தாங்கள் தான் தாக்க வேண்டும் என்று புறப்பட்ட - உலகத் தில் எந்த விடுதலை இயக்கத்திலும் பெண்கள் படையை இப்படி உருவாக்கிய தில்லை என்று சொல்லுகிறோமே - அந்த படை சங்கீதா என்ற பெண்ணின் தலைமையிலே பிரதானக் கோட்டை வாயிலைத் தாக்குகிறார்கள். ஒரு புறம் புலிகள் தாக்குகிறார்கள். முற்றுகை போடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடற்கரைப் பகுதியில் இருந்து சிங்கள கடற்படை அங்கே தாக்க வருகிறது. அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். சிங்கள வான்படை வந்து தாக்குகிறது. துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள் விமானங்களை. முப்படைகளும் தாக்கு கின்றன. புலிகள் எல்லாம் சிதறி ஓடிவிட்டார்கள் என்று கருதி கோட்டை வாயிலைத் திறந்து கொண்டு திபுதிபு என்று கவசவண்டியில் வெளியில் வருகிறார்கள் சிங்கள படையினர். இடிபாடுகளில் இருந்து எழுந்து புலிகள் சுடுகிறார்கள். கவச வண்டி நாசமாகிறது. சிங்களப் படையினர் சிதறி ஓடுகிறார்கள். தப்பித்துப் பிழைத்தால் போதும் என்று கருதி சிங்களப்படை பின்வழியாக ஓடுகிறது. கோட்டை கைப்பற்றப் படுகிறது. யாழ்க் கோட்டை கைப்பற்றப் பட்டது. அந்தக் கோட்டை கைப்பற்றப் பட்டவுடன் பெர்லின் சுவர் எப்படி உடைக்கப்பட்டதோ அப்படி உடைக்கப் பட்டது. மக்களிடம் கடப்பாறை மண்வெட்டி கொண்டு வாருங்கள். இந்த ஆதிக்கக் கோட்டையை உடைத்து நொறுக்குங்கள் என்று பிரபாகரன் அழைப்பு விடுத்தார்.

சிறைக்குள்ளிருந்து மண்ணை அகற்றி பாதாளச் சுரங்கம் அமைத்து வெளியேறியதாக கேள்விப்பட்டிருக் கிறீர்களா? நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது செர்மானியச் சிறையிலிருந்து தப்பிச்சென்ற கதையை ஒரு திரைப்படமாக எடுத்து 1965இல் கிரேட் எசுகேப் என்ற திரைப்படம் குளோப் தியேட்டரில் வந்தது. நான் நான்கைந்து தடவை அந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.

நம்ம புலிகள் அதைவிட அசகாயச் சூரர்கள். அந்த செர்மன் சிறையில் அகழி கிடையாது. வேலூரில் அகழி உள்ளது. 1995ஆம் வருடம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த ஆகச்டு 15ம் நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் புலிகள் ஆகச்டு 15 ஆம் தேதி வேலூர் சிறையிலிருந்து தப்பிப் போய்விடுகிறார்கள். 43 பேர். 4 பெண்கள் உட்பட. அதை அண்ணன் மிக அழகாகச் சொல்கிறார்கள். எப்படித் தப்பித்தார்கள் என்பதை அழகாகச் சொல்கிறாகள்ர். திப்பு மகால்- ஹைதர் மகால் என்று இருக்கிறது வேலூர் சிறையில் - 1806 புரட்சியின் போது திப்புவின் பிள்ளைகள் அங்குதானே கொண்டு போய் அடைக்கப்பட்டார்கள். படித்திருப்பீர்களே. அங்கே பல அறைகள் சிமிண்டு போட்டு மூடப் பட்டுள்ளன. மாடியில் ஓர் அறை. அதற்கு கீழ் உள்ள அறையில் தளம் உள்ளது. பல அறைகளில் சிமிண்டு போட்டு மூடிவிட்டார்கள். அது எங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. மாடித் தளத்தில் இவர்களுக்கு அறைகள் கொடுக்கப்பட்டன. உடனே இவர்கள் என்ன செய்கிறார்கள். அந்த அறையின் சுவரைத் தோண்டுகிறார்கள். தளத்தைத் தோண்டி அங்கிருந்து கீழ் உள்ள அறைக்கு வருகிறார்கள். தளத்தைத் தோண்டி கீழ்த்தள அறைக்கு வந்தவுடன் அடுத்த அறை. அடுத்த அறை. மேலும் தரையைத் தோண்டி தளத்தில் 2 அடிக்கு 4 அடி தளத்தைத் தோண்டி 10 அடி ஆழத்திற்கு 3 அடிக்கு 4 அடி சைசில் தோண்டுகிறார்கள் "ட' வடிவில். இதற்கு என்ன பொருள்களை உபயோ கித்தார்கள்? எத்தனை கம்பி? எத்தனை மண்வெட்டி? பொருட்கள் பட்டியலே உள்ளது. இதற்கு மத்தியிலே 4 தடவை 150 போலீசுடன் வந்து சிறை அதி காரிகள் வந்து சோதனை பண்ணு கிறார்கள். எந்த அறையில் மேல் தளத்தில் ஓட்டை போட்டிருக்கிறார்களோ அந்த அறைக்கே வருகிறார்கள். இவர்கள் அங்கே காய்கறி நறுக்கு கிறார்கள். என்னப்பா செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் சோதனைக்கு வந்தவர்கள். நாங்கள் உணவு தயாரிக் கிறோம் என்று பதில் சொல்கிறார்கள். நான்கு தடவை வந்து பார்த்திருக் கிறார்கள். பத்து வாரம் இந்த வேலை நடந்திருக்கிறது. மேல்நாட்டிலே 6 மாதம் முயற்சி செய்து தப்பிய கதை உள்ளது. இங்கே பத்தே வாரத்தில் தப்பிக்கிறார்கள். வெளியே தப்பிப் போகிறபோது மூன்றுபேர் இறந்து போகிறார்கள். இதிலே எழுதாத செய்தி. அண்ணன் மூலம் தெரிந்து கொண்ட செய்தி.

அண்ணன் அவர்கள் பார்க்க ஜெயிலுக்குச் சிலபேரை அனுப்பி வைக்கிறார். பார்க்கப் போனவர்களிடம் தலையணை கேட்கிறார்கள். அவர்கள் உடனே இவருடன் தொடர்பு கொண்டு அண்ணே அவர்கள் தலையணை கேட்கிறார்கள் அண்ணே. சரி நீங்கள் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்கிறார் இவர். இரப்பர் தலையணை தான் வேண்டும் என்று கேட்கிறார்கள் அண்ணே. சரி இரப்பர் தலையாணை யையே வாங்கிக் கொடுத்துடுங்க. இரப்பர் தலையாணை வாங்கிக் கொடுத்தாச்சு. இதற்குப் பிறகு பத்திரிகையில் இவர்கள் தப்பிய செய்தி வருகிறது. அதிலே செய்தி வருகிறது. அகழிக்குப் பக்கத்தில் இரப்பர் தலையணைகள் கிடந்தன. அதாவது ஒருசிலருக்கு நீந்தத் தெரியாது என்பதால் அகழிக்குள் போகும் போது நீந்திச் செல்ல இரப்பர் தலையணை தேவைப்பட்டிருக்கிறது. அதனால் தான் இரப்பர் தலையணை கேட்டிருக் கிறார்கள். தோண்டிக் கொண்டே போகும்போது கல் மண்ணை எல்லாம் ஒரு பக்கம் சேமித்து வைக்க வேண்டுமே? அதையெல்லாம் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா? எந்தத் தடையும் அந்த விடுதலைப் போரைத் தடுக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவும் நடந்த பிறகு 95ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதலைச் சிங்களவர்கள் நடத்தும் போது ஐந்தரை இலட்சம் தமிழர்கள் வெளியேறட்டும் என்று பிரபாகரன் ஆணையிட்டார். அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார். சிங்களவர்கள் பிரபாகரன் தப்பி ஓடுகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது? அதற்குப் பிறகுதான் வீர காவியங்கள் தீட்டப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். வரிசையாக வெற்றிகள். 91ல் யானையிறவை கைப்பற்ற முடிய வில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு. ஆனால் 2001ம் ஆண்டில் அவர்கள் கைப்பற்றினார்கள்.25000 சிங்களப் படை வீரர்களை முறியடித்துத் தகர்த்தார்கள். யானையிறவைக் கைப்பற்றுகிறபோது மற்ற பகுதியிலிருந்து சிங்களப் படை யணிகள் உதவிக்கு வரமுடியாதபடி எல்லா முனைகளையும் புலிகள் கைப் பற்றிக் கொண்டார்கள். யாரும் நம்ப முடியவில்லை. உலகமே அதிசயித்தது. யாரும் நம்பவே இல்லை. நான் இன்றைக்குச் சொல்லுகிறேன். வாஜ்பாய் என்னிடம் கேட்டார். எப்பொழுது யாழ்ப்பாணம் விழும் என்று? கேட்டார். சீக்கிரத்தில் என்று நான் சொன்னேன்.

மணலாற்றுப் போரிலே வெற்றி. சிலாவத்துறை போரிலே வெற்றி. சிங்களவர்கள் வீழ்ந்தனர். முகமாலை போரிலே வெற்றி. மாங்குளத்திலே வெற்றி ஓயாத அலைகள் ஒன்றிலே வெற்றி ஓயாத அலைகள் இரண்டிலே வெற்றி. அக்கினி அலையிலே வெற்றி. வெற்றி மேல் வெற்றி பெற்று இத்தனை களங்களிலும் வெற்றி பெற்று ஏறத்தாழ தமிழீழம் என்று சொல்லக்கூடிய பகுதி அனைத்தையும் இரத்தம் சிந்தி வெற்றி பெற்று மகத்தான தியாகம் செய்து இவ்வளவையும் செய்தபிறகு மனித நேயம் இருக்கிறது. விதுஷா சொல்லு கிறார் புத்தகத்திலே பதிவு ஆகியுள்ளது. போரின் போது இரவிலே ஓய்வு எடுக்கும்போது ஒரு இருமல் சத்தம் வந்தாலும் மறுநாள் தலைவர் அங்கு வந்துவிடுவார். இருமல் சத்தம் கேட்டதே? யாருக்கு உடல்நலம் இல்லை. சிங்களத் தேசியக் கொடி எரிக்கப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவித்தார் பிரபாகரன். ஒரு சிங்களப் பெண்ணை ஒரு தமிழன் - புலிகள் அமைப்பில் உள்ளவன் அல்ல - தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரப் பட்டு ஒரு சிங்களப் பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிவிட்ட செய்தியை அறிந்து அந்த சிங்களப் பெண் பாதுகாப்பாக அந்தப் பகுதியிலிருந்து செல்வதற்கு முன்பு அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டவர் பிரபாகரன்.

எங்காவது ஒரு சிங்களப் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு புலிகள் ஆளாக்கினார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? அவர் எவ்வளவு மென்மையானவர். அவர் உருவாக்கி வளர்த்த இடம் செஞ்சோலை அல்லவா? சின்னஞ்சிறு பிஞ்சுகள் அல்லவா - தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் தங்கியிருந்த இடமல்லவா அது. நெடுமாறன் அண்ணன் அவர்கள் அழகாகச் சொல்கிறார். அங்கு பிரபாகரன் போகும்போது தின்பண்டங் கள் வாங்கிக் கொண்டு போவார். அத்தனை குழந்தைகளும் அவரை ஆரத் தழுவிக்கொள்ளும். தங்கள் கவலையை எல்லாம் மறந்து கலகல வென்று சிரித்துத் தழுவிக்கொள்ளும். அவர்களோடு அவர் மகிழ்ச்சியுடன் இருப்பார். தாயும் தந்தையும் இல்லை என்ற கவலை அந்த குழந்தைகளிடம் இல்லை. இந்தக் குழந்தைகளை நான் போர்க்களத்திற்கு அனுப்பமாட்டேன். அதைப்போல காந்தரூபன் அறிவுச் சோலையும் அப்படிப்பட்ட இடம் தான். ஒன்றிலே ஆண் பிள்ளைகள். ஒன்றிலே பெண் பிள்ளைகள். போர்க்களத்திலே பிள்ளைகளை இழந்தவர்களுக்கு ஒரு தனி இல்லம். என்ன அருமையான ஏற்பாடு. அவரா பதவிக்கு ஆசைப் பட்டார்? மக்கள் முன்னணி அமைக்க வேண்டும் அரசியல் கட்சி அமைய வேண்டும் என்று ஒரு திட்டத்தைச் சொன்னபோது அதற்கு அதுவரை துணைத்தலைவர் மாத்தையாவை அல்லவா நியமித்தார். அவரைப் பொறுத்தமட்டில் தமிழீழம் அமைந்த பிறகு நான் அதிபராக மாட்டேன். போரிலே உயிரிழந்த குடும்பங்களுக்கு நல்வாழ்வு அமையவேண்டும். புனர் வாழ்வு தரவேண்டும். தாயை தந்தையை இழந்தவர்களுக்குப் புனர்வாழ்வு தரவேண்டும். அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தார். இப்படி போர்க்களங்களில் இவ்வளவு வெற்றி பெற்று யானையிறவில் வெற்றி பெற்ற பிறகு கட்டுநாயகா விமானதளத்தை இரவோடு இரவாகச் சென்று 2001இல் தகர்த்து 27 விமானங்களைத் தவிடு பொடியாக்கி இனி எழவே முடியாது சிங்கள வான்படை - சிங்கள இராணுவம் என்ற நிலையை உருவாக்கிய பின்பு தானே - யுத்தகளத்திலே இவர்களை வெல்ல முடியாது என்று முடிவெடுத்து போர் நிறுத்தத்தை அவர்கள் கோரி னார்கள். சிங்களர்கள் விக்கிரமசிங்கே காலமாக இருக்கட்டும் - நார்வே நடுநிலை வகித்த நாட்களாக இருக் கட்டும் - பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு - போர்களில் வெற்றி பெற்று இராசதந்திர முறையில் நடந்து வந்த இந்த கட்டத்திற்குப் பிறகு-2004இல் காட்சி மாறியது, ஆட்சி மாறியது காங்கிரசு இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. சூழ்ச்சி வலை பின்னப் பட்டது. இந்தியா ஆயுதங்களைக் கொடுத்தது. முப்படை உதவியைக் கொடுத்தது. முப்படைத் தளபதிகளும் ஆலோசனை வழங்கினர். தளபதிகளை இலங்கைக்கு அனுப்பித் திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. வல்லரகள் உதவி புரிந்தன. எத்தனை வல்லரசுகள் பாகிசுதான், சீனா, ரஷ்யா, இசுரேல், இந்தியா, ஈரான். இவ்வளவு பேர் உதவியையும் பலத்தையும் எதிர்த்து நின்றார் பிரபாகரன். இப்படிப்பட்ட வலிமையுள்ள படை எங்கும் இல்லை என்ற நிலையில் இருந்தார் பிரபாகரன். போர்க்களத்திலே ஒருபோதும் பிரபாக ரனை அவர்கள் வென்றிருக்க முடியாது. சாட்டலைட் மூலம் எங்கெங்கே அவர்கள் நகர்ந்தார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டது. இந்தப் போர் நாலாம் கட்டப் போர் என்று சொல்லப் பட்ட யுத்தம் இந்திய அரசு நடத்திய யுத்தம். இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. இராசராசன் வழிவந்தவர்கள் கரிகாலன் வழி வந்தவர்கள் அல்லவா - எனவே புலிகள் கடற்புலிகள் என்ற அமைப்பை, வான்புலிகள் என்ற அமைப்பை, அமைத்தனர். யார் அமைக்க முடியும் இப்படி. அரசு நடத்துவதற்குத் தேவை யான வேளாண்மைப் பிரிவு, கலால் அமைப்பு, கல்வி அமைப்பு, நீதித்துறை, காவல் துறை நடேசன் தலைமையில். இத்தனைப் பிரிவுகளையும் மிகச் சிறப்பாக அமைத்து ஒரு அரசையே நடத்தி நிர்ணயித்துவிட்டாரே. போர்க் களத்தில் சிங்களவர்கள் ஒருபோதும் எதிர்கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு வஞ்சகமாகத் திட்டம் வகுத்து ஆள்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் அள்ளி வழங்கி, நவீன கருவிகளை எல்லாம் வாரி வழங்கி, முப்படைத் தளபதிகளை வைத்து போரை இயக்கி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக் கானவர்களை கொன்றுகுவிக்க குண்டு களை வாரிவழங்கினார்கள். இதன்மூல மாகத்தான் அவர்களுக்குக் களத்திலே பின்னடைவு ஏற்பட்டது. இந்த செய்தி கள் எல்லாம் இன்னும் ஏராளமான செய்திகள் இந்த நூலிலே சொல்லப் பட்டிருக்கிறது.

அதனால் தான் நான் சொன் னேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு காவியம் ஆக்குங்கள். கவிஞர்களே இது கற்பனை அல்ல. உணர்ச்சியை ஊட்டுவதற்காக அல்ல. உண்மை. இதை அவர் ஒரு வீரகாவியமாக, வரலாற்றுக் காவியமாக, ஆவணமாக ஆக்கி யிருக்கிறார். யாரும் செய்ய முடியாத தைச் செய்திருக்கிறீர்கள். இதற்கு அழிவே கிடையாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது நிலைத்து நிற்கும். இது போல நூல்கள் நிறைய வரும். இதை அடிப்படையாக வைத்து வரும். வான்மீகியின் காவியத்தை வைத்து ஒவ்வொருவரும் தங்கள் கற்பனையை வைத்து இராமாயணத்தை எழுதினார்கள். ஆனால் இந்த நூல் உண்மைச் சம்பவங்களைச் சொல்கிறது. இதை வைத்து காவியங்களை உருவாக் கலாம். எதற்காக? நாலாம் கட்டப் போரை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். நான்காம் கட்டப் போரைப் பற்றியும் நீங்கள் எழுதுவீர்கள். அந்த நூல் எழுதப்பட்டு வெளியாகும்போது தமிழீழம் மலர்ந் திருக்கும். யாழ்ப்பாணத்திலே அந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும். அதைக் கூட நீங்கள் அங்கே போய் வெளியிட வேண்டும். அந்த நாள் வரும். காலம் வேகமாக மாறி வ்ருகிறது. கணிப்பொறி யுகத்திலே எணணற்ற வீர இளைஞர்கள், வீர நங்கைகள் பங்கு பெறத் துடிக்கிறார்கள். ஈழவிடுதலை யிலே நாட்டம் கொண்டவர்கள் இந்தப் புவியெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தகவல் தொடர்பு எப்படிப்பட்ட சாதகத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. அப்படியானால் அடுத்தது என்ன? இங்கே குறிப்பிட்டார்களே - கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் 20000 தமிழ்ப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக் கிறார்கள். குடியேற்றம் முற்றாகத் தடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல. குடியேற்றம் செய்யப்பட்ட அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும். 18 கல் தொலைவிலே ஏழரை கோடி பேர் இருக்கிறபோது வருங்காலத் தமிழர்கள் இளைஞர்கள், வாலிபர்கள் வீரமுள்ளவர் களாக மானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் வர வேண்டும். இந்திய உதவி முற்றாக அகற்றப்பட வேண்டும். மேலைநாடுகளிலே சூடா னில் நடந்ததைப் போல், கொசாவாவில் நடந்ததைப் போல், தைமூரில் நடந்த தைப் போல் பொது வாக்கெடுப்பு நடத் தப்பட்டதுபோல் இந்தப் புவியெங்கும் வாழக் கூடிய தமிழர்கள் - ஏதிலிகளாகச் சென்றவர்கள் -அவர்கள் எல்லாம் அந்தந்த நாட்டிலே பொது வாக்கெடுப் பிலே பங்கெடுக்கும் வண்ணம் அறிவிக் கப்படவேண்டும். உலகநாட்டு மன்றம் இதைச் செய்ய முன்வரவேண்டும். நடக்கும் . 2009இல் சிங்களவருக்கு ஆதரவாக தீர்மானம் போட்ட ஐநா பொதுச் சபையில்- அதற்கு மாறாக முழுமையாக திருப்திகரமாக இல்லை யென்றால் சிங்களவனை எதிர்த்து வாக்களிக்கும் நிலைக்கு நிலைமை மாறியிருக்கிறதல்லவா? உலக நாடுகள் மனச்சாட்சி விழித்துக் கொள்ள ஆரம்பித்து உள்ளதல்லவா? தமிழர்கள் வாழ்வில் ஒளி தெரிய ஆரம்பித்து இருக்கிறதல்லவா? அப்படியென்றால் தீர்வு எது? தீர்வு சுதந்திரத் தமிழீழம் தான். அது எந்த முறையில்? பொது வாக்கெடுப்பு என்று உலகம் பூராவும் பரவியிருக்கிறதே அந்த முறையிலா? அல்லது புலிகள் இரத்தம் சிந்திய பூமியில் மீண்டும் ஆயுதம் ஏந்தியா? வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும். உலகம்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம் ஆயுதப் புரட்சி ஆதரிக்கப் படவில்லை. சீனப்புரட்சியாக இருக் கட்டும். ரஷ்யப் புரட்சியாக இருக்கட்டும். வியட்னாம் புரட்சியாக இருக்கட்டும். ஆயுதம் ஏந்தித் தானே வென்றார்கள்?

மண்ணின் பெருமை காக்க ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் . அவன் மீண்டும் அந்த மண்ணில் ஆயுதம் ஏந்த வேண்டுமா இல்லையா என்பதை இந்த உலகம் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நூல் பிரபாகரன் அவர்களுக்கு உலாவாக இருக்கும். அன்றைக்கு இராச ராசன் வெற்றியை பாடிய உலா போல் உள்ளது. உலகில் இதுவரை எவனும் சாதிக்க முடியாததைச் சாதித்தவன் எங்கள் பிரபாகரன்.அவருக்கு நிகராக தென்கிழக்காசியாவில் இராணுவ ரீதியான தலைவன் இல்லை என்று அன்றே சொன்னார்கள். ஒழுக்கம் - தனிமனித ஒழுக்கம் இருந்தது அவரிடம். அந்தக் குடும்பமே வீரம் செறிந்த குடும்பம்.

நீ மரணத்தை வேண்டுமானாலும் தழுவிக்கொள். ஆனால் இலட்சியத் தையே உயிராகக் கொள் என்று உபதேசித்த குடும்பம். ஆகவே தான் நான்காம் கட்டப் போரை நீங்கள் ஆய்வு செய்தாக வேண்டும். அதன் வெளியீட்டு விழா சுதந்திரத் தமிழீழம் மலருகிற போது நடக்க வேண்டும். மலரும். இயக்கும் சக்தி பிரபாகரன் தானே. பிரபாகரன் வாழ்கிறார். பிரபாகரன் வாழ்கிறார். அவர் இயக்குவார். மாவீரர்களை புலிகளை நெருப்பு மனிதர்கள் என்று சொன்னாரே பிரபாகரன் அவர்கள். நெஞ்சிலே நஞ்சுக் குப்பியைக் கட்டிக் கொண்டு தன்னை அழித்துக் கொள்ளத் துடித்தவர்கள். அவர்களைப் போன்று வீரகாவியம் எவரும் படைத்ததில்லை. இதை அற்புதமாகக் காவியமாக்கித் தந்திருக்கிறீர்கள். இது தமிழர்களின் வீரகாவியம். இது பிரபாகரன் நூல். பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் இந்த நூல் ஒரு வீர காவியம். இது தமிழர்களின் வரலாற்றுக் காவியம்.

அடுத்த கட்டத்திற்குத் தயாரிப் பதற்கு இது ஒரு நல்ல படைக்கருவியாக இருக்கும். நீங்கள் அடுத்த கட்டத்திற்கு ஒரு ஆயுதச் சாலையைத் தந்திருக் கிறீர்கள் என்று. சொன்னார்கள் அதுதான் பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம். நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் வாழவேண்டும். நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும். இன்னும் பல நூல்களை இந்த உலகத்திற்குத் தரவேண்டும். இதற்காக ஆரோக்கியத்தோடு நீங்கள் வாழ வேண்டும். மாவீரர் நாளில் பங் கேற்றவன் என்ற முறையில் சொல் கிறேன். அந்தப் பெருமையை நிச்சயமாக மலரப் போகிற தமிழீழத்தில் இந்த நூல் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தம்பிகளே, இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் இந்த நூல் இருக்க வேண்டும். வீட்டிலே வைத்துப் படியுங்கள். இது ஒரு வரலாற்றுக் காவியம். தமிழர்களின் தனிச்சிறப்பை எடுத்துக் கூறிவிட்டீர்கள். தமிழர் உலகம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக் கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்க.