மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011


லகின் பல நாடுகளில் அடுத்தடுத்து வெடிக்கும் புரட்சிகளுக்கு உணவுப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு ஒரு முக்கியக் காரணம் என்பது ஐ.நா. சபையின் அபாய மணி. ஹைத்தி முதல் எகிப்து வரை ஆட்சி மாற்றம் கேட்டு வெடிக்கும் போராட்டங்களுக்கு, பசித்த வயிறுகள் சுரக்கும் அமிலம்தான் எரிபொருள்.

லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட வர்த்தகர்களின் விளையாட்டுக் களமாக விவசாயம் மாறத் துவங்கியபோதே... விவசாயிகளின் முதுகெலும்பும் முறியத் துவங்கிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் தங்கள் நாட்டு விவசாயிகளுக்குத் தாராளமான மானியப் பாதுகாப்பு தருகின்றன. மறுபுறம், 'மானியம் தந்தால், கடன் தர மாட்டோம்' என்று வளரும் நாடுகளுக்குத் தந்திரக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
விதை நெல் தொடங்கி பாசனம் வரை... தொட்டதற்கெல்லாம் விவசாயிக்குத் ததிங்கிணத்தோம்தான். அதையும் மீறி விளைவித்தாலும், 'லாபம் வந்தால் இடைத் தரகர்களுக்கு... நஷ்டம் என்றால் விவசாயிக்கு' என்ற அக்கிரமக் கூட்டு ஒப்பந்தம்தான் இங்கே அமலில் இருக்கிறது. சட்டம் போட்டுக் காக்க வேண்டிய அரசாங்கமோ, இணையதளம் வரையில் உணவுப் பொருள் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறது!
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் ஒரு தற்கொலைத் தொழிலாகப் பார்க்கப்படும் அவல நிலை. நெல் நட்ட வயலில் கல்லை நட்டு மனைகளாகக் கூறு போடும் கொடுமை. ஆள்வோரின் பாராமுகம், சர்வதேசச் சூதாடிகளின் நரித் தந்திரம், பதுக்கல்காரர்களின் கள்ள வியாபாரம்... இத்தனையும் போட்டு அழுத்தியதில் விவசாயத்தை மண் மூடிக்கொண்டு இருக்கிறது. 13-க்கு ஒரு லிட்டர் பாலை உணவு விடுதிக்கு ஊற்றும் விவசாயி, அதே விடுதியில் ஒரு வாய் காபி குடிக்க நினைத்தால் 15 கொடுத்தாக வேண்டிய காலக் கொடுமையை என்னவென்பது!
ஐ.நா. சபையின் எச்சரிக்கையைக் கேட்ட பிறகாவது நமக்கு புத்தி வருமா? பசித்த வயிறுக்கு எகிப்து வேறு... இந்தியா வேறா?
                         

   
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக