மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 29 மார்ச், 2011

சீறும் சீமான்! - கவிஞர் காப்பிராயன்

 - கவிஞர் காப்பிராயன்


                                                         சூறாவளி சுற்றுப்பயணம்
                                                          சீமான் வர்றாரு...
                                                         தமிழனுங்களகொன்னவங்கள
                                                         தூக்கப் போறாரு!
                                                       'முள்ளிவாய்க்கால் படுகொலைதான்
                                                        மறந்து போகுமா...
                                                        சூடு சொரணை தமிழனுக்குத்
                                                       தொலைஞ்சு போகுமா?
                                                        கேடுகெட்ட படுபாவிங்க
                                                        போட்டுத் தள்னாங்க...
                                                        தமிழங்களைக் குழிதோண்டி
                                                        தள்ளி மூடுனாங்க!
                                                       கதருக்காரன் நம்ம இனத்த
                                                       கழுத்தறுத்தானே...
                                                       பதவிக்காக இங்குள்ளவனும்
                                                       பாத்து நின்னானே!
                                                       மீனவன நடுக்கடல்ல
                                                       சுட்டுத் தள்னாங்க...
                                                      ஏன்னு எவனும் கேட்டானா
                                                      எப்படி ஜெயிப்பாங்க?'
                                                       ராக்கெட் போல சீமானோட
                                                      கோவம் சீறுது...
                                                      கதருக்காரன் வயித்துலதான்
                                                      பீதி புடுங்குது!
 
unarchitamilan

திங்கள், 28 மார்ச், 2011

பங்குச் சந்தையின் பீஷ்மர்...

வாரன் பஃபெட் வழியில் 6 அசத்தல் ஷேர்கள்!

'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்ற வார்த்தைக்கு தமிழில் அர்த்தம் தேடினால் 'மதிப்பு, தரம் மற்றும் தகுதி’ சார்ந்த முதலீடுகள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

'என்ன இது! 'வேல்யூ’ என்ற ஒரு ஆங்கில வார்த்தைக்கு மூன்று தமிழ் வார்த்தைகளா?’ என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் கேள்வி நியாயமானதே! ஆனால், ஆங்கிலத்தில் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்று தேடினால் வாரன் பஃபெட் என்றுதான் அர்த்தம் வரும்! காரணம், 'மதிப்பு, தரம், தகுதி’ என்ற மூன்றையும் கருத்தில் கொண்டு முதலீடு செய்வதுதான் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபெட். சொன்னதோடு நிற்காமல், சந்தையில் நிரூபித் தும் காட்டியவர் அவர். அதனால்தான் 'வேல்யூ’ என்கிற ஒரு வார்த்தைக்கு மூன்று தமிழ் வார்த்தைகளைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. விற்பனை, லாபம், மார்க்கெட் ஷேர், இ.பி.எஸ்., பி/இ ரேஷியோ போன்ற எண்களையெல்லாம் தாண்டி, சந்தை முதலீட்டிற்குத் தேவையான இந்த யுக்திகள்தான் அவரை உலகின் பெரிய முதலீட்டாளராக ஆக்கியுள்ளது. உள்ளபடி சொல்ல வேண்டு மென்றால் 'வேல்யூ இன்வெஸ்ட்டிங்’ என்பது பஃபெட்டின் கண்டுபிடிப்பு கிடையாது. பஃபெட்டுக்கு முன்பே, பெஞ்சமின் கிரஹாம் மற்றும் பிலிப்ஸ் ஃபிஷர் போன்றவர்கள் அது பற்றி பேசியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் போதனைகளை தன்னுடைய தனித்திறமையால் சாதனைகளாக மாற்றிக் காண்பித்த பெருமை பஃபெட்டையே சேரும்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த பஃபெட்டின் முதலீட்டு சித்தாந்தங்களில் சிலவற்றை இங்கே விளக்கி, அதில் அடங்கும் சில பங்குகளையும் கடைசியில் பரிந்துரைத்துள்ளோம். இந்தப் பங்குகளை சந்தை நன்றாக இறங்கும் (படிக்க மார்ஜின்- ஆப்-சேஃப்டி பகுதியை) போது வாங்கிப் பலனடையலாம். இந்தப் பங்குகளை மட்டுமல்ல, சந்தையில் உள்ள மற்ற சில பங்குகளை நீங்கள் வாங்கலாம் என்று நினைக்கும்போதும் அவை இந்த சித்தாந்தத்தின் கீழ் வருகிறதா என்பதை சோதித்துப் பார்த்து வாங்கினாலும் பலனடையலாம்.
அடிப்படை!
பங்கு முதலீடு என்பது ஒரு தொழிலில் செய்யப்படும் முதலீடு. நீங்கள் ஒரு தொழிலை தொடங்க விரும்புகிறீர்கள் எனில் அது எந்த மாதிரியான செயல்பாடுகள் கொண்ட தொழில், என்ன லாபம் வரும், அரசாங்கத் தொந்தரவுகள் இருக்குமா என்பது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து அதன் பிறகுதானே அந்த தொழிலை ஆரம்பிப்பீர்கள்? அதுபோலவே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதும் இதே அளவுகோல்களை எல்லாம் வைத்து ஆராய்ந்தபிறகே அந்த தொழிலில், அதாவது அந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான் பஃபெட் டின் அடிப்படை சித்தாந்தம்.
தவறு செய்யாத நிர்வாகம்!
எந்த ஒரு தவறும் செய்யாமல் யாராலும் தொழில் நடத்த முடியாது. இன்று பெயர் சொன்னாலே பெருமைப்படும் அளவிற்கு இருக்கும் 'பெர்க்ஷயர் ஹாத்வே’ என்ற கம்பெனியை நடத்த வாரன் பஃபெட் சந்தித்த அனுபவங்கள் மிக மோசமானவை.
'பெர்க்ஷயர் ஹாத்வே’ முதலில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியாக இருந்தது. அதை சரிசெய்து மீண்டும் லாபத்துக்குக் கொண்டுவர முயற்சிக்கும்போது இன்னொரு சிறுதவறு நடந்துவிடும். அதனால் மீண்டும் பாதிப்பு ஏற்படும். அப்போது அவர் தனது பங்குதாரர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'ஒரு தொழிலை செய்யலாம் என்று ஆரம்பிக்கின்றீர்கள், அந்தத் தொழிலை நடத்தும்போது சிற்சில தவறுகள் அவ்வப்போது ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. அந்தத் தவறுகளையும் தாண்டி அந்த தொழில் லாபகரமாக நடக்க சாத்தியம் இருந்தால் மட்டுமே, அதில் இறங்குவது உபயோகமாக இருக்கும்’ என்று எழுதினார். பஃபெட் இதைச் சொன்னது 1977-ல். ஆனால், கார்ப்பரேட் உலகில் இன்றுவரை எல்லோரும் ஒப்புக் கொள்ளும் விஷயமாகவே இருக்கிறது இந்த சிந்தனை.
டெக்ஸ்டைல் தொழிலின் இந்தக் குணாதிசயத்தால் பஃபெட் அந்தத் தொழிலையே விட்டுவிட்டு வெளியே வந்தாலும், அந்த டெக்ஸ்டைல் கம்பெனியின் பெயராகிய 'பெர்க்ஷயர் ஹாத்வே’தான் ஹோல்டிங் கம்பெனியாக மாறி, இன்று வரை அவருடைய முதலீட்டு கம்பெனிகளில் முன்னணி கம்பெனியாகவும் இருக்கிறது.
மதிப்பு!
பஃபெட் கம்பெனிகளிடம் இருந்து எதை வெகுவாக எதிர்பார்க்கிறார் என்றால், போட்ட முதலீட்டிற்கு ஒரு கம்பெனி நல்ல லாபத்தை தரும் வேளையில் கடன் என்பது மிகக்குறைவாகவோ அல்லது கடனே இல்லாமலோ தொழில் நடத்தப்படவேண்டும் என்பதைத்தான். நல்ல தொழில்/கம்பெனி என்பது அதில் செய்யப்படும் முதலீட்டைவிட அதிகப் பணத்தை லாபமாகத் தரவேண்டும். அதாவது, கிட்டத்தட்ட தொழிலின் விரிவாக்கத்துக்குத் தேவையான பணம்கூட லாபத்திலிருந்தே கிடைக்கிற அளவுக்கு லாபம் தருகிற கம்பெனியே நல்ல கம்பெனி என்கிறார் பஃபெட்.
அதே நேரத்தில் ஏதாவது ஒரு காரணத்தால் அதிகப்படியான புதிய முதலீடுகள் ஒரு தொழிலுக்குத் தேவைப்பட்டால் அப்படிப் போடப்படும் அதிகப்படியான முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட மிக அதிக லாபம் கிடைக்க வேண்டும். அதுதான் முதலீடு செய்ய உகந்த கம்பெனி. அப்படி இல்லாமல் புதிதாக போடப்படும் முதலீட்டுக்கு ஏற்கெனவே கிடைக்கும் லாபத்தைவிட குறைவான லாபமே கிடைத்தால் அந்த கம்பெனியின் பக்கமே நான் போகமாட்டேன் என்கிறார் அவர். இந்த அளவீடுகளை வைத்துக்கொண்டு ஒரு கம்பெனி மதிப்புமிக்கதா? மதிப்பை அதிகரிக்கச் செய்யும் குணாதிசயம் அந்த கம்பெனிக்கு இருக்கிறதா என்பதை நீங்களே சரிபார்த்துக் கொள்ளலாம்.
தரம்!
ஒரு கம்பெனியின் பிராண்டின் மதிப்பு, அது தயார் செய்யும் பொருட்களின் தரம், அதன் டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் போன்றவை அந்த கம்பெனியின் போட்டி போடும் திறமையை வெகுவாக அதிகரிக்கிறது. எனவே, கம்பெனியில் முதலீடு செய்யும்போது ஃபைனான்ஷியல் விஷயங்களையும் தாண்டி இந்த குணாதிசயம் இருக்கிறதா என்று முக்கியமாகப் பார்க்கவேண்டும் என்கிறார் அவர்.
ஒரு கம்பெனி அசாதாரண மான சூழ்நிலைகளில் - அதாவது, விற்பனை டல்லடிக்கும் நாட்கள், டிமாண்ட் அதிகரிக்காமல் இருக்கும் நாட்கள், உற்பத்தித்திறனை முழுமையாகப் பயன் படுத்தாத நாட்களில்கூட விற்பனையை ஏற்ற முடிகிறதென்றால் அதுவே சிறந்த கம்பெனி என்கிறார் அவர். ஏனென்றால், மேலே சொன்ன சூழ்நிலைகளில் விலையை ஏற்ற ஒரு கம்பெனி துணிகின்றதென்றால் அந்த விலையேற்றத்தால் விற்பனை செய்யும் பொருட்களின் எண்ணிக்கை குறையவோ அல்லது மார்க்கெட் ஷேர் குறையவோ செய்யும் என்ற பயம் எள்ளளவும் இல்லாமல் அந்த கம்பெனி இருக்கிறது என்று அர்த்தம். அந்த பயமில்லை என்றால் அந்த கம்பெனி தரமான பொருட்களை உற்பத்தி செய்வதாக அர்த்தம்'' என்கிறார் பஃபெட்.
வேகமாக மாறிவரும் தொழில்நுட்பம் கொண்ட தொழில்களிலும் முதலீடு செய்யக்கூடாது என்கிறார் அவர். வேகமாக மாறிவரும் தொழில்களில் அதிக லாபம் கிடைத்தாலும் அதிக அளவில் நஷ்டம் வரவும் வாய்ப்புண்டு. முதலீட்டாளர்களுக்குத் தேவை நிச்சயமான லாபமே தவிர, அதீத வளர்ச்சியல்ல. இதுபோன்ற தொழில்களில் அந்த நிச்சயத்தன்மை குறைவதால் அவை முதலீட்டிற்கு உகந்ததல்ல என்கிறார் அவர்.
தகுதி
மேனேஜ்மென்ட்டின் தகுதி குறித்துச் சொல்லும்போது, 'எல்லா விதமான சந்தை மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளிலும் பணத்தை சரியான வகையில் பயன்படுத்தத் தெரிந்த மேனேஜ்மென்ட்டே நீங்கள் முதலீடு செய்யத் தகுதியான மேனேஜ்மென்ட்’ என்கிறார். ஒரு கம்பெனி சம்பாதிக்கும் லாபத்தில் எந்த அளவு பணத்தை முதலீட்டுக்கான வருவாயாக முதலீட்டாளர்களுக்குத் தருகிறார்கள் என்பதை வைத்தே அந்த கம்பெனியை நிர்வாகம் செய்பவர்களின் தகுதியைத் தெரிந்து கொள்ளலாம். சம்பாதிக்கும் லாபத்தில் பெரும் பகுதியை நிர்வாகமே எடுத்துக் கொண்டால் அதன் தகுதி குறைவுதான் என்கிறார் அவர்.
நீண்ட நாட்களுக்குண்டான தொலைநோக்குப் பார்வை கொண்ட மேனேஜ்மென்ட், லாபத் தைக் குறைத்துக் கொள்ளாமல் தரத்தை உயர்த்திக் கொள்ளும் தகுதி, பல்வேறு பொருளாதார ஏற்ற இறக்க சூழ்நிலைகளிலும் செயல்பாட்டுத்திறனும் லாபமும் குறையாத பிஸினஸ் மாடல்களைக் கொண்டிருப்பது, அந்தந்தத் தொழில் துறையில் தலைசிறந்த வல்லுனர்களை நிர்வாகத்தில் சேர்த்துக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களையும் முக்கியமான தகுதிகளாகச் சொல்கிறார் அவர்.
மார்ஜின் ஆஃப் சேஃப்டி!
மேலே சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கம்பெனி எதிர்காலத்தில் சம்பாதிக்கப் போகும் லாபத்தையும், அந்த லாபத்தால் அதிகரிக்கவிருக்கும் பங்கின் மதிப்பையும் கணக்கீடு செய்யும்போது விற்பனை, லாபம், செலவு, மார்க்கெட் ஷேர், வரி என பல விஷயங்களைப் பற்றியும் அனுமானிக்க வேண்டியிருக்கும். அப்படி அனுமானிக்கும்போது எதிர்காலத்தில் வியாபார சூழ்நிலைகளால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளால் லாபம் குறைய வாய்ப்புள்ளது. அதனால் கம்பெனியின் மதிப்பும் மாறும். மதிப்புகள் மாறினால் பங்கின் விலையும் குறையும். எனவே, இன்றைக்கு முதலீடு செய்வதற்காக கம்பெனிகளை அலசும்போது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எதிர்மறை நிகழ்வுகளால் ஏற்படும் விளைவுகளையும் கணக்கில் கொண்டு அதற்குண்டான 'மார்ஜின் ஆஃப் சேஃப்டி’யுடன் சேர்த்து அந்த விலையில் இன்றைக்குக் கிடைக்கும் பங்குகளை மட்டுமே வாங்கவேண்டும். அவ்வாறு ஆராய்ந்து வாங்கினால் மட்டுமே எல்லாக் காலகட்டத்திலும் தேவையான லாபத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார் பஃபெட்.
பஃபெட்டின் செலக்ஷனில் தேறக்கூடிய இந்திய பங்குகள் சரி, பஃபெட் கோட்பாடுகளைக் கொண்டு தேர்வு செய்தால் நமக்குக் கிடைக்கிற பங்குகளின் பேரைச் சொல்லுங்க என்கிறீர்களா! இதோ பஃபெட்டின் மந்திரத்துக்குக் கட்டுண்ட பங்கு பட்டியல்:
(இந்தப் பங்குகளை இப்போதுள்ள விலையிலும் வாங்கி நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம் என்பதே எங்கள் ஆலோசனை!)

unarchitamilan

வெள்ளி, 25 மார்ச், 2011

மு.க.சர்க்கார்!


அரசியல் ஆக்டோபஸ்!
ப.திருமாவேலன்
படங்கள் : சு.குமரேசன், கே.கார்த்திகேயன்




ட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?
'திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. 'ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!


42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. 'தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை. அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்... அன்பகம் ஸ்டாலினுக்கு. இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்... கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார். தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க... குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய... ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.
இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!


குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள். ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை. ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்... அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார். கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!


இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!
திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். 'அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே 'கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் - கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்... தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத் துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
தமிழரசுவின் மகன் அருள்நிதி, 'வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். 'நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!


டந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை. உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். 'இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க.... தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்... முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

 கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் - அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
 மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
 தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
 தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
 ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
 மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!
 மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்... அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
  சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

டுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது. ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!
 



 unarchitamilan