மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 10 டிசம்பர், 2012

மீண்டும் மீண்டு எழுந்து தமிழீழ வரலாறு படைக்க வாரீர்.


உண்மையோடு - உணர்வோடு - உரிமையோடு வாழ - மீண்டும் மீண்டும் மீண்டெழுவோம். 1505ஆம் ஆண்டிலிருந்து - அடைக்கலம் நாடி - நாடு பிடிக்க வந்த போர்த்துக்கேயனுக்கும் - ஒல்லாந்தனுக்கும் - பிரித்தானியனுக்கும் எதிராக - எமது உரிமை காக்க போராடினார்கள் - எங்களது முப்பாட்டனார்களும் - அன்றிலிருந்து போராட்டத்தையே வாழ்வாகக் கொண்டுதானே இன்றுவரை தமிழினம் உயிர்வாழுகின்றது என்பதும் வரலாறு - நீ அறியாயா?
   ஈழத்தீவில் இருந்த மூன்று தனி நாடுகளும் (தமிழீழ நாடு � கண்டி நாடு � கோட்டை சிங்கள நாடு) என்பன - மொழி � கலை � பண்பாடு � சமயம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் - என்பவற்றால் வேறுபட்டிருந்த - இரு இனங்களையும் - தமது நிர்வாக நலனுக்காகவே பிரித்தானிய அரசு 1833ஆம் ஆண்டில் - தமிழ் மக்களின் அனுமதியின்றி - ஒற்றை ஆட்சி முறைக்குள் நிர்வாகப்படுத்தினர் - ஆங்கிலேயரின் இவ் இணைப்பினால் - தமிழீழம் தனக்கே உரித்தான - பிரதேசம் - நிர்வாகம் - நீதிபரிபாலனம் என்பவற்றை அழித்துவிட்டனர் என்பதே - ஆங்கிலேயர் வரவால் தமிழீழம் அடைந்த அடிப்படைத் தீமைகளாகும். இது வரலாறு.
ஈழத்தீவை நிர்வகிக்கவென பிரித்தானியரால் ஒரு சட்ட நிருபண சபை உருவாக்கப்பட்டது அதில் பெரும்பான்மையாக இருந்த சிங்கள இனவாதத் தலைவர்களின் திட்டமிடல்களால் -1835ஆம் ஆண்டிலிருந்தே - தமிழர் வாழ்விடங்களில் - அபிவிருத்தி என்ற பொய்யுரையோடு -சிங்கள மக்களை - தமிழர் தாயகம் எங்கும் - ஊடறுத்து குடியமர்த்தினர் என்பதும் - இது இன்றுவரை தொடர்வதையும் மறக்காதீர்கள் -
இது பற்றி அன்று எமது தலைவர்களும் - மக்களும் எடுத்துரைத்தும் கருத்தில் கொள்ளாது பிரித்தானிய அரசு செய்த தவறான திட்டமிடல்களால் - 1948ஆம்; ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய போது - எமது தலைவர்கள் - எமது உரிமையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக எடுத்த அத்தனை முயற்சிகளையும் - சிங்களத் தலைவர்களின் ஏமாற்றுத் தனங்களைப் புரிந்து கொள்ளாத - பிரித்தானியர் - தமிழீழ நாட்டையும் சிங்களத்தோடு விட்டுச் சென்றுவிட்டனர் - அன்றிலிருந்து இன்றுவரை சிங்களத்தால் அழிக்கப்படும் ஓர் இனமாக முகவரியற்றவர்களாக்க சிங்களம் பல்வேறு வளிகளிலும் செயற்படுவதை உணரவே மாட்டாயா?அன்றிலிருந்து - தமிழினத்தைக் காக்க - உரிமையோடு வாழவைக்க - இடர் பல சுமந்த - சனநாயக வழியில் உரிமை கேட்ட எம் தலைவர்களுக்கும் - பௌத்த சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தால் தாக்கப்பட்டு கொழும்பு கோல்பேசு கடலில் தூக்கி எறியப்பட்டதும் - சிறைகளில் அடைக்கப்பட்டதும் - ஒப்பந்தங்கள் - பேச்சுவார்த்தைகள் - குழுக்கள் - சபைகள் என்று காலத்துக்குக் காலம் ஏற்ப - தமிழர்களை சிங்கள அரசுகள் ஏமாற்றி வந்ததும் - வருவதும் - வரலாறும் -பிரித்தானிய அரசு விட்டுச் சென்ற தவறுதல்களின் ஊடாக - இலங்கை என்ற இரு தேசிய இனங்கள் வாழ்ந்த நாட்டில் - தமிழ்த் தேசிய இன மக்களின் அனுமதியற்று � ஆதரவற்று - தன்னை 1972ஆம் ஆண்டில் சிறிலங்கா பௌத்த சிங்கள நாடு என்றும் - சிங்களமே அரச மொழி என்றும் பிரகடனப்படுத்தி � தமிழரின் இறைமையை தனது கையகப்படுத்த - அல்லது ஈழத்தீவை வந்தேறு குடிகளான சிங்களத் தேசிய வாதிகள் - பௌத்த சிங்கள நாடாக்கக் கனவு காண்கின்றனர் என்பதறிக -
சிறிலங்காவின் விவகாhங்களில் தலையிடும் நீதிமான்களுக்கு ஓர் வேண்டுகோள்!
நாம் கோருவது எம்மிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட உரிமையையே! 1970 ஆண்டின் - ஐநா சாசனத்திற்கு உள்ளடங்கிய � தாயகம் - தேசியம் - தன்னாட்சி � கொண்ட சுயநிர்ணய உரிமையே. � வீதியும் - வீடும் - மருந்தும் - உணவும் - உதவிகளே தவிர இவை உரிமையல்ல என்பதறிக - மீண்டும் சிறிலங்காவுடன் இணைந்து எம்மை அழிக்க முற்படாதீர்கள்! அடக்கு முறை சட்டங்களோடு - தமிழரை ஆழ நினைத்த சிங்களம் - அமைதியின்றி தவிப்பதைப் பார் - ஒன்றுபட்ட தமிழராய் ஓரணியாய் - எம் உரிமைக்காக மீண்டும் மீண்டெழுவோம்.
தம்பி உன்னைத்தான்:
உரிமைக்காக - உறவைக் காக்க - தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வரலாற்றின் ஊடாக களமாடினாய் - இன்றும் இயங்கு நிலையில் இருக்கும் நீங்கள் - நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட துறைகளினூடாக � எமது மக்களாக - தமிழ்த் தேசியத்தையும் இன்றைய தாயக நிலையையும் - மக்களையும் - முதன்மைப்படுத்தி விட்டுக்கொடுப்புக்களின் ஊடாக ஒன்று பட்ட இயங்கியல் நிலையினூடாக � செயற்பாடுகளை விரைவு படுத்த முடியும் என்ற ஆதங்கங்களோடு � தம்பிகளே � தங்கைகளே - எமது உரிமைக்காக - நாம் மீண்டும் மீண்டெழுந்து செயற்படுவோம் வாருங்கள்.
1995ல் இருந்து � தமிழினத்தின் வாழ்வியலுக்கு எதிரான தடைச்ச சட்டங்களுக்கு மத்தியில் -வாழ்வாதாரங்களும் - வாழ்விடங்களும் அழிக்கப்பட்டு - சுனாமியும் - வெள்ளப்பெருக்கும் தந்த அனர்த்தனங்களோடு � அனந்தபுரத்தையும் - வலைஞர்மடத்தையும் - வட்டுவாகலையும் - நந்திக்கடலையும் - நினைவிற் சுமந்து எம்மக்களின் வாழ்வின் துயக் போக்க ஓன்று பட்ட உலகத் தமிழராய் மீண்டும் மீண்டெழுவோம் வாரீர்.
சிறிலங்கா நண்பர்களே! நண்பிகளே!
தமிழர்கள் நாம் எந்த ஒரு இனத்தவர்க்கும் - தேசத்திற்கும் எதிரானவர்களல்ல!
நாம் கோரி நிற்பது எம்மிடம் இருந்து பறிக்கப்படும் - அழிக்கப்படும் எமது பிறப்புரிமைகளேயே.
நாம் உரிமை கொண்ட இனமாக வாழவே - முயன்றோம் - முயற்சிக்கின்றோம்.
தமிழீழம் மலரும் - அப்போதும் சிறிலங்காவின் நட்பு நாடாகவே இருக்கும். தமிழின அழிப்பும் - தமிழின நிலப்பறிப்பும் - யுத்தமும் - மக்களின் மேலான பொருளாதார அழுத்தங்களும் - சர்வாதிகாரப் போக்கும் பௌத்தத்தின் காருண்யமல்ல என்பதறிக.
ஒன்றுபடுவோம் உரிமையைக் காக்க.
தோப்பூரான்
7.12.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக