மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முளுமையான படத்தொகுப்பு


ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு சான்றாக விளங்கவுள்ள “முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்”
வரும் அக்டோபர் பதினொன்று ,பனிரெண்டாம் தேதிகளில் திறப்புவிழா நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் தொடங்கி இருபத்தியோராம் நூற்றாண்டில் பல நாடுகளின் அரசியல் கூட்டுச்சதியால், சிங்களவர் கொத்தணிக்குண்டுகள் கொண்டு, தமிழரின் வீரம் செறிந்த உரிமைக்கான ஆயுதப் போராட்டம் அடக்கி ஒடுக்ககிய நிலையில். தமிழரின் வீரம், தியாகம், பண்பாடு காத்த, காப்பதற்கென்று தம் உயிரையும் கொடுத்து, தம் உதிரத்தை நீராக்கி விதையுண்ட மாவீரர்களின் நினைவகம் புலிக்கொடி தாங்கிய சோழநாடான தஞ்சாவூரில் தமிழ் உணர்வாளர்களால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்ர்களின் பாரம்பரிய, புகழ்பெற்ற சைவத் திரு ஆலயங்கள் ஆகியன அமையப்பெற்ற அழகிய இடத்திலேயே இம்மாவீரர் நினைவகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.


உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனத்தின் தலைவரும் தமிழ் நாட்டின் உணர்வுள்ள தலைவர்களில் ஒருவருமான திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவொன்று அங்கு முழுநேரமாக பணியாற்றிய வண்ணம் அங்கு மேற்படி நினைவு வளாகத்தை அமைத்து வருகின்றது.
 தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் உருவாக்கம் தொடர்பான முழுமையான படத்தொகுப்பு