மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 16 ஜூலை, 2012

மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்! - நெடுமாறன்


விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்- பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்- நூல் எழுதப்பட்டது என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் என்ற நூலின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. விழாவில் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று பேசியது:
உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் பிரபாகரன் போராட்டத்திற்கு எந்த நாடுகளின் உதவி கிடைக்கவில்லை. 20 நாடுகள் அணி திரண்டு ஒழிக்க முயற்சித்தது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதியை திரட்டி ஆயுதங்களை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன். இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்.
பிரபாகரன் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல் தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும். ஒரு கருவியாகும். இந்நூலை படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். தோள் கொடுக்க வேண்டும். எப்படியாவது பதவி பெற்று, அதனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடையே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளது. இந்த மாயையை மாற்றுவதற்கு இப்படி பட்ட நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் நிலை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மலேசிய தமிழர்களுக்கு இந்நிலை ஏற்படலாம். ஏன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இந்நிலை ஏற்படலாம். எனவே நாம் இந்த காலக்கட்டத்தில் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து அனைத்துவித தியாகத்திற்கு தயாராகி போராட துணிய வேண்டும். தமிழர்களின் முதலாவது, இறுதியான எதிரி இந்தியா. இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி, அதற்கு துணையாக நின்றி கருணாநிதியும் குற்றவாளி என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக