மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 18 மே, 2011

சுதந்திரம் தானே கேட்டோம்.



சிங்களனோ பலோ பலோவென(நாயே நாயே)
நிர்வாணமாக்கி நெற்றி பொற்றில்
தோட்டாவை சுமக்கச் செய்தான்
உயிர்காக்க வருமென்றிருந்த
செஞ்சிலுவை சங்கமோ
ஆடை அவிழ்க்கப்பட்டு பூட்சு கால்களால்
மிதிப்பட்டு கிடந்த எம்பிணங்களை
சுமக்க வந்தது,கணக்கெடுப்பதற்காய்.

குருதியில் எம்மண் சிவக்க
கடைசி வரை உதவ வருமென்றிருந்த
இந்தியாவோ,சிங்கள மாந்தர்களுக்கு
சிவப்பு கம்பல வரவேற்பளித்து
பகற்கனவாக்கியது ஈழக்கனவை.

இலட்சக்கணக்கில் செத்து கிடந்தோம்
ஐ.நா.வோ ஆயிரக்கணக்கில் மாண்டு
கிடந்தார்களென்று அறிக்கை வெளியிடுகிறது
மனிதநேய கடமைக்காய்,
போர்க்குற்ற விசாரணையையோ போர்
நடத்திவர்களிடமே கையளிக்கிறது
ஐ.நா. சபை.

சிந்தாபாத் சிந்தாபாத்தென வரலாற்று
புத்தகத்தில் வீரம் செறிந்த
நாடு இந்தியா என்றிருந்தோம்,
காந்தியை கண்டபொழுது எவருக்கும்
தீங்களிக்கா நாடு என்றிருந்தோம்,
இப்பொழுதே புரிந்தது இந்தியா
இந்தியரால் ஆளப்படவில்லை-நாட்டையே
காட்டிக்கொடுக்கும் கைக்கூலிகளாலும்
இயேசுவையே சிலுவையில் ஏற்றிய
இத்தாலிக்காரியாலும் ஆளப்படுகிறது,என்பதை.

மலைப்போல் நம்பியிருந்தோம் எங்கள்
முத்தமிழறிஞரை அவரோ-காலை
சிற்றுண்டியை முடித்துக்கொண்டு
மதிய உணவிற்குள் முடித்துக்கொண்டார்
உண்ணாவிரதத்தை
ராசபக்சே போர் நிறுத்தத்தை
அறிவித்து விட்டாரென்று.
நேற்று பிறந்தாற் பிள்ளைப்போல்
அய்யகோ ! என் இனம் சாய்கிறதென்றும்
தனி ஈழமே தீர்வென்றும் கூச்சலிடுகிறார்,
போர் முடிவுற்ற பின்னரும்
கடிதம் வரைகிறார் போர் நிறுத்தத்திற்காக.

சுதந்திரம் தானே கேட்டோம் !
முள்வேலிக்குள் தள்ளும்
தந்திர சூத்திரமா கேட்டோம் ?
சுதந்திரம் தானே கேட்டோம் !

மகா.தமிழ்ப் பிரபாகரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக