மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

உறவுகளே - இளையோரே - நாம் செய்த தவறு என்ன?



உறவுகளே நாம் செய்த தவறு என்ன?
எமது தாயகத்தில் நாம் அமைதியோடு வாழ ஆசைப்பட்டது தவறா?
சுதந்திர உணர்வுள்ளவராக - மனித நேயத்தோடு - மானிட தர்மம்
கண்டு நாம் வாழவே முடியாதா? - அன்னியனுக்கு தலை வணங்காது
வாழ்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

 
ன்றைய காலம் பொழுது போக்கிற்கான - கருத்து நிலைக்
காலமல்ல - துடித்தெழுந்து செயற்படவேண்டிய வேளை இது -
அன்னியன் எமது உரிமையைத் தீர்மானிக்க விடுவதா உறவுகளே? -
வாதங்களையும் - கருத்துக்களையும் - முன் வைத்து
மக்களைக் ஓரணியாக்கி - ஒன்றாகிச் செயற்படுவோம்.


இன்றைய காலம் எமதாக - விடியல் காண விரைந்துசெயற்படுவோம் -
வாருங்கள் - கடந்த காலம் மீளாது - நிகழ்காலத்தை
நியமாக்க - உறுதி கொண்டு - உணர்வு கொண்டு -
தாயக மக்களினதும் - புலம் பெயர்ந்த - எமது நிலையற்ற
வாழ்வினூடாக - தாயகத்தை மீட்டெடுக்க - தடை தாண்டி வாருங்கள்.


தாயகமும் - தமிழ்மொழியும் எமதுதான் - மட்டுமல்ல -
நீயும் - நானும் உறவுதான் - உனக்கும் - எனக்கும் -
உணர்வும் - உற்றம் - சுற்றம் - வாழுமிடம் - வாழ்வாதாரம் -
எல்லாமே ஒன்றுதான் - எம்மைக் காக்க - தம்மைத் தந்த -
உத்தமர்களின் உணர்வுகளோடு - நாம் உண்மை காக்கப் புறப்படுவோம்.


இன்றைய காலம் உனதும் - எனதும் - வேற்றுமைகளை
மறந்துவிடுவோம் - விட்டுக்கொடுத்து - தடை தாண்டி -
முன்னேறுவோம் - உறவுகளே ஓரணியாக - ஓர்குரலாக
உரிமைக்காக ஒன்றுபடுவோம் - தலைவனின் பாதையில் -
உலகத்தை அரவணைத்து - தாயகத்தை மீட்டெடுப்போம்.


இது வசந்தம் காலமல்ல - போர் மேகம் சூழ்ந்த தேசத்தின் -
புது விடியலுக்கான காலம் இது - உனது கைகளில் தவிக்கிறது -
தூக்கி வீசிவிடாதே - அன்போடு அரவணைத்துக்கொள் - மனிதம்
உன்னையும் மனிதனாக்கும் - வாலாறு உனக்கும் தலைவணங்கும்
தமிழர் தாயகத்தின் வரலாற்றில் நாமும் இணைந்துகொள்வோம்.


தோப்பூரான் 12.12.12.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக