மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறைபதம் எய்தினார்.

 கடந்த பல ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, இலங்கை இராணுவத்தின் சிறையில் சிக்கித் தவித்து நோய்வாய்பாட்டு இருந்த தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இன்று( ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.30 மணியளவில் இறையடி எய்தியுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இன விடுதலைப் போராளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் விடிவெள்ளியாக, விடுதலையின் குறியீடான எங்கள் தேசியத் தலைவரை இந்த மன்ணுக்குத் தந்த என் தாயார் இன்று நம்மிடையே இல்லை. தமிழ் தேசத்தின் தியாகச் சுடராக அவர் இன்று உலகெமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார்.
மானிடத்தின் விடுதலையை நேசிககும் அனைவரின் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும். நாங்க‌ள் வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ க‌ரிகால‌னை நேரில் காட்டிய‌வர் அன்னை.அன்னைக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
விரைவில் இந்த இழி நிலை மாறும். அன்னைக்கு  புரட்சிகர வீர வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்ள வேண்டுகிறேன். . தனது இறுதிக்காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதநேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள்.
எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும், தெருக்கள் எங்கும், சந்து பொந்துகள் எங்கும் அன்னையின் தியாகத் திருவுருவத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும்
      


unarchitamilan
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக