மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 20 ஜூன், 2012

சர்வதேசத் தரத்தில் வெளிவந்துள்ள நூல் "தினத்தந்தி'' நாளிதழ் பாராட்டு


"விடுதலைப் புலிகள்'' இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. எனினும் பழ. நெடுமாறன், "பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற தலைப்பில் எழுதியுள்ள பெரிய புத்தகம் (1208 பக்கங்கள்) தனிச்சிறப்பு வாய்ந்தது.

இலங்கையில் போர் நடந்த காலத்திலேயே, அங்கு பலமுறை சென்று வந்தவர் பழ. நெடுமாறன், போர்க்களத்தை நேரில் கண்டவர். பிரபாகரனுடன் நெருங்கிப் பழகிய வர். எனவே இலங்கைத் தமிழர் போராட்டம் தொடங்கியது முதல் அண்மைக் காலம் வரையிலான நிகழ்ச்சிகளை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். பிரபாகரனின் முழுமையான வாழ்க்கை வரலாறும், இதுவரை வெளிவராத பல தகவல் களும் இதில் இடம் பெற்றுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத் தில் முக்கிய பொறுப்பு வகித்தவர் களின் படங்களும் இடம் பெற் றுள்ளன. பிரபாகரன் கைப்பட எழுதிய பல முக்கிய கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இலங்கைப் போர் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள, சர்வதேசத் தரத்துடன் வெளிவந்துள்ள இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும்.

நன்றி : "தினத்தந்தி' 23-5-12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக