மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 1 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி! - நெடுமாறன்


பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதில் அதிகமாக மகிழ்ச்சியடைவது இலங்கை அதிபர் ராஜபட்ஷே தான். கடந்த 2009-ம் ஆண்டில் பிரணாப் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதவர் பிரணாப் முகர்ஜி. மேலும் தற்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ஷேவுடன் சேர்ந்து போர் நிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லி மக்களை திசை திருப்புகிறார்.
ஆகவே தமிழ்நாட்டைச் சார்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் டெசோ இயக்கத்தை நானும், கி.வீரமணியும், மு.கருணாநிதியும் சேர்ந்து தான் தொடங்கினோம். ஆனால் திடீரென இனி டெசோ இயக்கம் செயல்படாது என அறிவித்து விட்டு கருணாநிதி ஒதுங்கிக் கொண்டார். அவ்வாறு அவர் செய்ததற்கு முதலில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு ஏன் அவ்வாறு செய்தார் என்ற விளக்கமும் சொல்ல வேண்டும். அதை செய்யாமல் மீண்டும் டெசோ செயல்படும் என்ற அவரின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஈழப்போர் உச்சகட்டமாக நடைபெற்ற போது அந்த மக்களை காப்பாற்ற எதுவும் செய்யாத கருணாநிதி மீது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது அதை மாற்றுவதற்காக இப்போது டெசோ மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் அவர்.
தமிழர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக வேட்டையாடி வருகின்றனர். இதனை மத்திய அரசோ, இந்திய கடற்படையோ வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது. ஆனால் இத்தகைய ஒற்றுமை தமிழக கட்சிகளிடம் இல்லை என்பது வேதனையளிப்பதாகும்.
தற்போது சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. முன் கூட்டியே யாரும் கைது செய்யக்கூடாது என சொல்லியிருக்கிறார். இன்றைக்கு கைது செய்யப்படுவதற்கும், சிறை செல்வதற்கும் திமுக தொண்டர்கள் யாரும் தயாரில்லை என்பதை மறைப்பதற்காகவே இவ்வாறு அவர் சொல்லி வருகிறார். என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக