மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 31 ஆகஸ்ட், 2011

முதல் அமைச்சர் ஜெயலலிதா வரலாற்று புகழ் பெற்றுள்ளார்.


சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட  தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு தீர்மானம் இதுவரை நிறைவேற்றப்பட்டது கிடையாது. பிற மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் வழிகாட்டும் ஒளிச்சுடராக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோடான கோடி தமிழ் மக்கள், தமிழகத்தில் மட்டும் அல்லாது தரணி எங்கும் வாழுகின்ற தமிழ் மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனையை எதிர்ப்போரும், உச்சி மேல் வைத்து மெச்சும் பெருமையை முதல் அமைச்சர் பெற்றிருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகம் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும், நன்றியும் தெரிவிக்கிறது.

உணர்ச்சித்தமிழன்





ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய நம் சொந்தங்களை காக்க மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் உறவுகளே

cmcell@tn.gov.in இந்த மின்னஞ்சல் முகவரிக்கு முதல்வரின் தனிப்பிரிவில் மின்னஞ்சல் அனுப்பி நம் கருத்தை பதிவு செய்யுங்க


From
.............
..............
..............
............

To
The Hon’ble Chief Minister
Tamil Nadu
Secretariat
Fort St. George
Chennai. 600 009

APPEAL TO THE HON’BLE CHIEF MINISTER OF TAMIL NADU TO SAVE THE LIFE OF
MURUGAN, SANTHAN & PERARIVALAN, WHO WERE SENTENCED TO DEATH IN RAJIV
GANDHI’S CASE AND WHOSE MERCY PETITIONS WERE RECENTLY REJECTED BY
THE HON’BLE PRESIDENT OF INDIA

Respected Madam:
Mahatma Gandhi long ago wrote in the Harijan :
“God Alone Can Take Life
Because He Alone Gives It”
In one of the most civilized countries of the world, it is saddening, death penalty still reigns.
We are shocked beyond words that 3 youngsters, who have spent almost their entire life
since their teens in solitary confinement, are condemned to face the gallows. Murugan,
Santhan and Perarivalan who were sentenced to death in Rajiv Gandhi’s case appealed to
the President of India for clemency under Article 72 of the Constitution on 26th April 2000.
They have all along been hopeful that they would either be released from prison or their
death sentence would be converted into life imprisonment by the President of India. They
have been awaiting almost every dawn a news of relief from the President. Alas ! The
President of India turned down their clemency petition after making them wait for more than
eleven long years.
The Supreme Court of India has in the past converted death sentence into imprisonment for
life only on the ground that clemency petition of a convict was pending with the President of
India for more than 2 years. A five Judge Bench of the Supreme Court of India has in
Smt.Triveniben Vs. State of Gujarat held : “As between funeral fire and mental worry it is the
latter which is more devastating, for, funeral fire burns only the dead body while the mental
worry burns the living one.” The death sentence of these 3 persons were confirmed by the
Supreme Court on 11 May 1999. It is more than 12 years since their death sentences were
confirmed and it is more than eleven years since they made clemency petitions to the
President of India. They have been under the shadow of death all these years suffering
every moment in a condemned cell.
There have been cases that even after the rejection of the clemency petition by the President
of India, State Governments have considered afresh the need for clemency and converted
the death sentence into imprisonment for life.
As early as in February 1979, the Supreme Court of India speaking through Justice
V.R.Krishna Iyer, while converting death sentence of a convict into life imprisonment, said:
“Our culture is at stake, our karuna is threatened, our Constitution is brought into contempt by
a cavalier indifference to the deep reverence for life and a superstitious offering of human
sacrifice to propitiate the Goddess of Justice”
It is submitted that the sovereign power under Article 161 of the Constitution can be exercised
by the Hon’ble Governor on the advice of Council of Ministers for converting the death
sentence of Murugan, Santhan and Perarivalan into imprisonment for life even after the
rejection of their clemency petitions by the Hon’ble President of India under Article 72 of the
Constitution.
It is submitted that pendency of the clemency petitions of these 3 persons with the Hon’ble
President of India for more than 11 years may be considered as a significant factor for
exercising the sovereign power under Article 161 of the Constitution and for converting their
death sentence into imprisonment for life. Their incarceration for more than 20 years may
also be treated to be an important factor for commutation of their death sentence into life
imprisonment.
We earnestly appeal to the Hon’ble Chief Minister of Tamil Nadu to save the lives of these 3
persons by exercising the sovereign power of the State of Tamil Nadu under Article 161 of
the Constitution, for which act the world Tamil community would ever be grateful.

Yours sincerely,

சனி, 27 ஆகஸ்ட், 2011

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் மனமுருக பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என கூறப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் இந்திய ஊடகம் ஒன்றிற்கு மனமுருக பேட்டியளித்துள்ளனர்.

இந்திய ஊடகத்தில் அளித்த பேட்டி

பேரறிவாளன்

கேள்வி:- எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?

பேரறிவாளன்:- முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம்.

கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது.

19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்.

கேள்வி:- தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?

பேரறிவாளன்:- அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒன்று சேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது.

பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம்.

அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்.

கேள்வி:- தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

பேரறிவாளன்:- மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.

வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்.

தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள் என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன்.

பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது. மனசாட்சியின் கண்ணீர்க் குரலாகச் சொல்கிறேன். எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை.

சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?

பேரறிவாளன்:- 99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டார். தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன் எனச் சொன்னேன்.

காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிடமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான்.

வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது.

ஆனால், ஏற்கனவே பரப்பிய பழிகள் போதாது என சாத்தானின் படைகள் என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்?.

ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது. தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்.

முருகன்

கேள்வி:- தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?

முருகன்:- மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது.

தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன.

எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்.

கேள்வி:- தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?

முருகன்:- எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை.

எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால் "நன்றி��.

ம.தி.சாந்தன்

கேள்வி:- ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே?

சாந்தன்:- கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான கடவுச்சீட்டுகளுடன் வந்தேன்.

அதை குற்றப் புலனாய்வுத் துறை கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான கடவுச்சீட்டுடன் வருவானா?.

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம் என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தோமஸ் அவர்கள் கூறுகிறார்.

ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம் என்று நீதிபதி தோமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார் என்கிறார்.

நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தோமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை.

விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ குற்றப் புலனாய்வுத் துறை கூடச் சொல்லவில்லை.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லை.

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக் கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார்.

சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை.

இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன.

கேள்வி:- கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?

என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது.

பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா?. நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா?. இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்.

நன்றி: ஜூனியர் விகடன்

ராசீவ் காந்தி பெயரில் நடக்கும் பச்சைப்படுகொலையை தடுப்போம் வாருங்கள்: மே பதினேழு இயக்கம் அழைப்பு.

திரு. பேரறிவாளன், திரு. முருகன், திரு. சாந்தன் ஆகியோர் தன் மீதான பொய் குற்றச்சாட்டை ஏற்க சொல்லி நடத்திய சித்திரவதைகளை ஒரு வேளை மகாத்மா காந்தி மீது நட்த்தி இருந்தால் அவரும் கூட தான் தான் ராஜீவ் காந்தியை கொலை செய்ய உதவி செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருப்பார். இந்த ஏழை நிரபராதி தமிழர்கள் மீது நட்த்தப் பட்ட சித்திரவதைகளை ஐ. நா வில் புகார் செய்தால் புலனாய்வு அதிகாரிகளுக்கே தூக்கு தண்டனை பரிசாக கொடுக்கப்படும்.
சந்தேகம் உள்ள நபர்களாக அறிவிக்கப்பட்ட சந்திரசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்காமல் அவர்களையும் இதர நபர்களையும் காப்பாற்றுவதற்காக மூன்று நிரபராதி ஏழைத் தமிழ் இளைஞர்களை பிடித்து சித்திரவதை செய்து பொய் குற்றம் சாட்டி தூக்கு தண்டனை அளித்திருக்கிறது. இவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் கூட இது வரை நிரூபிக்கப்படவில்லை.
1. ராஜீவ் கொலையில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற மூன்று நிரபராதித் தமிழர்கள் திரு.பேரறிவாளன், திரு.சாந்தன், திரு. முருகனை தூக்கிலேற்றுகிறார்கள். தூக்கிலேற்றப்படுவதற்கு இவர்கள் தமிழர்கள் என்பது மட்டுமே ஒரே காரணம்.
2. பெல்ட் பாம் செய்ய உதவினார்கள் என்பது குற்றசாட்டு. ஆனால் சி.பி.ஐ உயர்அதிகாரி பெல்ட் பாம் செய்தவர் யாரேன்று இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.
3. 9 வோல்ட் பேட்டரி வாங்கி தந்ததாக குற்றம். ஆனால் பேட்டரியைக் கொண்டே குண்டு வெடிக்கப்பட்டது என நிரூபிக்கப்படவில்லை.
4. பேட்டரி வாங்கியதற்கு ஆதாரமாக, பெட்டிக்கடையில் பேட்டரி விற்றதற்கு பில் இருந்ததாக காட்டினார்கள். 21 வருடங்களுக்கு முன் மட்டுமல்ல இப்பொழுதும் கூட எந்த பெட்டிக்கடையில் 10 ரூபாய்க்கு பில் தருகிறார்கள்?
5. குண்டை தயார் செய்தவன் பேட்டரி வாங்க முடியாதவனா அல்லது வாங்க வக்கில்லாதவனா என்ன?
6. தடா சட்ட்த்தில் இவ்வழக்கை பதிவு செய்தது தவறு என சுப்ரீம் கோர்ட் சொன்னது, ஆனால் தடா சட்டத்தில் வாங்கிய வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது, உலகெங்கும் நடக்காத நீதித்துறை அவலம்.
7. காவல் நிலையத்தில் வாங்கும் வாக்குமூலங்கள் விசாரணையில் ஏற்கப்படுவது இல்லை. எனினும் இவ்வழக்கில் காவல் துறை வாக்குமூலம் அடிப்படையில் தூக்கு வழங்கப்பட்டுள்ளது.
8. கடுமையான சித்திரவதை செய்து எழுதிவைக்கப்பட்ட வாக்குமூல காகிதத்தில் ரத்த கையெழுத்தே வாங்கப்பட்டது.
9. மூவரிடம் சித்திரவதை செய்து வாக்குமூலம் வாங்கிய காவலதிகாரி 1993ல் வேறொரு வழக்கினை கேரளாவில் ஒரு கொலையை தற்கொலை என பொய்யாக மூடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்.
10. அடிப்படை மேல்முறையீடு செய்யும் உரிமை மறுக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட்டில் மட்டுமே வழக்காட வாய்ப்பு அளிக்கப்பட்டது. சராசரி குற்றவாளிகளிக்கு உயர் நீதிமன்றம், மாவட்ட நீதி மன்றத்தில் அப்பீல் செய்ய கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு மறுக்கப்பட்டது.
11. கொலையில் பங்கு உண்டு என சந்திராசாமி, சுப்பிரமணிய சாமியை விசாரிக்க வேண்டும் என்று சொல்லிய ஜெயின் கமிஷன் அறிக்கை மூடி மறைக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர்களையும் விசாரிக்கவேண்டும் எனச் சொல்லிய வர்மா கமிஷன் பாதியில் கலைக்கப்பட்ட்து.
12. பல் நோக்கு விசாரணை குழு இன்னும் தனது விசாரணையை முடிக்கவில்லை. விசாரணை முடியும் முன் தூக்கு தண்டனை என்பது உலகில் இதுவே முதல் முறை. வெள்ளையர்கள் கூட இத்தகய அநீதியை செய்தது இல்லை.
பஞ்சாபில் சீக்கிய இனத்தை சேர்ந்த புல்லர் என்பவர்க்கு இதே போல தூக்கு தண்டனை அளித்த போது சீக்கிய இனம் சினத்துடன் எழுந்து நின்றது. தில்லி இந்திய அரசு பணிந்தது. அப்சல் குருவிற்கு தூக்கு என்றவுடன் காசுமீர் கோபமுடன் திரண்டெழுந்தது. காங்கிரஸ் அரசு அஞ்சியது. அப்சலை தூக்கிலிட்டால் தண்டனை அளித்த நீதிபதிகளின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என காசுமீர் முதல்வர் அறிவித்தார்.
ராசீவ் காந்தி சாவு எனச் சொல்லி எத்தனை ஒடுக்குமுறைகளை தமிழகம் சந்தித்தது. காங்கிரஸ் அரசு இதுவரை எத்தனை லட்சம் ஈழத்தமிழர்களை பலி வாங்கியது. சிங்கள அரசிற்கு ஆயுதமும், பணமும் கொடுத்து தமிழர்களை கொன்றது. தமிழினத்தை அழிக்க துடிக்கும் இந்த காங்கிரஸ் மத்திய அரசை நாம் விட்டு வைக்க முடியுமா?...கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு. நிரபராதி தமிழர்களுக்கு 21 ஆண்டு சிறைக்கு பிறகு தூக்குத்தண்டனை. என்ன நியாயம் இது. தமிழினம் இனிமேலும் பேசாதிருக்குமா? தமிழர்கள் நாம் கோழைகளா?
தமிழர்கள் மட்டும் தன் இன கொழுந்துகளை பலியிட மெளனம் காப்பார்களா? நிரபராதிகளை தூக்கிலிடுவதை நாம் கண்டும் காணாது இருப்போமா?... காசுமீரிகள், சீக்கியர்கள் போல நாமும் நியாயத்திற்காக வீரத்துடன் போராட மாட்டோமா. தமிழீழத்தில் ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட போது காத்த அமைதியை இப்பொழுது நாமும் காக்கப் போகிறோமா?
நீதிக்காக போராடாத இனம் ஒரு மனித இனமா.. போராடுவோம் தமிழர்களே, இந்த நிரபராதித் தமிழர்களை விடுவிக்கும் வரை போராடுவோம்.
உண்மை குற்றவாளிகளை விட்டு நிரபராதிகளை தூக்கிலேற்றுவது பச்சைப் படுகொலையாகாதா? தமிழீழத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்களை பழிவாங்கிய காங்கிரஸ் தற்போது தமிழகத்திலும் கொலைகளை செய்ய ஆரம்பித்து இருக்கிறது. கொலைகாரன் ராசபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு, நிரபராதி தமிழர்களுக்கு தூக்குத் தண்டனை. தமிழா, நான்கறிவு விலங்குகள் கூட இதற்கு மேலும் அமைதி காக்காது. போராட வீதிக்கு வா. பச்சைப்படுகொலையை தடுக்க வா.
நம் சகோதரர்களை காப்பற்ற செவ்வாய்கிழமை(30-08-11) காலை 9 மணிக்கு உச்ச நீதி மன்றத்தில் கூடுவோம். பச்சைப்படுகொலைகளை தடுப்போம்.
மே பதினேழு இயக்கம். 9600781111- 9443486285

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

மறைத்துப் பேசுகிறார் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி!


பாய்கிறார் பழ.நெடுமாறன்
'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மரண தண்​டனைக் கைதிகள் மூவருக்குநீதி வழங்க வேண்டும்’ என்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக் கூட்டங்கள் என வரிசையாக உரிமை முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கிறது. ஏற்கெனவே, ராஜீவ் கொலை வழக்கில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்க... அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் வரை சென்று 19 பேரை உயிருடன் மீட்டது,  '26 தமிழர் உயிர் காப்புக் குழு.’ அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்​பட்ட பழ.நெடுமாறனிடம் சில கேள்விகளை முன்​வைத்தோம்!
''இந்த விவகாரத்தில் நடந்தது, நடப்பது என்ன?''
''இந்த வழக்கை தடா நீதிமன்றத்தில் விசாரித்த முறையே அடிப்படையில் தவ​றானது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி கொலை வழக்குகளில்கூட, ரகசியமாக அல்ல, பகிரங்கமாகத்தான் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் விசாரணையோ மூடுமந்திரத்தைப்போல பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. விசாரணையில் பத்திரிகையாளர், பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. 26 தமிழர்களுக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களும் மிரட்டப்பட்டனர்.
தடா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக வழக்கை விசாரித்த நீதிபதி சித்திக் திடீரென மாற்றப்பட்டு, நவநீதம் நியமிக்கப்பட்டார். நான்கு ஆண்டு​களில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள், குறுக்கு விசாரணைகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஓர் ஆண்டு காலத்திலேயே படித்தறிந்து, 26 பேருக்கு அவர் தூக்குத் தண்டனையை விதித்தார். இது மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது.  உச்ச நீதிமன்​றத்தின் மூன்று நீதிபதிகள் இதை விசாரித்து, 19 பேரை விடுதலை செய்தனர். மூன்று நபர்களின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.  சிறந்த வழக்​கறிஞர் என்.நடராஜன் மூலம் உச்ச நீதிமன்றத்தில்மேல் முறை​யீடு செய்தோம். அப்படிச் செய்​திருக்​காவிட்டால், 26 தமிழர்​களின் உயிர்களும் பறிக்கப்பட்டு இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
'ராஜீவ் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது செல்லாது’ என உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துவிட்டது. ஆனால், அதே தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது முரண்பாடானது அல்லவா? உச்ச நீதிமன்றத்தால் நான்கு பேரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, தமிழக ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டது. உடனே, 'தமிழர் உயிர்காப்புக் குழு’வின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பைப் பெற்றோம். 'தமிழக அமைச்சரவையின் ஆலோசனையின்படியே ஆளுநர் முடிவெடுக்க முடியுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எதிர்காலத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்தின் ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ, கருணை மனுக்கள் மீது தன்னிச்சையாக முடிவெடுப்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தினோம். எனவே, நான்கு பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பெற்றுத் தந்தோம். ஆனால், அதை வைத்து அவர் எதுவுமே செய்யவில்லை.
'ராஜீவ் கொலை வழக்கில் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகள் உள்ளன’ என்று ஜெயின் கமிஷன் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, பல்வேறு உளவு நிறுவனங்களின் அதிகாரிகளை  உள்ளடக்கிய பல்நோக்கு கண்காணிப்புக் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு இன்னும் தன் விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை என்பது முக்கியமானது. இப்போது, (நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுவிட்டது) மூன்று பேரின் மரண தண்டனை ஒருவேளை நிறைவேற்றப்படுமானால், அதன் பிறகு இந்தக் கண்காணிப்புக் குழு தரும் அறிக்கையில், வேறு சிலர்தான் உண்மைக் குற்றவாளிகள் என சுட்டிக்​காட்டப்படுவார்கள். அப்போது, இழந்துபோன உயிர்களை மீட்க முடியுமா? அப்படி ஒரு நிலையை மனிதாபிமானம் உள்ள யாராலும் நினைத்துப் பார்க்க முடியுமா? எனவே, பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை வெளியிடப்படும் வரை மூன்று தமிழர்களின் மரண தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்.''
''நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். சி.பி.ஐ. ரகோத்தமனோ, கண்காணிப்புக் குழு அமைக்கப்​பட்டதற்கு வேறு காரணம் என்கிறாரே?''
''எதற்காக அந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது? 'இந்தக் கொலையில் வேறு பலருக்கும் தொடர்பு உண்டு; அவர்களைப்பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதற்காகத்தானே இந்தக் கண்காணிப்புக் குழுவை அமைத்தார்கள். அதை மறைத்தும் மழுப்பியும் பேசுகிறார் இந்த அதிகாரி!''
''மூவரின் உயிரைக் காக்க, சட்டரீதியான முயற்சிகள் என்ன? உங்கள் அடுத்தகட்டத் திட்டம்எது?'’
''மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சட்ட முயற்சிகள்பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. இந்த முயற்சிகள் ஒரு பக்கம் இருக்க... மரண தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்கான மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவோம்!''
- இரா.தமிழ்க்கனல்                                                                                            

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

செய்துவிட்டாய்



செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு..
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று.

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்..
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
 ஒரு  தமிழனின் சாபம் 

சனி, 6 ஆகஸ்ட், 2011

'' ஓ... மை காட்! கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு சொத்தா?

பிரதமரை மிரளவைத்த ஃபெர்னாண்டஸ் பத்திரிகை!
ருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு’ என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!’ என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் புகழப்படும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை ஆசிரியர் குழுத் தலைவராகக்கொண்டு இயங்கும் பத்திரிகை. இதன் ஆசிரியர் ஃபெர்னாண்டஸின் தோழி ஜெயா ஜெட்லி. ஜூலை இதழில் மூன்று பக்கங்களுக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்துப் பட்டியல் வெளியாகி, டெல்லிப் பிரபலங்களைக் கலக்கி உள்ளது!
'த அதர் சைடு’ பத்திரிகை வெளியிட்ட சொத்துப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பிரதமர் மன்மோகன் சிங், ''ஓ மை காட். கலைஞர்ஜி இந்த அளவுக்கு சொத்து சேர்த்துவைத்து இருக்கிறார் என்ற விவரம் எனக்கே அதிர்ச்சியாக இருக்கிறதே!’ என்று, அந்தப் பட்டியலைப்பற்றி விசாரிக்குமாறு மத்திய உளவுத் துறைக்கு உத்தரவிட்டாராம்.
அந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 'கருணாநிதிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும், தமிழகத்திலும் தென் இந்தியாவிலும் இருக்கக்கூடிய முக்கியமான சொத்துகளின் பட்டியல் விவரம். இது முழுமையான பட்டியல் இல்லை. கருணாநிதியின் குடும்பத்தாரால் வெளிநாடுகளில் மறைத்துவைக்கப்பட்டு இருக்கும் சொத்து பற்றிய விவரங்கள் இந்தப் பட்டியலில் இல்லை. வறுமைக் கோட்டுக்குக் கீழே உழன்ற கருணாநிதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் (தங்களது அயராத உழைப்பால்!) கடந்த 60 ஆண்டுகளில் ஈட்டியவை இவை. தமிழகத்தில் வாழும் ஏழை எளியவர்களுக்காகக் காலம் எல்லாம் பாடுபட்ட மஞ்சள் சால்வைக்​காரர், இன்று தேர்தல் முடிவுகள் தந்த கட்டாய ஓய்வில் நிலை குத்தி நிற்கிறார்!’ என்று எழுதி இருக்கிறது.
அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியலை அப்படியே தருகிறோம்!
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும்  கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.
21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு -
3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது. இதைப் பார்த்துத்தான் பிரதமர் பேஸ்தடித்து​விட்டார் என்கிறார்கள்.
''கோபாலபுரம் வீடும் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் உள்ள இடமும் மட்டும்தான் தலைவர் பெயரில் உள்ளது. இதை தலைவரே பகிரங்கமாகச் சொல்லி இருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சொந்தங்கள் பல்வேறு தொழில்களை பல ஆண்டுகளாகச் செய்து வருகிறார்கள். அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் அரசியல் மூலம்தான் இவை வந்தது என்று பொத்தாம் பொதுவாக கணக்கிடுவது தவறானது. பொதுவாக சொத்துகள் வாங்கும் போது விலை குறைவாக இருந்திருக்கும். காலப்போக்கில் ஏறிய விலையின் மதிப்பை வைத்து தற்போது சம்பாதித்ததாகச் சொல்வது பூதாகாரமாக்கப் பயன்படுமே தவிர உண்மை அல்ல!'' என்று தி.மு.க-வினர் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
- வேல்ஸ்