மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 1 நவம்பர், 2013

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு விடுத்திருக்கும் அழைப்பு

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு விழா... தமிழர்கள் அனைவரும் அணி திரள வேண்டும் - சீமான் அழைப்பு


மாவீரர் மாதமான நவம்பர் மாதத்தில் வருகிற 8,9,10 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாகவும், குருதி தோய்ந்த ஈழத்தின் விடுதலைப் போரை ரத்தமும், சதையுமாக நினைவு கூர்கிற வகையிலும் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருந்தமிழர்.அய்யா.பழ.நெடுமாறன் தலைமையில் திறக்கப்பட இருக்கிறது. முதுபெரும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், பலதுறை அறிஞர்கள் என அனைவரும் ஒன்று சேர கூட இருக்கிற இந்த மாபெரும் வரலாற்று நிகழ்வில் தமிழராய் பிறந்த ஒவ்வொருவரும் அணி திரள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஈழ விடுதலைக்காக களமாடி விதையாய் புதைந்திருக்கிற மாவீரர்களின் ஓவியங்கள், தமிழ் காக்க உயிரை துச்சமென மதித்து களமாடிய மொழிப்போர் ஈகிகளின் உருவங்கள், தமிழ்மொழி வாழ.. உயிர் உருக்கி உழைத்த தமிழறிஞர்களின் புகைப்படங்கள், 2009 ல் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட தமிழர்களின் துயரமும், குருதியும் படிந்த சிற்பங்கள் என தமிழினத்தின் மாபெரும் வரலாற்று சாட்சியமாக விளங்க இருக்கின்ற முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெருமதிப்பிற்குரிய தமிழர்கள் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா.பழ.நெடுமாறன், புதியபார்வை இதழின் ஆசிரியர்.முனைவர்.ம.நடராசன் ஆகியோரின் கடும் முயற்சியினால்..அளவற்ற உழைப்பினால் உருவாகி இருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி முழுமையாக பங்கேற்கிறது. தமிழர்கள் அனைவரும் கூடுவோம் தஞ்சையில்..

என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இதையே என் அழைப்பாகவும், வேண்டுகோளாகவும் கருதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விற்கு வருகைதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

1 கருத்து: