மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 23 டிசம்பர், 2012

ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும் அழியாது உம் புகழ் பாரினிலே



ஆயிரம் அந்நியர் உமை எதிர்த்திட்டாலும்
அழியாது உம் புகழ் பாரினிலே
ராஜ கோபுரமாய் உயர்ந்த எம் தலைவா
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
பெரும்பான்மை என பெரும் சீற்றம் கொள்ளும்
பேரினவாதத்தை அழித்திட வா வா
அழிந்தது பயங்கரவாதம் என அறிவிப்போருக்கு
பதுங்கும் புலி பாயும் என பறை சாற்றிட வா ...........,


போன வழி மாறலாம் ஆனால்
போகும் வழி மாறாது
ஆழ்கடலில் அலை ஓய்ந்தாலும்
பாயும் புலியின் சீற்றம் அடங்காது ,
முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிவல்ல
எம் வாழ்வில்
மீண்டும் எழுவோம் புதியதோர் பூகம்பமாய்
புறப்பட்டு தலைவனே புறப்பட்டு வா தலைவா............,


கடற்படை தரைப்படை வான்படை என
முப்படையின் தலைவனே பிரபாகரா
எப்படை வரினும் அப்படை வென்று
எம்படை வெல்ல துணிவாய் பிரபாகரா ,
சாகவில்லை எம் தலைவன்
சரித்திரம் படைப்பான் தரணியிலே
மரணிக்கவில்லை எம் தலைவன் என
மார்தட்டி சொல்கிறோம் தமிழர் நாம்...............


தழிழர் கண்ணீர் துடைக்க வந்த தலைவனே
நீ சுட்டும் திசையில் செல்ல புறப்படுவோம் தமிழர் நாம்
காட்டி கொடுத்திட்ட கயவரை கொன்றிடுவோம்
கரிகாலன் படையில் இணைந்திடுவோம்
நாகரீக வாழ்க்கையல்ல நம் வாழ்வு
நமக்கென வேண்டும் ஒரு தனிநாடு...................


அதற்கென போராடுவோம் ஒன்றிணைவோம்
புறப்படுவோம் புதியதோர் பாதையில்,
தமிழர் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லுடா
புலம்பெயர் தமிழினமே புறப்படு போரிட............

புதியதோர் ஈழம் படைப்போம்
எமக்கென ஒரு நாடு வேண்டுமென
தன்னுயிரை தியாகம் செய்த
மண்ணில் மடிந்த மாவீர செல்வங்களின்
கனவை நனவாக்கிடுவோம்,
மாவீரர் கனவு நனவாக
தலைவனின் புதிய அகவையிலே
தமிழீழம் பெறுவோம்
இது தலைவன் எம் மேல் உறுதி ................


- தமிழ் ஈழத்தில் இருந்து கவிப்பிரியா -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக