மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 16 மார்ச், 2013

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருக



  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த இராசபக்சே மற்றும் கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும்  ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இவற்றுக்கான
 தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிய வேண்டுமென்றும் மாணவர்கள் கடந்த 4 நாள்களுக்கு மேலாக அமைதியான வழியில் போராடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டினிப் போராட்டம்  மாணவர்களால் நடத்தப்படுகிறது.
அமைதியாக தங்கள் கல்லூரி வளாகங்களுக்குள்ளிருந்து போராடும் மாணவர்களின் போராட்ட வேகத்தைத் தணிக்கும் வகையில் கல்லூரிகளும் பள்ளிகளும் திடீரென மூடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அறவழியில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் நிற்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
மாணவர் போராட்டக் குழுவின் சார்பில் வருகிற 20ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தப் போவதாக  அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவாக கட்சி வேறுபாடின்றி அணிதிரண்டு பங்கேற்கும்படியும் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக