மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 29 ஜூன், 2011

நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு!

ப.திருமாவேலன்
படங்கள்: என்.விவேக்

ற்றைக் கொலைக்காக ஊரையே எரித்து, நீதிக்காக உயிர்விட்ட கண்ணகி சிலைக்கு முன்னால்... ஒரு லட்சம் பேரின் கொலைகளுக்காக மெழுகுத் தீ ஏந்தி மெரினா கடற்கரையில் கூடி நின்றார்கள் தமிழர்கள்!
ஒரே முழக்கம், ''இந்தியாவே... ஐ.நா-வில் ராஜபக்ஷேவின் போர்க் குற்றத்தை மறைக்காதே!'' என்பதுதான்!
''கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா தம்பி! கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்!'' என்று சொன்ன அண்ணா சமாதி அருகில் இருக்க... ''விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்பித்ததே எம்ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனாவால் 'பெருமிதம்’ செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவகம் பக்கத்தில் இருக்க... உலகத்துக்கு அறம் பாடிய திருவள்ளுவன் முதல் ஏகாதிபத்தியங்களை நோக்கிப் படை நடத்திய நேதாஜி வரைக்கும் சிலைகளாக நிற்க... கடந்த 26-ம் தேதி மாலை மெரினாவில் ஏந்திய மெழுகுவத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் வித்தியாசமானது.
கட்சிக்காகவோ, சாதிக்காகவோ, மதத்தின் பேராலோ கூடுவதுதான் தமிழகத்தின் வேதனையான வாடிக்கையாக இருந்தது. ஆனால், தலைவர்கள் அறிவிக்காமல்... தமிழர்கள் வந்தார்கள். கட்சிகள் சார்பில் அறிவிப்பு இல்லாமல்... கனத்த இதயங்களுடன் கூடினார்கள். ''சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த நினைவேந்தல் நிகழ்வதால், கட்சி, சங்கக் கொடிகளுடன் வருவதைத் தவிர்க்கவும். தனி நபர் முழக்கங்களைத் தவிர்க்கவும்'' என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வரையறையை மீறாமல், 'தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே’ என்று ஒரே கோஷம் உயர்ந்தது.
'மே 17 இயக்கம்’ என்ற அமைப்பை திருமுருகன் என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை,  தமிழர்கள் அனைவர் மனதிலும் விதைப்பதன் மூலமாக உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதுதான் நோக்கம். இந்த சிறு அமைப்பினர்தான் மெரினா கடற்கரையில் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். எஸ்.எம்.எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று தகவல் அலைகளைப் பரப்பினார்கள்.
கண்ணகி சிலைக்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்வை நடத்தப்போகிறோம் என்றதுமே போலீஸ் முதலில் தலையை ஆட்டி மறுத்தது. ''மும்பையில், டெல்லியில், இதுமாதிரியான இரங்கல் நிகழ்ச்சிக்கு அனுமதி தருகிறார்களே?'' என்று இந்த அமைப்பினர் கேட்டதும், ''தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது'' என்று போலீஸ் பதில் தந்தது. 'ஜூன் 26 ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ள, சித்ரவதைகளுக்கு எதிரான தினம். அதை அனுசரிக்க அனுமதி இல்லையா? சம்மதம் இல்லை என்றால், அதை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள்’ என்று இந்த அமைப்பினர் சொல்ல... அப்போதுதான் இறங்கி வந்தது போலீஸ். ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆண்டு தோறும் ஜூன் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை 'மே 17’ இயக்கத்தினர் ஈழத்துக்கானதாக மாற்றிக்கொண்டனர்.
ஈழத்தில் நடந்ததை வெறும் சித்ரவதை என்றா சொல்ல முடியும்? ஓர் இனத்தையே சிதைத்த வதை அது!
''ஈழத்தில் நடந்ததைப் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் என்ற வார்த்தைகளோடு அடக்க விரும்பவில்லை. அங்கு நடந்தது விடுதலைப் போராட்டம் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் ஈழத்தில் நடந்ததை போர்க் குற்றம் என்பதோடு குறுக்கிவிடக் கூடாது'' என்று சொல்லும் திருமுருகன், ''இந்த நிகழ்வு குறித்து ஐ.நா. அமைப்புக்கும் சென்னையில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் செய்தி கொடுத்தோம். 'இலங்கை சம்பந்தமாக நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நீங்கள் செல்லக் கூடாது’ என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக ஐ.நா. அலுவலர் ஒருவர் எங்களிடம் சொன்னார். அஞ்சலி செலுத்துவதற்குக்கூட தமிழன் அருகதை இல்லாமல் போய்விட்டானா?'' என்று கேட்கிறார்.
தமிழ் மண்ணில் ஈரம் பட்டுப்போய்விடவில்லை என்பதையும், உண்மையான முழக்கமாக இருக்குமானால் அடையாளம் தெரியாதவர் அழைத்தால்கூட வருவோம் என்பதையும் ஜூன் 26 சொல்கிறது. அதைவிட முக்கியமானது, ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் காற்று வாங்க வந்த மற்றவர்களும்கூட, தத்தம் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு வாங்கிப் போனதுதான்!
                                                                                                                  நன்றி              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக