மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 14 ஏப்ரல், 2011

அன்னா ஹஸாரே (எ) இந்தியன் தாத்தா


சமஸ்
படம் : பொன்.செந்தில்குமார்
ஃபக்கீர்
 
- ந்த அரபு வார்த்தைக்கு, 'சொந்த பந்தங்களோ, சொத்துப் பத்துகளோ அற்றவன்’ என்று பொருள். அன்னா ஹஸாரே இப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். இன்று இந்த ஃபக்கீருக்குப் பின் இந்திய தேசமே திரண்டு நிற்கிறது. காந்தி இறந்து 63 ஆண்டுகளுக்குப் பின், சத்யாகிரகமும் உண்ணாவிரதமும் மீண்டும் உலகத்தின் பாடு பொருள் ஆகி இருக்கின்றன. டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி, சர்வதேச கவனத்தைத் தன் பால் இழுத்திருக்கிறது. மும்பையின் 'கேட் வே ஆஃப் இந்தியா’ பகுதியில் அன்னாவுக்கு ஆதரவாக முழக்கங்கள். ஆமதாபாத்தில் அவருடைய போராட்டத்தை ஆதரித்தும், அரசை எதிர்த்தும், வீடுகளில் கறுப்புக் கொடிகள் பறந்தன. ஜெய்ப்பூரில் பிரமாண்டமான ஆதரவு ஊர்வலம். அன்னாவுக்கு ஆதரவு தெரிவிக்க முனைந்தவர்கள் மெரினா கடற்கரையில் மௌனமாகக் குழுமி நின்றார்கள். கோவையில் ஆயிரக்கணக்கானோர் கைகளில் மெழுகுவத்திகள் ஏந்தி அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்கள். பாட்னாவில் சிறைக் கைதிகள் உண்ணாவிரதம் மூலமாக ஆதரவு தெரிவித்தார்கள். அன்னாவுக்கு ஆதரவான 'மிஸ்டு கால் இயக்கம்’ தொடங்கப்பட்டபோது, '022 - 61550789’ என்ற எண் நாட்டின் மிக பிஸியான எண்ணாக மாறியது. அவரைப்பற்றி சுமார் 60 லட்சம் குறுஞ்செய்திகள் 'டிவீட்’டப்பட்டன. ஃபேஸ்புக்கில் லட்சோப லட்சம் பேர் அவரைப் பின்தொடர்ந்தார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் சென்ற வாரம் அன்னா பெயரை உச்சரித்தது!
அன்னா ஹஸாரே... ஊழலுக்கு எதிரான இந்தியாவின் புதிய அடையாளம்!
டந்த மக்களவைத் தேர்தல் சமயம். 'ஊழல்... ஊழல்!’ என்று கூவிக்கொண்டே ஊழல் பணத்தில் எல்லோரும் திளைத்துக்கொண்டு இருந்த தருணம். அன்னா தீவிர யோசனையில் இருந்தார். அவருடைய சகாக்கள் நாடு முழுவதும் உள்ள நேர்மையான அதிகாரிகளிடமும் சமூகச் செயல்பாட்டாளர்களிடமும் ஆலோசனை நடத்தினர். அனைவரின் ஆலோசனைகளும் யோசனைகளும் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்றுதான்... ஊழலை ஒழிக்க, வல்லமை மிக்க ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்! அன்னா நிறைவேற்றக் கோரி போராடிக்கொண்டு இருக்கும் 'லோக் பால் மசோதா’வுக்கான மாதிரி இப்படித்தான் உருவானது. சாந்தி பூஷன், பிரஷாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே, கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், அர்விந்த் கேஜ்ரிவால் எனப் பலருடைய உழைப்பும் முனைப்பும் இந்த நோக்கத்தைச் சாத்தியப்படுத்தும் எரிபொருளாகத் திகழ்கின்றன!
ஊழல் புகார் என்றால், பிரதமரே ஆனாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வழக்குப் பதிய உத்தரவு இட வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உச்சபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படி ஓர் அதிகாரம்கொண்ட தன்னாட்சி அமைப்பாக 'லோக் பால்’ உருவானால் எப்படி இருக்கும்? அப்போதுகூடவா ஊழலை ஒழிக்க முடியாது? - அன்னா திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி இது. 'லோக் பால்’ மசோதாவுக்கான மாதிரியாக, அவருடைய குழுவினர் தயாரித்த 'ஜன் லோக் பால்’ மசோதா இவற்றையெல்லாம்தான் பரிந்துரைக்கிறது. ஆனால், அன்னாவின் கனவு சாத்தியமாவது அத்தனை எளிது அல்ல என்பது சுடும் நிதர்சனம்!
இந்திய அரசியல் வர்க்கம் 43 வருடங்களாக முடக்கிப்போட்டு இருக்கும் அந்த மசோதா, 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது அது அறிமுகப்படுத்தப்படுவதும், மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படுவதும், அதன் பரிந்துரைகளோடு தாக்கல் செய்யப்படுவதற்குள் காலாவதி ஆகிவிடுவது மாக இதுவரை 10 முறை தாக்கல் செய்யப் பட்டு இருக்கிறது அந்த மசோதா. ஆனால், எந்த அரசும் அந்த மசோதாவை நிறைவேற்ற விரும்ப வில்லை!
இத்தனைக்கும் அரசாங்கம் உருவாக்கி இருக்கும் மசோதா, பல் இல்லாத பாம்பு. அரசினால் முன்வைக்கப்படும் லோக் பால் மசோதாவின் படி, ஓர் ஊழல் தடுப்பு அமைப்பு உருவாக்கப்பட்டால், அதற்கு ஓர் ஆலோசனைக் குழுவுக்கான அதிகாரம் மட்டுமே இருக்கும். ஒரு விவகாரம்பற்றி புகார்கள் ஏதும் இன்றி, தானாக விசாரிக்கும் அதிகாரம்கூட அதற்கு இல்லை. தவிர, பொதுமக்களிடம் இருந்து புகார் களைப் பெறும் அதிகாரமும் கிடையாது. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவைத் தலைவரோ அளிக்கும் புகார்களை மட்டுமே விசாரிக்க முடியும். காவல் துறை நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரமும் கிடையாது. ஊழல் குற்றவாளி என்று நிரூபிக்கப்படுவோருக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம். அவ்வளவே!
பெயர் அளவிலான இப்படி ஓர் அமைப்பை உருவாக்கவே நம்முடைய அரசியல்வாதிகள் தயாராக இல்லை. இப்போது அன்னா கேட்பதோ, முழு அதிகாரம் மிக்க ஓர் அமைப்பு. எப்படி ஒப்புக்கொள்வார்கள்? அதுவும் இந்த மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்பில் நேர்மையாளர்களுக்குச் சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் அன்னா.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அன்னா பேசினார். 'ஜன் லோக் பால்’ மாதிரி மசோதாவை அவருடைய 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த சகாக்கள் அரசிடம் ஒப்படைத்தார்கள். அன்னாவுக்கு நம்பிக்கை தருவதுபோலவே எல்லாமும் நடந்தன. ஆனால், வழக்கம்போல கபட நாடகம் ஆடியது இந்திய அரசு. மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்புப் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்க வில்லை. வெறுமனே கோரிக்கைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித் தது. நொறுங்கிப்போனார் அன்னா!
உண்ணாவிரத முடிவோடு ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்றபோது அவர் கேட்டார், ''பிரதமருக்கு பிரஷாந்த் பூஷனோ, சந்தோஷ் ஹெக்டேவோ நேர்மையாளர் களாகத் தெரியவில்லை. மகாராஷ்டிரத்திலேயே அதிகமாக நிலம் வைத்திருக்கும் சரத் பவார்தான் பொருத்தமானவராகத் தெரிகிறார். சரத் பவார் தலைமையில் ஊழலுக்கு எதிராக ஒரு குழு. இந்தக் குழு தயாரிக்கும் மசோதா எப்படி இருக்கும்?''
அரசு முதலில் இந்த உண்ணாவிரதத்துக்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை. பிரதமர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி, ''அன்னாவுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?'' என்று கேள்வி கேட்டது. ஆனால், நாடெங்கும் பல்கிப் பெருகிய மக்கள் ஆதரவு, நிலைமையைத் தலை கீழ் ஆக்கியது. குழுவின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினார். தொடர் போராட்டத்தின் விளைவாக அன்னாவின் அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாகக் கூறி, குழுவில் சரிபாதி இடங்களை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்து அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு.
நிச்சயம் இந்தியாவில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மைல் கல் முத்திரை இது!
  ஒருபுறம் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கடுமையான விமர் சனங்களையும் எதிர்கொள்கிறது. 'இதெல்லாம் ஒரு போராட்டமா?’ என்பதில் தொடங்கி... இந்த ஒரு மசோதா, இந்தியாவை ஊழல் அற்ற நாடாக மாற்றி விடுமா என்பது வரை!
எந்த ஒரு சமூக மாற்றமும் மக்களிடத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். ஒரு குடிமைச் சமூகத்தில் எல்லா வகையினருக்கும் இடம் உண்டு. ஏ.சி அறையில் பர்கர் கொரித்துக்கொண்டு 'ஃபேஸ்புக்’கில் கமென்ட் அடிப்பவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்பதற்கான பதில்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரதிபலிக்கின்றன.
மக்கள், அன்னா ஹஸாரே போல உண்ணாவிரதம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு எதிரான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த இந்தப் போராட்டம் ஒரு வாசலைத் திறந்து இருக்கிறது.
இந்த மசோதா அப்படியே நிறைவேறுமா, நேர்மையான ஓர் அதிகாரம் மிக்க அமைப்பு உருவாகுமா, அது அரசியல்வாதிகளைத் தண்டிக்குமா, நம் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குமா... எல்லாமே கேள்விகள்தான். ஆனால், அப்படி ஓர் அமைப்பு உருவாகுமானால், வெளிப்படையான நிர்வாக அமைப்புக்கு நிச்சயம் அது முக்கியமான பங்கு அளிக்கும்.
அன்னா தன் சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியபோது சொன்னார், ''இதுதான் முடிவென்றோ, தீர்வென்றோ நான் நினைக்கவில்லை. பிரச்னை இருக்கிறது. தீர்க்கப்பட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதற்கான தொடக்கப் புள்ளி நான். அவ்வளவுதான். சரி, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?''
- தொடர்வோம்...

யார் இந்த அன்னா ஹஸாரே?
மகாராஷ்டிர மாநிலம், பிங்கூர் கிராமத்தில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மூத்த பிள்ளை ஹஸாரே. ஏழாம் வகுப்பைத் தொடரவே பொருளாதாரச் சூழல் அனுமதிக்கவில்லை. ஹஸாரேவின் 12 வயதில், அவருடைய குடும்பம், பூர்வீக நிலம் இருந்த ராலேகான் சித்திக்கு இடம்பெயர்ந்தது. கொஞ்ச காலம் காய்கறிக் கடை வேலை. அப்புறம், ராணுவத்தில் சேர்ந்தார்.

வங்கதேசப் போரின்போது, பாகிஸ்தான் விமானப் படையின் தாக்குதலில் இவருடன்  வந்தவர்கள் சிதைந்துபோக, அதிர்ஷ்டவசமாக ஹஸாரே மட்டும் தப்பினார். வாழ்வைத் திருத்தி அமைக்கும் கேள்விகள் ஹஸாரேயின் மனசாட்சியைப் புரட்டியது இந்தக் காலகட்டத்தில்தான்.
மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், வினோபாபா பாவே ஆகியோரின் புத்தகங்கள் அவருடைய மன எழுச்சிக்கு வழிகாட்டுதலாக அமைந்தன. ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊர் திரும்பினார் ஹஸாரே.
வறண்ட பூமியான ராலேகான் சித்தியை, மக்கள் பங்கேற்புடன் பாசனக் கட்டமைப்புகளை உருவாக்கி, தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றினார். மழை நீர் சேகரிப்பு, சிறு அணைத் திட்டங்கள், சுய முன்னேற்றத் திட்டங்கள் என்று நாட்டின் முன்மாதிரி கிராமமாக ராலேகான் சித்தி உருவெடுத்தது. ஒரு சாதாரண மனிதன் வரலாற்று நாயகனாக உருவெடுத்த தருணம் அது!

ஏன் நமக்கு 'லோக் பால்' வேண்டும்?
சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் 28.5 லட்சம் கோடி சட்ட விரோதமாகப் பதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 22.5 லட்சம் கோடி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்தப் பணத்தை நம்மால் மீட்க முடியாது!
 ஒரு சாதாரண தொழிலாளியாக இருந்த மதுகோடா, ஜார்கண்ட் முதல்வரானதும் உலகெங்கும் 1,800 வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் அளவுக்குப் பெரும் பணக்காரர் ஆனார். 4,000 கோடி அளவுக்கு அவர் பண மோசடி செய்திருப்பதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. ஆனாலும், அவர் தப்பிக்கிறார்!
 இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழல் '2ஜி’ அலைக்கற்றை முறைகேடு. நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய இந்த ஊழலின் சூத்திரதாரியான ஆ.ராசா, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்ற பின்னும் 400 நாட்கள் வரை மத்திய அமைச்சர் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தார்!
 நாட்டிலேயே 'லோக் ஆயுக்தா’ சிறப்பாகச் செயல்படும் மாநிலமான கர்நாடகத்தில், வெட்டி எடுக்கப்படும் கனிமங்களில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானவை சட்ட விரோதமான வகையில் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் எஃகு மட்டும் இப்படி 35 லட்சம் டன் எடுக்கப்பட்டது. இதன் சூத்திரதாரிகள் அம்மாநில அரசின் செல்வாக்கு மிக்க ரெட்டி சகோதரர்கள். ஆனால், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
''அதிகாரம் அற்ற அமைப்பில் இருப்பதில் பிரயோஜனம் இல்லை!'' என்று கூறி பதவியில் இருந்தே விலக முடிவெடுத்தார் 'லோக் ஆயுக்தா’ நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.
இவை அவ்வளவுக்கும் காரணம், ஊழலை ஒழிக்க இந்தியாவில் சுய அதிகாரம் மிக்க அமைப்பு இல்லை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக