மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 14 ஜூன், 2011

தஞ்சை மண்ணில் உருவாகிறது முள்ளிவாய்க்கால் நினைவிடம்!


ராஜபக்ஷேவின் கொடூர முகத்தை, ஈழத்து இனப் படுகொலையை நினைவில் அறைந்து சொல்ல, தஞ்சையில் உருவாகிறது, 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’
தஞ்சாவூரில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் இருக்கிறது விளார் கிராமம். இதற்கு அருகில், 20,000 சதுர அடியில், உலகத் தமிழர் பேரமைப்​பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை​யிலான அறக்கட்டளை, இந்த நினைவிடத்தை எழுப்பி வருகிறது!
''மேற்கு இலங்கையின் மன்னார் கடற்கரையில் இருந்து சிங்கள ராணுவத்தால் குண்டு வீசித் துரத்தப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை, முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிர்கதியாய் நிற்கவைத்து, துடிதுடிக்க இனப் படுகொலை செய்தது, சிங்கள ராணுவம். அந்த துயரத்தைத் தடுக்கக் கேட்டு இன்னுயிர் ஈந்த முத்துக்குமார், ஈழத்தின் முருகதாஸ் போன்றவர்களின் தியாகங்களையும், தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்த நினைவிடம்!'' என்கிறார்கள், அமைப்புக் குழுவினர்.
தஞ்சை பூச்சந்தையில் இருந்து விளாரை நோக்கிச்செல்லும் சாலையில், பான்செக்கூர் கல்லூரி எதிரில் அமைக்கப்​படுகிறது, முள்ளிவாய்க்கால் நினைவிடம். கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி, சிற்ப வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. இதற்காக மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள 80-க்கும் மேற்பட்ட சிற்பிகள், இரவு பகல் பார்க்காமல், கற்களைச் சிற்பமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன், ஈழத்து இனப் படுகொலைக் காட்சியை விவரிக்கும் ஓவியக் கூடம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதற்காகத் தமிழின உணர்வு ஓவியர்களான வீர சந்தானம், சந்துரு போன்ற பிரபல கலைஞர்கள் அங்கேயே முகாமிட்டு ஓவியங்களைத் தீட்டுகின்றனர்.
நினைவிடப் பணிகளைக் கவனித்து வருகிறார் அறக்கட்டளையின் அறங்காவல் குழு தலைவர் இளவழகன். ''இனப் படுகொலை நடத்தப்பட்ட ஈழத்தில் அதன் ஒரு சுவடும் இருந்துவிடக் கூடாது என அழிக்கும் முயற்சியில் ராஜபக்ஷே அரசு இன்னும் இன வெறி தலைக்கேறியபடி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், 'முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரக்கூடிய உலகளாவிய ஒரு நினைவிடத்தை அமைப்பது’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் தீர்மானித்தார். இதற்காக, ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் கீழ் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்தும், தமிழகத்தில் உள்ள இன உணர்வாளர்களிடம் இருந்தும் நன்கொடை மூலம் நிதி திரட்டப்படுகிறது. பணிகளும் மும்முரமாக நடக்கின்றன. சிற்பம் செய்யத் தேவையான கற்களை, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து உணர்வாளர்களின் பெரும் உதவியுடன் கொண்டுவந்தோம். முகப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் அன்னையின் சிலை 40 அடி உயரம், 11 அடி அகலம், 3 அடி கனம்கொண்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே வகைக் கல்லில் இருந்தே, 19 தமிழ் இனத் தியாகிகளின் சிலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிலையும் 3 அடி உயரம் இருக்கும். பெரிய கோயிலுக்கு இணையாக இதைக் கட்ட முடியாவிட்டாலும், தமிழர்களின் பழங்காலக் கட்டடக் கலை நுணுக்கங்களுடன் இதை உருவாக்கி வருகிறோம். 1,000 சதுர அடிகள் கொண்ட ஓவியக் கூடம் ஒன்று தனியாக அமைக்கப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும், முள்வேலி முகாமில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களையும், நமது ஓவியர்கள் மிகச் சிறப்பாக கண்முன்னே கொண்டுவந்து இருக்கிறார்கள். 1,000 ஆண்டுகளுக்குப் பிந்தைய தமிழனும் ஈழத்து இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில், அழியாப் புகழுடன் இந்த நினைவு முற்றம் எழுந்து நிற்கப்போகிறது. முஸ்லிம்களுக்கு மெக்காவைப் போல, கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேமைப் போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வந்துசெல்லும் ஓர் இடமாக இது இருக்கப் போகிறது!'' என்று உறுதியோடு சொன்னார்.
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் கோரத்தை நினைவூட்டும் இந்த முற்றத்தில், சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் சிந்திய ரத்தம் தோய்ந்த மண்ணும் வைக்கப்பட இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பித்த ஒருவர் எடுத்து வந்த மண், ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை நினைவிடத்தில் வைக்கமுடியாதபடி திடீர் பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதால், அதை ரொம்பவும் சிரத்தை எடுத்துப் பாதுகாத்து வைத்து இருக்கிறார்களாம்!
போராடி மடிந்த ஈழத் தமிழ் மக்களுக்கு, தமிழகத்தின் கண்ணீர் அஞ்சலி!
- இரா. தமிழ்க்கனல்
படங்கள்: கே.குணசீலன்                                                            thanks vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக