மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 18 மே, 2011

முடிந்து விட்டதா....?


முடிந்து விட்டதா....?
பதுங்கு குழிக்குள்ளேயே
பறித்தெடுக்கப்பட்ட
தாயின் முலையில்
பாலுக்காய் ஏங்கிய
பச்சிலங் குழந்தை..

வெற்றிலை மென்று
வெதும்பிய கண்களோடு
எறிகணை வீச்சில்
பறித்தெடுக்கப்பட்ட
வயோதிப மாது கூடவே
அவளுக்குத் துணையாய்
நின்ற கைத்தடி
முறிந்தருகில்....

செயற்க்கைக் காலிலும்
செல்லடிபட்டுச்
சிதறிக்கிடந்த உறவுகள்..

கருத்தாங்கிய மழலை
தாய்மண் தொடுமுன்
கிழித்தெறியப்பட்ட
எறிகணைக் காயம்..

பக்கத்தில் செல்விழ
பதுங்கு குழிக்குள்
படுக்கையோடு
மாரடைப்பால் இறந்த
என் தாத்தா...

வெள்ளை உடுப்பினில்
செங்குருதிபடியச்
சிதறிக்கிடந்த
என் தங்கை....

வைத்தியசாலையில்
காயத்துக்கு மருந்து
கட்டி முடிக்குமுன்பே
கிபீர்த் தாக்குதலில்
கொல்லப்பட்ட
உறவுகள்.....

வெட்டைவெளியில்
கொட்டில் அமைத்து
வெதும்பி வாழ்ந்த வழ்க்கை
முற்றுபெற்றுவிட்டதா
முள்ளிவாய்க்கால் மண்ணுடன்
எம்துயரம்...........?

BY: வன்னிச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக