மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 12 மார்ச், 2011

எல்லா நேரமும் நல்ல நேரம்!

 எல்லா நேரமும் நல்ல நேரம்!
தீரஜ்லால் (செயலர் - சோனா பொறியியல் கல்லூரி)

தெரியாதவிஷயங்களைத் தெரிந்துகொள்ளும்போது மாணவராக வும், தெரிந்த விஷயங்களைச்சொல்லிக் கொடுக்கும்போது பேராசிரியராகவும் மாறவேண்டும் என்பதை கலாம்அவர்களிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.

எங்கள்கல்லூரிக்கு வருகை தந்த கலாம், எங்கள் மாணவர்கள் "இஸ்ரோ'வுக்காகதயாரித்துக் கொடுத் திருந்த பிரஷ்லெஸ் டி.சி. மோட்டார்கள் பற்றி மிகுந்தஆர்வத்தோடு கேட்டறிந்தார். சேட்டிலைட் பாதையை மாற்றும் கருவியைகண்காணிக்கும் வகையில் பிரஷ்லெஸ் டி.சி.மோட்டார்களை தயாரித்திருந் தார்கள்எங்கள் மாணவர்கள். மாபெரும் விஞ்ஞானி, முன்னாள் குடியரசுத்தலைவர் என்கிறஎண்ணம் துளியும் இல்லாமல் எங்கள் மாணவர்களிடம் தன் சந்தேகங்களைக் கேட்டுதெரிந்துகொண்டார் டாக்டர் கலாம்.

மாணவர்களுடன்கலாம் உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சிலர் ""விழாவுக்கான நல்லநேரம் முடியப்போகுது சார்'' என்று அவரிடம் சொன்னார்கள். ""எல்லா நேரமும்நல்ல நேரம்தான் சார்'' என்றபடி தன் உரையாடலை தொடர்ந்தார். இறைநம்பிக்கைஉடையவராக இருந்தாலும் மூடநம்பிக்கை இல்லாதவராக இருந்தார் கலாம்.

தாங்களேபரிமாறிக்கொள்ளும் வகையில் "பஃபே' உணவு ஏற்பாடு செய்திருந்தோம். எவ்வளவோவேண்டிக்கொண்டும் விடாமல் தனக்கான உணவை தானே போய் எடுத்துக்கொண்டார்.அதேபோல, எங்கள் கல்லூரி மூலம் தொழிற்பயிற்சி மேற்கொள்ளும் கிராமப்புறகுழந்தைகளுடன் அவர்களுக்கு நிகராக கீழே அமர்ந்து பேசிஉற்சாகப்படுத்தினார். அந்தக் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்கமுடியாது. பிறகு அந்தக் குழந்தைகளை பார்க்க கிராமங்களுக்கு சென்றபோது என்கையைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள். டாக்டர் கலாமை நேரில்பார்க்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்ததற்கே என்னை கொண்டாடினார்கள் என்றால்கலாம் மீது அவர் களுக்கு எவ்வளவு பாசம் இருக்கும் என்பதைபுரிந்துகொள்ளலாம். எளிமை தரும் உயர்வை டாக்டர் கலாமிடம் கற்றுக்கொண்டமாணவர்களில் நானும் ஒருவன்.
 
 
 
 
 
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக