மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 18 மே, 2011

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!




ஊர்தாளி அறுத்த கதை
உறவு மானம் பறித்த கதை
என் தமிழர் ரத்தம் குடித்த கதை
இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ;

ஈழ-மது மலரும் மலரும்
என் பாட்டன் மண்ணில் உறவுவாழும்
காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா
உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா;

ஊருவிட்டு; வந்தவன் நீ
வீடு புகுந்து; தின்னவன் நீ
சோறு தின்ன மிச்சதுக்கு மண்ணை சேர்த்துத் கொண்டதெல்லாம்
ஊருக் கண்ணில் குத்துதே; உன் தலையெழுத்தா மாறுதே;

முள்ளிவாய்க்கால் முடிவுடா
உன் கொட்டம் அடங்கும் கணக்குடா
நீ தொட்ட பெண்கள் அத்தனையும் விட்ட சாபம்; சாப(ன்)டா
அவள் ரத்தம் சுத்தம் பாருடான்னு; பறக்கும் வெற்றிக் கொடி காட்டு(ன்)டா;

கர்ப்பிணிய கிழிச்சியே
குழந்தை காலை தலையை உடைச்சியே
வயசான கிழத்தைக் கூட வீழும்வரை அடிச்சியே
என் மானத்தி மானம் பரப்பி தமிழர் புகழை கெடுத்தியே;

ஒவ்வொன்னா வீழுது
உன் கிரிடம் சாயப் போகுது
கொள்ளும் களியும் தின்னும் போது
எங்க அலறல் சப்தம் புரியு(ன்)டா;

நீதி யொன்று உண்டுடா
உண்மை யென்றும் வெல்லு(ன்)டா
விட்ட சொட்டு ரத்தம் கூட -
எம் விடுதலையா முளைக்கு(ன்)டா;

எம் மடியில் கைய வச்சவன்
காம ரத்தம் குடித்தவன்
எல்லோரும் வாங்கடா, கதற கதற உருப்பறுத்த
கையாலயே இனி சாவுடா;

கத்தி கத்தி அழுதோமே
ஈ மொய்க்க கிடந்தோமே
முள்ளுக் கம்பி பின்னாலே எம்
வரலாறை புதைச்சோமே;

தொட்ட இடம் குத்துச்சே
தட்டு தூக்கி நின்னுச்சே
ராஜபாட்டை ஆண்ட மக்கள் தெருத்தெருவா அலஞ்சிச்சே
வீழ்ந்த நெருப்பில் கருகி கருகி மொத்த இனமும் அழிஞ்சிச்சே
அத்தனைக்கும் பதிலுடா; எம் மக்கள் ஈழம் வெல்லு(ன்)டா!!

வித்யாசாகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக