மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 26 ஜூன், 2011

வழக்கறிஞர்களே என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம். தன்மானத்தோடு வாழ்வோம். திருச்சி மாநாட்டில் வைகோ முழக்கம்.


ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம், எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துவிட்டோம் இனி நமக்கு வசந்தம் வீசும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று திருச்சியில் பெமினா விடுதியில் நடைபெற்ற போது உரையாற்றுகைலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.
மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றுகையில்:
தனி நாடு கேட்டார் பெரியார், சுய ஆட்சி கேட்டார் அண்ணா, நாங்கள் அப்படி கேட்கவில்லை ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்.
ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன், இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே. எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான். ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா? எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.
குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு, என் தமிழக மீனவன் இலங்கை அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு.
சனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது. பல கொடுமைகள் நடத்தப்படும் காட்சிகளை இங்கிலாந்து பாராளுமன்றம் பார்க்கிறது. இத்தனை கொடுமைகளை செய்த இலங்கைத் தலைவரை தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா?
இசைப்பிரியாவை கொடூரமாக கொன்றுள்ளார்கள். அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் இலங்கை இராணுவத்தினர் ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள். இதற்க்கு தீர்வு என்ன? சுதந்திரமான தனி ஈழம் தான். அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும். என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்.
உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாக்கினார்கள். ஈழம் எப்போது. சனல் 4 ஒளிபரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள். நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா?
வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம். தன்மானத்தோடு வாழ்வோம் என்றார்.


 unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக