மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 18 மே, 2011

மே 18 போர்க்குற்ற நாளா? துக்க நாளா? மே 18 தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு கரிநாள்.

முன்னணித் தளபதிகள் உட்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். பலநூறு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். பல்லாயிரம் சிறுவர்கள் அநாதைகளாக்கப்பட்ட நாள். பல்லாயிரம் மக்கள் அங்கவீனர்களாக்கப்பட்ட நாள். மூன்று இலட்சம் மகக்ள் சொந்த மண்ணிலே அகதிகளாக்கப்பட்ட நாள். ஒட்டுமொத்தமாக தமிழ் தேசிய இயக்கமான தமிழ் தேசிய ஆன்மாவின் எழுச்சி மௌனிக்கப்பட்ட நாள்.

தமிழ் தேசிய ஆன்மா மீண்டும் எழுச்சிகொள்ள வேண்டாமா?
வெறும் துக்கநாள் என அழுதுவிட்டுப் போவதா? இத்தனைக்கும் காரணம் சிறிலங்கா அரசாங்கம் மட்டுமா? இல்லை. வல்லரசுகள் உட்பட 22 நாடுகள் உதவி செய்தன. அந்த நயவஞ்சகப் போர் முள்ளிவாய்க்காலில் நினைத்ததை முடித்தது.
தற்போது அதே வல்லரசுகளும் அதே நாடுகளுமே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக கர்ஐpக்கின்றன. அதே வல்லரசுகளே சிறிலங்கா போர்க்குற்றம் செய்துவிட்டதாக வர்ணிக்கின்றன. போர்க்காலத்தில் சிறிலங்கா அரசினால் துரத்தியடிக்கப்பட்ட மனித உரிமை அமைப்புகளான சர்வதேச மன்னிப்புச்சபை மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்றன சிறிலங்கா போர்க்குற்றம் செய்ததாக ஆதாரத்துடன் கூறுகின்றன. சர்வதேச ஊடகங்களான 'சனல் 4' 'அல்ஜசீரா' போன்ற ஊடகங்கள் சிறிலங்காவின் போர்க்குற்றத்தை ஆதாரத்துடன் வெளியிடுகின்றன. புலம்பெயர் தமிழ்ச் சமூகம் சிறிலங்கா சனாதிபதியோ�� அமைச்சர்களோ தமிழர் வாழும் நாடுகளுக்கு விஜயம் செய்தால் போர்க்குற்றவாளியை வெளியேற்று என கவனயீர்ப்புச் செய்கின்றது. இவரகள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சிறிலங்கா தூதர்களாக வரும் இராணுவத்தினரை போர்க்குற்றவாளிகள் எனக் கூறி திருப்பி அனுப்புகின்றது மேற்கத்தைய நாடுகள். இதேநேரம் ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையே சிறிலங்கா அரசு போர்க்குற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காக பிரித்தானியா பிரான்ஸ் தென் ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இந்த அறிக்கையை வரவேற்றுள்ளதுடன் பகிரங்க விசாரணைகளை நடத்தப்பட வேண்டுமெனக் கோருகின்றன.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை காரணம் காட்டி அதில் போர்க்குற்ற சாட்சியங்கள் நிறைய உள்ளன. தமிழீழப் பிரகடனத்துக்குத் தேவையான காலமும் நேரமும் உருவாகியுள்ளதாக அமெரிக்க சட்டவல்லுனர் பேராசிரியர் பொய்ல் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு இதனால் கலக்கமடைந்துள்ளது. ஈழத்தமிழனைப் பொறுத்தவரை தமிழீழம் கிடைக்கும்வரை ஒவ்வொரு நாளும் 'துக்கநாள்'தான்
துக்கமென விக்கிவிக்கி அழுவதற்கான நாள் அல்ல மே 18.
தனித்துவப்படுத்தி அடையாளப்படுத்தி யூதர்களுக்கு ஒரு 'ஹொலக்கோஸ்ட்' (Holocaust) போல ஈழத்தமிழர்களுக்கு மே 18 போர்க்குற்றநாள் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது வெறும் கொலை அல்ல: இனவழிப்பு என ஐ.நா. பிரகடனப்படுத்தி மகிந்தவின் பரிவாரங்களை குற்றக்நிண்டில் ஏற்றவேண்டும்.
;அப்போதுதான் எம் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் வீரச்சாவடைந்த போராளிகளையும் மக்களையும் ஈழத்தமிழினம் மாத்திரம் அன்றி உலகம் இருக்கும் வரை ஹொலக்கோஸ்ட்டை நினைவுகொள்வது போல் மே 18 போர்குற்றநாளில் நினைவுகொள்வர்.
நான்கு திசையிலும் போர்க்குற்றம் என்பதே பேச்சாக உள்ளது. இந்நிலையில் மே 18 என்பதனை தமிழினத்தின் மீள் எழுச்சிக்காக போர்க்குற்றநாள் எனப் பிரகடனப்படுத்தி அந்நாளிலிருந்து எழுச்சி பெறவேண்டும். இந்நாளையே புலம்பெயர் சமூகம் கடந்த வருடம் போர்க்குற்றநாளாக அனுஸ்டித்தது.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்நாளை துக்கநாளாக அறிவித்துள்ளது ஏன்?
வீரத்தளபதிகள் போராளிகள் வீரச்சாவடைந்த நாளை நினைவு கூர்வதற்கான நாளே மாவீரர் நாளாகும். அந்நாள் எழுச்சி நாளாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேட்டிலும் மாவீரர் நாளை மாவீரர் எழுச்சிநாள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. (இதற்கு ஆதாரமாக உத்தியோகபூர்வ வெளியீடு உள்ளது.)
வீரத்தளபதிகள் போராளிகள் பல்லாயிரம் மக்கள் அழிக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடைபெற்ற நாளை அடையாளமாக வைத்து எழுச்சி பெறுவதனை விடுத்து�� ஏன் துக்கம் என அழுதுவிட்டுப் போக வேண்டும்? தேசியத்தலைவர் கூறியிருக்கிறார்:
"வலியைத் தந்தவனுக்கே வலியைக் கொடு" என எம் இனத்தை அழித்த எதிரிக்கு வலியைக் கொடுப்பதாயின் ஒரே வழி ஐ.நா. மூலமாக மகிந்தவையும் அவரது பரிவாரங்களையும் போர்க்குற்றவாளிக் நிண்டில் ஏற்றி ஐ.நா. மூலமாக அரசியல் தீர்வுகாண்பதே.
ஐ.நா. நிபுணர்குழு அறிக்கை வெளிவந்துள்ள சூழ்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் தனது ஆதரவு நாடுகளை நாடி ஓடுகின்றது. சிறிலங்காவின் உள்ள தமிழக் குழுக்கள் கட்சிகள் நிபுணர்குழு அறிக்கைக்கு எதிராக அறிக்கை விடுமாறு வேண்டப்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் தேசிய மக்கள் முன்னணி தவிர அனேகமான தமிழ் கட்சிகள் குழுக்கள் மகிந்த அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளன.
இதேநேரம் அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல" நிபுணர்குழு அறிக்கை" மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை மழுங்கடிக்கச் செய்யும் வகையில் கே.பி.யை களமிறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது எனக் கூறியிருக்கின்றார்.
இவ்வேளையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போர்க்குற்ற நாளான எழுச்சிநாளை துக்கநாளாக அறிவித்துள்ளது பெரும் அச்சமடைய வைக்கிறது. ஒரு உறுப்பினரால் மே 18ஐ துக்கநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என தனிநபர் மசோதா கொண்டுவரப்பட்டதாகவும் அது சில மாற்றங்களின் பின் உறப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசின் அறிக்கை கூறுகின்றது. அந்த தனிநபர் பிரேரணையைக் கொண்டுவந்தவர் யார்? அவர் கே.பி.யின் நெருங்கிய உறவினர் என அறியப்படுகின்றது.
இங்கு நாம் இவற்றை எழுதுவதால் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு எதிரானவர்கள் என நினைக்க வேண்டாம். நாம் முன்னரே கூறியுள்ளோம் சரியாயின் தட்டிக்கொடுப்போம் பிழையாயின் சுட்டிக்காட்டுவோம் என. நாடுகடந்த தமிழீழ அரசு நேர் வழியில் பயணிக்க வேண்டும் இலக்கை அடையவேண்டும் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவே சுட்டிக்காட்டுகிறோம். துரோக வரலாறு போதும். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம். முளையிலேயே கிள்ளுவோம். துக்க நாள் பிரகடனம் ஏதேனும் உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகின்றது. தேசியத்தின்பால் பற்று வைத்திருந்து செயற்பட்ட பிழைகளைச் சுட்டிக்காட்டிய தேசியவாதிகள் நாடுகடந்த தமிழீழ அரசிலிருந்து நயவஞ்சகமான முறையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போதும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசியத்தை நேசிக்கும்(?) உறுப்பினர்கள் இதுபற்றி சிந்திக்கவில்லையா? தமிழர் தேசிய இயக்கத்தின் சட்ட ஆலோசகராகவும் பேச்சுவார்த்தைக் குழுவில் சில கட்டங்களில் அங்கம் வகித்தவருமான மதிப்புக்குரிய ருத்திரகுமாரன் அவர்களையும் தேசியத்தை நேசிக்கும் ஏனைய உறுப்பினர்களையும் தயவுகூர்ந்து எமது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்த மாவீரர் மேலும் மக்கள் மேலும் ஆணையிட்டுக் கேட்கிறோம். துக்கநாள் என்பதை போர்க்குற்ற நாள் எனப் பிரகடனம் செய்யுங்கள். கடந்த வருடம் ஏற்கனவே உலகளாவிய தமிழர் சமூகத்தால் பிரகடனம் செய்யப்பட்ட போர்க்குற்றநாள் என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசும் ஏற்றிருந்தது. எனவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை புலம்பெயர் தமிழ் சமூகத்தினருடன் ஒன்றித்து பயணிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புலம்பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் கனடாவிலேயே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றபோதும் கனடிய அரசு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்றோ அல்லது மகிந்த அரசின் போர்க்குற்றத்தைக் கண்டித்தோ இன்னமும் ஓர் அறிக்கையைத் தானும் வெளியிடவில்லை.
எனவே மே 18 போர்க்குற்ற நாளில் ரொறன்ரோ நகரமத்தியிலுள்ள ஒன்ராறியோ பாராளுமன்றத்தின் முன்னால் குயின்ஸ்பார்க் திடல் அனைத்துத் தமிழ் மக்களும் திரண்டு கனடிய அரசிடம் நீதி கேட்பது தமிழர் தம் வரலாற்றுக் கடமையாகும். முதலில் நாம் வாழும் கனடா அரசை சிறிலங்கா அரசின் போர்க்குற்றத்தை கண்டிக்க வைக்கவும் ஐ.நா.வில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் போர்க்குற்ற விசாரணை மீதான தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறும் கேட்பது நம் கடமையாகும். எனவே மீண்டும் கேட்கின்றோம் மே 18ம் திகதி போர்க்குற்ற நாள் அன்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு அனைவரையும் குயீன்ஸ் பார்க் திடலில் ஒன்று திரளுமாறு.
நாடுகடந்த அரசு துக்கநாள் என்பதனை போர்க்குற்றநாள் என மாற்றினால் என்ன மாற்றாவிட்டால் என்ன தமிழின நன்மை கருதி அனைத்துத் தமிழ் மக்களையும் மே 18 போர்க்குற்ற நாள் என மனதில் நிறுத்தி புலம்பெயர் நாடுகளில் வாழும் மக்கள் அந்தந்த நாட்டில் அன்றைய தினம் நடைபெறும் போர்க்குற்ற நாள் நிகழ்வுகளிலும் ஐ.நா முன்றலில் நடைபெறும் போர்க் குற்றநாள் நிகழ்வுகளிலும் உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.
நன்றி: கனடா உலகத்தமிழர் பத்திரிகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக