மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 25 டிசம்பர், 2010

மரங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

 மரங்கள் வெறும் மரணமென்ற சொல்லாக..

குருதி வடிக்கும் கண்களின்
வருத்தம் புரியா உலகமிது;
நின்று யோசித்து நிமிர்கையில் – காலம்
அதோ எங்கோ போகிறதே….!!

சுதந்திரம் விடுதலை என்று கேட்ட வாய்க்கு
ரத்த காட்டாறும் சொட்டு ஆறுதல் கண்ணீருமே மிச்சமா?
சோர்ந்து போகாத ஒரு இனத்தின் கூட்டம் உலகமெலாம்
பரவி இருந்தும், மௌனத்தில் மூழ்கியதேனோ?

சொல்லி அடித்த பரம்பரைதான்
புது ரத்தம் தேடி – அலைகிறதோ;
உயிர் செத்து மடிந்த சேதி கேட்டும்
சுடும் கோபம் விடுத்து மரமானதுவோ?!!

யோ; மரம் கூட ஆயுதமானது
இந்த மனிதர் ஏனோ மனிதமிழந்தார்,
கோபம் துறந்தார், குழந்தை கண்கீறி ‘கிழவி உடல் அறுத்தும்
எல்லாம் சகித்தாரே????????!!!!!!!!!!!!!!!

றையே!!!!!! இதில் ஏனோ நீயும் குருடானாய்
நீ இல்லையென்று முழங்கவும் இச்செயலால் ஆளானாய்
உனை வாரி இறைத்து மண்ணென சொல்லுது மனமும்
உன் கால் பிடித்தே அழுகிறது தினமும்;

ருப்பு ஜூலை, கீழ் வெண்மணி அவலம்
செஞ்சோலை கொடூரம், முள்ளிவாய்க்கால் படுகொலை
மாவீரர்களின் நினைவு நாட்கள் என இன்னும்
எத்தனை எத்தனை கருப்பு நினைவுகளில்; வாழத் தகுமோ அம்மக்கள்??!!

லகெல்லாம் செய்தியாகி, கொஞ்சம் உணர்வு பொங்கி கவிதையாகி
இத்தனை பேர் மாண்டார்கள், இப்படி ஓர் துயிலம் அழிக்கப் பட்டது
இப்படி ஒரு கொடூரன் இருந்தான் என்று வரலாறு சொல்ல மட்டுமே
இத்தனை உயிர்களின் பலியும், காலம் சுமந்த போராட்டமுமா????

ல்லை இல்லை; காலத்தின் கண் மூடப் படவில்லை
அநீதிக்கான இயற்கையின் தண்டனை கிடைத்தே தீரும்,
கடவுள்; அம்மக்களின் விடுதலை தேசத்து நிம்மதியில்
கண் திறப்பார்’ எனில் – நானும் நம்புகிறேன், ஈழம் மலரும்!!
———————————————————————–
வித்யாசாகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக