மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 27 செப்டம்பர், 2012

பிரபாகரனின் இடத்தை யாராலும் நிரப்பப்படமுடியாது: - 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஹரிகரன்


தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது இடம் யாராலும் நிரப்பப்பட முடியாதது என்று இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான 'றோ'வின் முன்னாள் பணிப்பாளர் கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் என்ற தனிமனித ஆளுமை ஈழப்போராட்டத்தில் பெரும் சரித்திரமும், வீரத்தின் அடையாளமும் ஆகும் என்ற கருத்தியல் உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழர்கள் மத்தியில் மேலோங்கி வருகையிலேயே, கேணல் ஆர்.ஹரிகரன்னின் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேணல் ஆர்.ஹரிகரன் கிட்டத்தட்ட மூன்று பத்தாண்டுகளாக இராணுவப் புலனாய்வு சிறப்பு அதிகாரியாக பங்களாதேஸ், மியான்மார், சிறிலங்கா போன்ற நாடுகளில் பணியாற்றிய அதேவேளையில், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகள் போன்றவற்றை முறியடிப்பதிலும் பங்காற்றியுள்ளார்.
1965ல் குச் என்ற இடத்தில் இடம்பெற்ற இந்திய-பாகிஸ்தான் போர், 1971ல் தற்போதைய பங்களாதேசான கிழக்கு பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கை, வடக்கு கிழக்கு மாநிலங்கள், பங்களாதேஸ் மற்றும் சிறிலங்கா ஆகியவற்றில் கிளர்ச்சிமுறியடிப்பு நடவடிக்கைகளிலும் கேணல் ஆர்.ஹரிகரன் பங்கெடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக