மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

"கொடுமைகளின் ஆணிவேர் குடும்ப அரசியல்!"

"கொடுமைகளின் ஆணிவேர் குடும்ப அரசியல்!"
பழ.நெடுமாறன், தலைவர், உலகத் தமிழர் பேரவை.
''இந்திய அரசியலுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல்வர் கருணாநிதி அளித்திருக்கும் மிகப் பெரிய கொடை, குடும்ப அரசியல் சூட்சுமம்!
மக்கள் இங்கு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வாரிசு அரசியல் என்பது வேறு, குடும்ப அரசியல் என்பது வேறு. வாரிசு அரசியல் என்பது, தனக்கென ஒரு வாரிசை நியமித்து, அவருக்கு அதிகாரம் அளிப்பது.குடும்ப அரசியல் என்பது அப்படி அல்ல. குடும்பத்தின் ஒவ்வோர் உறுப்பினரையும் அதிகார மையங்களாக்கி, அவரவர் விருப் பப்படி செயல்பட அனுமதிப்பது. ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் மிக மோசமான எதிரி.
தமிழகத்தில் இன்றைக்கு அதுதான் நடப்பில் இருக் கிறது. குடும்ப ஆதிக்கச் சக்திகள் இடையேயான போட்டி, பொறாமையால் -பதவி வெறியால், அரசியலும் அரசு நிர்வாகமும் முற்றிலும் சீரழிந்துவிட்டன. மண்ணில் இருந்து அலைக்கற்றை வரை நாட்டின் அரிய வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. எல்லாவற்றிலும் ஆள்வோரின் குடும்ப உறுப்பினர்களுக்குப் பங்கு இருக்கிறது. அரசு அதிகாரிகள் யார் உத்தரவுக்கு அடிபணிவது எனத் தெரியாமல் குழம்பி நிற்கிறார்கள். 'மதுரை தினகரன் சம்பவம்’ முதல் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்’ வரை ஒவ்வொரு விவகாரத்தின் ஆணி வேரும் குடும்ப அரசியலில்தான் புதைந்துகிடக்கிறது.
முதலில் முதல்வர் கருணாநிதிதான் இதைத் தன் குடும்பத்திலிருந்து தொடங்கிவைத்தார். பிறகு, அவருடைய அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் அவரைப் பின்பற்றினார்கள். இப்போது தி.மு.க-வின் கிளை அமைப்பு கள் வரை இந்தக் குடும்ப அரசியல் புரையோடி இருக்கிறது. கருணாநிதியால் இதைத் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது. சூத்திரதாரியே அவர்தானே?
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலாவது இந்த நிலை உண்டா? தமிழகத்தை இதற்கு முன் ராஜாஜி, ஓமந்தூரார், காமராஜர், அண்ணா என எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். இதற்கு முன் இதுபோல முன்னுதாரணம் உண்டா? தன்னுடைய தாய் சென்னைக்குத் தன் வீட்டுக்கு வந்தால்கூட, ஓரிரு நாட்களுக்கு மேல் அவரைத் தங்க அனுமதித்தது இல்லை காமராஜர். தன்னுடைய குடும்பத்தின் நிழல்கூட அரசியல் அதிகாரத்தின் மீது படும்படி நடந்துகொண்டது இல்லை அண்ணா. ஆனால், இன்றைக்கு நாட்டுக்கே மோசமான முன்னுதாரணமாக மாறி இருக்கிறார் கருணாநிதி. தமிழகத்தின் கடைக்கோடி கிராம அதிகாரம் வரை தி.மு.க நிர்வாகிகளின் குடும்பஅரசியல் ஊடுருவி இருக்கிறது. மக்கள்வெறுப் பில் இருக்கிறார்கள். வெறுப்புக்கு நிச்சயம் ஏதேனும் ஒரு வடிகால் இருக்கும்தானே!''




unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக