மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 28 ஜனவரி, 2011

சூடான் பிரிவினையும் இலங்கை படுகொலையும்!

சூடான் பிரிவினையும் இலங்கை படுகொலையும்!
ஆப்ரிக்க நாடான சூடானுக்கும் இலங்கைக்கும் நூற்றியெட்டு ஒற்றுமைகளைக்கூட கண்டுபிடித்துச் சொல்லலாம்.

சூடான் நாட்டை இரண்டாகப் பிரிப்பதா என்பதைத் தீர்மானிக்க, கடந்த ஜனவரி 9ம் தேதி கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் மேற்பார்வையில் நடந்துமுடிந் திருக்கும் இந்தத் தேர்தலில் அநேகமாக 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள், நாட்டை இரண்டாகப் பிரிப்பதற்கு வாக்களித்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

ஆப்ரிக்க கண்டத்தின் மிகப்பெரிய நாடு சூடான். நைல் நதி தந்த செழுமையும், சஹாரா பாலைவனத்தின் வறட்சியும் இந்த தேசத்தின் இனிய முரண்கள். முரண்பாடுகள் இதோடு முடிந்துவிடவில்லை... வடக்கு சூடான் அரபு முஸ்லிம்கள் வாழும் பிரதேசம்; தெற்கு சூடான் ஆப்ரிக்க கறுப்பினத்தவர் வாழும் பிரதேசம். இனம், பண்பாடு, மதம், மொழி என எல்லாவற்றாலும் முரண்பட்ட இரண்டு மக்கள் குழுக்கள், ஒரே தேசத்துக்குள் வாழ நேர்ந்தால் என்ன ஆகும்? பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்தை நசுக்கத்தானே செய்யும்! அதுதான் சூடானில் நேர்ந்தது. தெற்கு சூடானின் வளங்களைச் சுரண்டிய வடக்குப் பகுதி மக்கள், அதோடு நிற்காமல் தெற்கு சூடான் கறுப்பினத்தவரை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றார்கள்.
 
நூற்றாண்டுகள் கணக்காகத் தொடர்ந்த இந்த அடிமை வியாபாரமும் சுரண்டலும் இங்கிலாந்து சூடானை ஆக்கிரமித்தபோது நின்றது. 1956ம் ஆண்டில் எகிப்து மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பிடியிலிருந்து சூடானுக்கு விடுதலை கிடைத்தது. அதன்பிறகு பழைய குருடி கதைதான்! தெற்கு தேய, அதிகாரம் முழுக்க வடக்கில் குவிந்தது. அடிப்படை கட்டமைப்புகள், பொருளாதார மேம்பாடுகள், கல்வி நிலையங்கள் என வடக்கு சூடான் முன்னேற, மண் குடிசைகளைத் தாண்டி தெற்கில் வேறு எதுவும் வளரவில்லை. வேறுவழியின்றி சூடான் மக்கள் விடுதலைப் படை என்ற போராளிக்குழு உருவானது. ஆயுதம் ஏந்திய போராட்டமும் தனி நாடும்தான் இந்த இன வேறுபாட்டுக்குத் தீர்வு என அந்தக் குழு முடிவெடுத்தது. சூடான் அரச படைகளுக்கும் போராளிப்படைகளுக்கும் மோதல் உருவானது. 50 ஆண்டுகளைத் தாண்டி நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக பக்கத்து நாடுகளுக்குச் சென்று தஞ்சம் புகுந்தனர். சூடான் மக்கள் விடுதலைப் படையிலிருந்து நான்கைந்து குழுக்கள் தனித்தனியாகப் பிரிந்தன; ஆனாலும் அது தன் செல்வாக்கை இழக்கவில்லை.

சூடான் மக்கள் விடுதலைப் படையை பல ஆண்டுகளாக வழிநடத்தி வந்த மக்கள் தலைவர் ஜான் கெரங் கடந்த 2005ம் ஆண்டு மரணமடைந்தார். இரண்டு தலைமுறைகளாக நடந்துவந்த விடுதலைப் போராட்டம் அவரது மரணத்தோடு முடிந்துவிடுமோ என்ற அச்சம் தெற்கு சூடான் அபலை மக்களைத் தொற்றிக் கொண்டது. ஆனால், அமெரிக்க அரசு தலையிட்டு சூடானில் அமைதியை ஏற்படுத்தியது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் விருப்பத்தின் பேரில் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் மெபெகி, கத்தார் நாட்டு அதிபர் என பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சூடான் அதிபர் ஒமர் ஹஸன் அல்&பஷீர் இதன்பிறகு பிரிவினை வாக்கெடுப்புக்கு சம்மதம் தெரிவிக்க, இப்போது வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. ‘சேர்ந்திருக்கிறோம்’, ‘பிரிவினை’ என இரண்டு சின்னங்கள் கொண்ட ஓட்டுச்சீட்டு தெற்கு சூடான் மக்கள் எல்லோருக்கும் தரப்பட, அதில் முத்திரை குத்த வேண்டும். அநேகமாக சமீபகால வரலாற்றில் இப்படி ஓட்டெடுப்பு நடத்தி பிரிக்கப்படும் தேசம் சூடானாகத்தான் இருக்கும்.

இந்த தேசப்பிரிவினை சுமுகமாக நடந்துவிட்டாலும், அதற்குப் பிறகும் சர்ச்சைகள் இருக்கத்தான் செய்யும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. தெற்கு சூடானில் இருக்கும் சிறுசிறு போராளிக் குழுக்கள், இப்படி தேசத்தை பிரித்துத் தர விரும்பாத வடக்கு சூடானில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், இன்னும் வடக்கோடு இருப்பதா, தெற்கோடு போவதா என தீர்மானிக்காத வேறு சிறுபான்மை இனக்குழுக்கள் என பல முரண்பாடுகள் நீடிக்கத்தான் செய்யும். ஆனாலும் ‘உலக வரைபடத்தில் ஒரு புதிய நாடு உதயமாவதைத் தவிர்க்க முடியாது. தெற்கு சூடான் மக்களின் விடுதலை தாகத்துக்கு அங்கீகாரம் தந்தாக வேண்டும்’ என்கிறது ஐ.நா. சபை.

‘சூடானில் நடக்கும் உள்நாட்டுப் போர் ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமின்றி, உலகின் ஸ்திரத்தன்மையையே பாதிக்கும் அபாயம் இருக்கிறது; அதனால்தான் உலக நாடுகள் அமைதி முயற்சியில் தலையிட்டது’ என்று அமெரிக்கா சொல்லியிருக்கிறது. தெற்கை பிரித்துத்தர ஒப்புக் கொண்டதற்காக வட சூடானுக்கு அமெரிக்காவும் உலக நாடுகளும் ஏராளமான சலுகைகளை அள்ளி வழங்க உள்ளன. பொருளாதாரத் தடையை நீக்குவது, தீவிரவாதத்துக்கு அடைக்கலம் தரும் நாடு என்ற பட்டியலிலிருந்து நீக்குவது, கடன் தள்ளுபடி என அந்தப் பட்டியல் நீளமானது.

தெற்கு சூடான் மக்களின் விடுதலைப் போராட்டம் போல, இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் நிகழ்த்திய விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் கண்களுக்கோ, ஐ.நா. சபையின் கண்களுக்கோ தெரியாமல் போனது ஏன்? இங்கும் அதே இன முரண்பாடுகள் இருந்தது; படுகொலைகள் நிகழ்ந்தன; அகதிகளாக பல லட்சம் மக்கள் உலகமெங்கும் சென்று அவதியுறுகிறார்கள்; உள்நாட்டுப் போரில் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்; விடுதலைப்புலிகள் அமைப்பையே நசுக்கியபிறகும்கூட சாதாரண தமிழர்களை பயங்கரவாதிகளாகப் பார்க்கும் போக்கு நீடிக்கிறது. தமிழ் மக்களின் விடுதலை தாகம் பிரபாகரனோடு முடிந்துபோகுமோ என்ற ஏக்கம் இருக்கிறது. தெற்கு சூடான் விடுதலையில் அக்கறை காட்டிய அமெரிக்காவும் சீனாவும் இலங்கை வராதது ஏன்?

ஒரே விஷயம்தான்... தெற்கு சூடானில் அபரிமிதமான எண்ணெய் வளம் இருக்கிறது. இங்கிருந்து கச்சா எண்ணெய் அதிகம் ஏற்றுமதியாவது சீனாவுக்குத்தான். இந்த தேசத்தின் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்தால், அதனால் சீனாவுக்கு ஆதாயம் உண்டு. அதேபோல தாமிரத்திலிருந்து தங்கம் வரை ஏராளமான கனிம வளங்கள் தெற்கு சூடானில் இருக்கிறது. சுரங்கங்கள் அமைத்து இவற்றை வெட்டி எடுக்கும் உரிமையைப் பெறுவதற்கு உலக நாடுகள் மத்தியில் கடும் போட்டி. விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தந்ததன்மூலம் இதில் அமெரிக்கா ஜெயித்துவிட்டது.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கச்சா எண்ணெயோ, தங்கச் சுரங்கமோ, குறைந்தபட்சம் ஒரு தாமிரச் சுரங்கமோ கூட இல்லை. அப்புறம் எப்படி தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம், உலக நாடுகளின் கண்களில் படும்! எண்ணெய்க் கிணறும் தங்கச்சுரங்கமும் இல்லாத பூமியில் வாழ்வது தமிழர்களின் தவறுதானே
                                                                                  unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக