மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 26 ஜூன், 2011

நீங்களா .வ .உ .சி வழி வந்தவர்கள் ?

வறண்ட மண்ணில் வான் மழை கொட்டியதுபோல், கலங்கிய கண்களுக்கு கைக்குட்டை கிட்டியதுபோல் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கிறது ஒரு தீர்மானம். "எங்களின் துயரத்துக்கு நீதி கேட்க நாதி இல்லையா?" என தொண்டை நரம்புகள் துடிக்கக் கத்தினோமே... காணச் சகிக்காத காணொளி ஆதாரங்களைக் கண்டு, உலகமே உன் மனசாட்சி எங்கே! என ஓலமிட்டோமே...
அதற்கெல்லாம் முதல் ஆறுதலாக பட்டுப் போன கேழ்வரகுக்கு சொட்டாகச் சுரந்த மழையாக சிங்கள அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தீர்மானம் இயற்றி இருக்கிறார்.
தமிழ்க் குடையின் கீழ் தத்தளித்து நிற்கும் உறவுகளே... இது வெறும் தீர்மானம் அல்ல; நாம் விரும்பிய தீர்மானம். துடித்தவர்களுக்காகவும் கண்ணீர் வடித்தவர்களுக்காகவும் முதன்முறையாக நாம் எழுப்பி இருக்கும் அதிகாரபூர்வ போர்க்குரல்.


இனப்படுகொலைகளை நிகழ்த்தியவனுக்கு எதிராக நாம் தொடுத்திருக்கும் முதல் சுருக்கு... கொக்கரித்துச் சிரித்தவர்களின் தலையில் விழுந்த முதல் குட்டு.... கதியிழந்து தவிப்பவர்களுக்கான முதல் நம்பிக்கைக்கயிறு!
வில்லங்கத்தால் வீழ்த்தப்பட்டவர்களுக்கும் வஞ்சனையால் வளைக்கப்பட்டவர்களுக்கும் முதல் ஆறுதலாக நீண்டிருக்கும் நிவாரணமே இந்தத் தீர்மானம்! தீர்க்கமாகச் சொல் வதானால் தமிழர் வாழ்வின் வரலாற்றுத் திருப்புமுனை!
சிங்கள அரசின் கொடூர வெறியைக் கண்டித்து நாம் எல்லோரும் முழங்கினோம். கைகோர்த்துக் கதறினோம். உலகத்தின் ஜனநாயக சக்திகளை எல்லாம் கைகூப்பிக் கெஞ் சினோம். ஆனால், துயரத்தை உணர்ந்தவர்கள் கூட நம் துக்கத்தைத் தீர்க்க முன்வரவில்லை. காரணம், தமிழர்களின் அரசே ஈழக் கொடூரங்களைத் தட்டிக் கேட்காதபோது உலகம் எப்படி நம் கண்ணீருக்காக கைகோர்க்கும்?
எந்தத் தீர்மானத்துக்காக கலைஞர் கருணாநிதியிடம் நாம் ஏங்கி நின்றோமோ... எத்தகைய கிழக்குக்காக நாம் இலக்கு நோக்கிக் காத்திருந்தோமோ... அந்தத் தீர்மானத்தைத் தான் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சட்டமன்றத்தில் இயற்றி, ராஜபக்ஷேயின் சட்டையைப் பிடித்திருக்கிறார்.
கேட்பதற்கு நாதி இல்லை எனக் கொக்கரித்த வல்லூறுகளின் வாயை அடைக்க தன்மானம் கொண்டவராக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கச் சொல்லி முழங்கி இருக்கிறார் ஜெயலலிதா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணன் குணசேகரன் ஈழத் தமிழர்களின் வலி சுமந்த வாரிசாக முழங்க... அண்ணன்கள் பண்ருட்டியார், பாண்டியராஜன், ஜவாஹிருல் லா, சரத்குமார், கிருஷ்ணசாமி, தனியரசு உள்ளிட்டவர்கள் ஒருமித்த உணர்வோடு ஆதரிக்க... தட்டிக் கேட்பவராக போர்க்குற்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் முத ல்வர் ஜெயலலிதா அம்மையார்.
பதைத்துக் கிடந்த பத்துக் கோடி தமிழர்களின் இதயங்களை நெகிழ்வில் நனைத்த முதல்வர் வாழ்க. இதற்கிடையிலும் "இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால், அது அங்கே இருக்கும் தமிழர்களையும் பாதிக்காதா?" எனக் கொதித்தார்கள் சில காங்கிரஸ்காரர்கள்.
ஏனய்யா... போர் நடந்தபோது எம் மக்களுக்கு ஏற்படாத பாதிப்பா பொருளாதாரத் தடையின்போது ஏற்படப் போகிறது? இடி விழுந்தபோது இரு கைகளையும் கட் டிக்கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அடி விழும்போது அலறுகிறீர்களே... இது நியாயமா?
தமிழர்களின் மீது திடீர் அக்கறை பொங்கியவர்களாக வெடிப்பவர்களே... முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தவறு என முழங்க முடியுமா உங்களால்? காயங்களில் பூசப்பட்ட மருந்தாக மலர்ந்திருக்கும் அந்தத் தீர்மானத்தை கடந்த ஆட்சியிலேயே இயற்ற நீங்கள் ஏனய்யா முயற்சி எடுக்கவில்லை? பாராட்டுப் பத்திரம் வாசிப்பதற்காகவே ஒரு பழுத்த முதியவரை வைத்திருந்தீர்களே... இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரச் சொல்லி ஏனய்யா அவரிடம் பேசவில்லை?
பொருளாதாரத் தடை என்றவுடன் நீங்கள் அலறுவதன் அர்த்தம் எங்களுக்குப் புரியாமலில்லை. இலங்கையின் போர்க் குற்றங்களை ஆதாரப்பூர்வமாக ஆராய்ந்த ஐரோப்பிய யூனியன் சிங்கள அரசின் செவிட்டில் அறையும் விதமாக இலங்கை வர்த்தகத்துக்கு வழங்கிய வணிக வரிச் சலுகைகளை நிறுத்தியது. ஆயத்த ஆடை வணிக த்தில் வளம் கொழித்த இலங்கைக்கு அது சம்மட்டி அடியானது. மூன்று லட்சத்துக்கும் மேலான சிங்களர்களுக்கு வேலை பறிபோனது.
தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால் இதைவிட பல மடங்கு அடியை இலங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்! எங்கோ அடி அடித்தால் பனைமரத்தில் நெறிகட்டும் என்பார்களே... காங்கிரஸ்காரர்களின் பதைப்புக்கு காரணம் புரிகிறதா தமிழர்களே...
இனத்துக்குச் சிக்கல் வந்தபோது எழாத உணர்ச்சி இலங்கைக்கு சிக்கல் என்றதும் பொங்கி எழுகிற மாயமென்ன? 104 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறீர்களே... சுதந்திரத்துக்காக கப்பலோட்டிய எம் மறத் தமிழன் வ.உ.சிதம்பரம் வழி வந்த தமிழர்களாக நீங்கள் இருந்தி ருந்தால், ரணமாகவும் பிணமாகவும் எம் தமிழன் இலங்கையில் தத்தளித்தபோது உங்களின் கப்பலை ஓட்டி இருக்கவேண்டும்; எம் தமிழ் மக்களை மீட்டிருக்கவேண்டும்!
துடித்த தமிழர்களுக்காக கரம் நீட்டாத காங்கிரஸ்காரர்களே... வக்கற்ற இலங்கையின் வணிகச் சிறப்புக்காக இன்றைக்கு கப்பல் விடுகின்றீர்களே... நீங்களா வ.உ.சி.யின் வழி வந்தவர்கள்?
(பொறி பறக்கும்)

 நன்றி செய்தி



                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக